குவைத்திலிருந்து 31 பேர் நாடு திரும்பினர்

19 Sep, 2023 | 12:57 PM
image

விசா இன்றி குவைத்தில் நீண்டகாலமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் இவ்வாறு வந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி குவைத்திலிருந்து 33 இலங்கையர்கள் நாடடுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவர்.

அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் நாட்டுக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் இவ்வாறு இலங்கைக்கு வருவதற்காக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் சுமார் 2000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47