மாற்று அரசியல் கூட்டணியில் சு.கவை இணைக்க முயற்சி 

18 Sep, 2023 | 05:46 PM
image

-நமது அர­சியல் நிருபர்-

இலங்­கையின் தேசிய அர­சியல் நகர்­வுகள் நாளுக்கு நாள் பர­ப­ரப்­ப­டைந்து வரு­கின்­றன. இதன் தாக்­கத்தை கட்சி மட்ட அர­சி­யலில் அதிக­மாக உணர முடி­கி­றது. பிர­தான கட்­சிகள் மாற்று அர­சியல் கூட்­ட­ணிகள் மீது ஆர்வம் செலுத்த தொடங்­கி­யுள்­ளன. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன நிகழ்­கால உறுப்­பி­னர்­களை தவிர்த்து ஆளும் கட்­சிக்குள் உரு­வா­கி­யுள்ள மாற்று அர­சியல் கூட்­ட­ணி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை ஒன்­றி­ணைப்­பது குறித்து பேச்­சுக்கள் ஆரம்­பிக்கப்பட்டுள்ளன.

மறு­புறம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் கூட்­ட­ணிக்குள் இருந்த பங்­காளிக் கட்­சி­களை தக்­க­வைத்­துக்­கொள்ளும் முயற்­சி­களை பஷில் ராஜ­பக்ஷ முன்­னெ­டுத்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஜனா­தி­பதி நாட்டில் இல்­லா­த­வொரு சந்­தர்ப்­பத்தில் சில முக்­கிய சந்­திப்­பு­க­ளையும் நகர்­வு­க­ளையும் பஷில் ராஜ­பக்ஷ முன்­னெ­டுத்­துள்ளார். அடுத்த வருடம் முத­லா­வது காலாண்டில் நடத்துவதற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செலவுத் திட்டம் பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் வெற்­றிக்கு சாத­க­மா­ன­தாக அமைய வேண்டும் என்­பது பஷிலின் முத­லா­வது இலக்­காக உள்­ளது.

இத­னூ­டாக ஆளும் கட்­சிக்குள் உரு­வா­கி­யுள்ள மாற்று அர­சியல் கூட்­ட­ணியை நேர­டி­யாக எதிர்ப்­பதும், பொது­ஜன பெர­மு­னவின் அர­சியல் செயல்­பா­டு­களை மீண்டும் தீவி­ரப்­ப­டுத்­து­வ­துமே அவரின் நோக்­க­மாக உள்­ளது. இவ்­வாறு பல்­வேறு அர­சியல் நகர்­வு­களில் நாட்டின் முக்­கிய அர­சியல் புள்­ளிகள் செயல்­படத்தொடங்­கி­யுள்­ளனர். இதற்­கி­டையே ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர் சாகல ரத்­நா­யக்க நல்லூர் தேர்த் திரு­வி­ழாவின் போது தனது நேர்த்­திக்­க­ட­னையும் நிறை­வேற்­றி­யுள்ளார்.

புதிய அர­சியல் கூட்­டணி

ஆளும் கட்­சிக்குள் உரு­வா­கி­யுள்ள புதிய மாற்று அர­சியல் கூட்­ட­ணியின் குரு­நாகல் மாவட்ட குழுக் கூட்டம் கடந்த வாரம் இடம்­பெற்­றது. குளி­யாப்­பிட்டி, ஈரி­யா­கொல்ல பகு­தியில் அமைந்­துள்ள புதிய கூட்­ட­ணியின் செயல்­பாட்டு தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அநுர பிரி­ய­தர்­ஷன யாப்­பாவின் இல்­லத்­தி­லேயே இந்த கூட்டம் இடம்­பெற்­றது.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மீதும் ராஜ­பக்ஷர்கள் மீதும் கடும் அதி­ருப்தி அடைந்­தி­ருந்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் 8 பேர், பிர­தேச சபை தவி­சா­ளர்கள் 7 பேர், உப தவி­சா­ளர்கள் 8 பேர், பிர­தேச சபை மற்றும் நகர சபை முன்னாள் உறுப்­பி­னர்கள் 34 பேர், அநுர பிரி­ய­தர்­ஷன யாப்­பாவின் இல்­லத்தில் இடம்­பெற்ற இந்த கூட்­டத்தில் கலந்து­  கொண்­டி­ருந்­தனர்.

2024ஆம் ஆண்டில் எதிர்­கொள்ள உள்ள தேசிய தேர்­தல்­களை மையப்­ப­டுத்தி கூட்­ட­ணியை வலுப்­ப­டுத்துதல் மற்றும் மக்கள் மயப்­ப­டுத்துதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து இதன் போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்­டுக்­கான வரவு – செலவு திட்­டத்­துக்கு  வழங்­கப்­ப­ட­வுள்ள யோச­னைகள் குறித்தும் கூடுதல் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று 2024ஆம் ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்­டத்தில் புதிய அர­சியல் கூட்­ட­ணியின் யோச­னை­களை உள்­ள­டக்கும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்சா, சுகீஷ்­வர பண்­டார மற்றும் எஸ். அம­ர­சிங்க செயற்­பட்டு வரு­வ­துடன், வரவு – செலவுத் திட்­டத்­திற்­கான புதிய அர­சியல் கூட்­ட­ணியின் யோசனைத் திட்­டத்தை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மஹிந்த அம­ர­வீர வீட்டில் சந்­திப்பு

இதே­வேளை, புதிய அர­சியல் கூட்­ட­ணியின் செயல்­பா­டு­களை அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு செல்­வது குறித்து தீர்­மா­னிக்கும் வகையில், அமைச்சர் மஹிந்த அம­ர­வீ­ரவின் கொழும்பு இல்­லத்தில் விசேட சந்­திப்பு ஒன்று கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது.

புதிய அர­சியல் கூட்­ட­ணியின் செயல்­பாட்டுத் தலைவர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, நிமல் லான்சா, நளின் பெர்­னாண்டோ உட்­பட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில், லசந்த அழ­கி­ய­வண்ண, ஜகத் புஸ்­ப­கு­மார, துமிந்த திசா­நா­யக்க, மியுரு பாஷித லிய­னகே மற்றும் மஹிந்த அம­ர­வீர ஆகியோர் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

புதிய கூட்­ட­ணிக்கு சுதந்­திரக் கட்­சியின் முழு­மை­யான ஆத­ரவை பெறு­வது குறித்து இதன் போது பரந்­துப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும், தயா­சிறி ஜய­சே­க­ரவின் பதவி நீக்கம் தொடர்­பா­கவும் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன.

சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை விமர்­சிக்கும் வகையில் தயா­சிறி ஜய­சே­கர பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார். இதனை அறிந்த பின்­னரே தயா­சி­றியை கட்­சியை விட்டு நீக்­கு­வ­தற்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்தார். தன்னை விமர்­சிப்­ப­வர்­களை அருகில் வைத்­துக்­கொள்ள எந்­த­வொரு தலை­வரும் விரும்­பு­வ­தில்லை என்று நிமல் லான்சா இதன்­போது கூறி­யுள்ளார்.

 ஒரு இடத்தில் அல்ல, பல இடங்­க­ளுக்கும் சென்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடு­மை­யாக தயா­சிறி விமர்­சித்­துள்ளார். அது போதா­தென்று ஜப்­பா­னுக்கு சென்றபோதும் கூட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடு­மை­யாக தயா­சிறி விமர்­சித்­தி­ருந்தார். இதுவே பதவி நீக்­கத்­திற்கு கார­ண­மா­கி­யது என்று மியுரு பாஷி­தவும் குறிப்­பிட்டார்.

தலை­வ­ருக்கு எதி­ராக செயல்­பட்டால் யாராக இருந்­தாலும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள நேரிடும். தலை­மைத்­துவம் பிடிக்­கா­விடின் விலகிச் செல்ல வேண்டும். மாறாக, அங்­கி­ருந்து கொண்டே விமர்­சிப்­பது முறை­யல்ல. அவ்­வாறு செய்தால் கௌர­வத்தை இழக்க நேரிடும் என்று கூறி நளின் பெர்­னாண்டோ கலந்­து­ரை­யா­டலை தொடர்ந்தார்.

இதற்கு மறு­மொ­ழி­ய­ளித்த அமைச்சர் மஹிந்த அம­ர­வீர, 'தயா­சிறி தற்­போது எம்மை கடு­மை­யாக சாடி வரு­கிறார். ஊட­கங்­களும் இது குறித்து என்­னிடம் கேட்­கின்­றன. நான் எத­னையும் கூற­வில்லை. ஏனெனில், அவரின் விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கச் சென்று நாம் தேவை­யில்­லாத நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள நேரி­டலாம்' என்று சுட்­டிக்­காட்­டினார்.

எது­வாக இருந்­தாலும் தலை­மைத்­து­வத்தின் மீது கௌர­வத்­துடன் செயல்­பட வேண்டும். அவ்­வாறு செய்­யா­விடின் பிரச்­சினை ஏற்­ப­டு­வதை தவிர்க்க இய­லாது என்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நியா­யப்­ப­டுத்தும் வகையில் நிமல் லான்சா இங்கு கருத்து தெரி­வித்தார்.

'50 இலட்சம் ரூபா பந்­தயம் குறித்தும் பேசு­கின்­றனர். கம்­பஹா மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் இரா­ஜாங்க அமைச்சர் என்று கூறு­கின்­றனர். நான் என்றால் யாரு­டனும் பந்­த­யத்­திற்கு செல்­ல­வில்லை' என்று லசந்த அழ­கி­ய­வண்ண இதன்­போது கூறி­யுள்ளார்.

சுதந்­திரக் கட்சி - ஐ.தே.க இணைப்பு

'ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைக்கும் வகை­யி­லேயே நாம் செயல்­ப­டு­வ­தாக தயா­சிறி ஜய­சே­கர பிர­சாரம் செய்து வரு­கிறார்' என உரத்த குரலில் துமிந்த திசா­நா­யக்க இங்கு தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த லசந்த அழ­கி­ய­வண்ண, அவ்­வாறு எதுவும் நடக்­காது. இது தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கும் தெரியும். குழப்­பத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே தயா­சிறி போலி­யாக கூறி­வ­ரு­கின்றார் என்றார்.

புதிய அர­சியல் கூட்­ட­ணிக்கு ஏனைய அர­சியல் கட்­சி­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வது தொடர்­பா­கவும் நீண்­ட­நேர உரை­யாடல் மஹிந்த அம­ர­வீ­ரவின் இல்­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டிய பிள­வுகள்

நாட்டின் விவ­சா­யத்­து­றையை மேம்­ப­டுத்து­வது குறித்து ஜனா­தி­பதி தலை­மையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம்­பெற்­றது. இதில் ஜனா­தி­பதி அலு­வ­லகப் பிர­தானி சாகல ரத்­நா­யக்க மற்றும் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உட்­பட அரச அதி­கா­ரிகள் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

சர்­வ­தேச மற்றும் தனியார் துறை­யி­னரின் ஒத்­து­ழைப்­பு­களை பெற்று, விவ­சா­யத்­து­றையை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் இங்கு கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. நாட்டின் விவ­சா­யத்­து­றை­யா­னது தேசிய மற்றும் மாகாண ரீதியில் பிள­வு­பட்­டுள்­ள­தாக இந்த சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தேசிய கொள்­கை­களை தயா­ரிக்கும் போது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்ட வகையில் புதிய சட்­டங்கள் மற்றும் கொள்­கை­களை உரு­வாக்­கு­மாறு பணிப்­புரை விடுத்தார்.

மேலும் காணி மற்றும் காணி உரி­மைகள் தொடர்­பி­லான புதிய கொள்­கைகள் உரு­வாக்கம் குறித்தும் இதன்­போது ஜனா­தி­பதி அதி­கா­ரி­க­ளிடம் கேள்­வி­களை எழுப்­பினார். நாட்டில் காணப்­ப­டு­கின்ற காணி பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்­வு­காணும் வகையில் புதிய கொள்கைள் உரு­வாக்கும் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறும் இதன் போது ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்டார்.

இரா­ஜ­தந்­தி­ரி­களை சந்­தித்த ஜனா­தி­பதி

கியூ­பா­வுக்கு செல்­வ­தற்கு முன்னர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொழும்பில் இரா­ஜ­தந்­தி­ரிகள் சிலரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். ‘அண்­மைக்­கால உயர்­மட்ட விஜ­யங்­களும் அவர்­களின் இந்து சமுத்­திர பிராந்­தியம் சார்ந்த கோணங்­களும்’ என்ற தலைப்பில் பூகோள அர­சியல் வழி­காட்டி என்ற அமைப்­பினால் கடந்த செவ்­வாய்க்­கிழமை கலந்­து­ரை­யா­ட­லொன்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்தக் கலந்­து­ரை­யா­டலின் முடிவில் ஜப்பான், இந்­தியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களின் தூது­வர்கள் மற்றும் உயர்ஸ்­தா­னி­கர்­களை சந்­தித்த ஜனா­தி­பதி, நாட்டின் தற்­போ­தைய பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நிலைவ­ரங்கள் குறித்து விளக்­க­ம­ளித்தார்.

முன்னாள் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மற்றும் ஜனா­தி­பதி அலு­வ­லக பிர­தானி சாகல ரத்­நா­யக்க ஆகிய இரு­வரும் இந்த கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்கும் அர­சியல் ஸ்திர­த்தன்­மைக்­காக அர­சாங்கம் எடுக்கும் முயற்­சி­க­ளுக்கும் தொடர்ந்தும் ஒத்­து­ழைப்­பு­களை இதன் போது கோரிய ஜனா­தி­பதி, சர்­வ­தேச நாணய நிதியம் உட்­பட சர்­வ­தேச அரங்­கு­களில் இலங்­கையின் நலன்­க­ளுக்­காக வழங்­கப்­படும் ஒத்­து­ழைப்­பு­க­ளுக்கும் நன்றி தெரி­வித்தார்.

பிர­த­மரை சந்­தித்த பஷில் ராஜ­பக்ஷ

பஷில் ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆளும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வினர் பிர­தமர் தினேஷ் குண­வர்­த­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இந்த சந்­திப்பு கடந்த புதன்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது. நாட்டின் நடை­முறை அர­சியல் மற்றும் எதிர்­கால தேர்­தல்கள் குறித்து இதன் போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஏகோ­பித்த இணக்­கப்­பாடு காணப்­பட வேண்டும் என்ற விட­யத்தை பஷில் ராஜ­பக்ஷ பிர­த­ம­ரிடம் எடுத்­து­ரைத்­துள்ளார். குறிப்­பாக மக்கள் நலத்­திட்­டங்கள், வாழ்க்கை செலவு அதி­க­ரிப்பால் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிவா­ர­ணங்கள், அரச நிறு­வங்­களின் தீர்­மா­னங்­களில் தொழிற்­சங்­கங்­களின் இணக்­கப்­பாடு, அரச நிறு­வ­னங்கள் மீதான மறு­சீ­ர­மைப்­புகள், அஸ்­வெ­சும போன்ற திட்­டங்கள், சுகா­தார துறைசார் பிரச்­சி­னைகள், தேர்தல் முறைமை மற்றும் உத்­தேச புதிய சட்­டங்கள் ஆகி­ய­வற்றில் ஆளும் கட்சி என்ற வகையில் முழு­மை­யான ஈடுபாட்­டிற்கு அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்தை பஷில் ராஜ­பக் ஷ  தலை­மை­யி­லான குழு பிர­த­ம­ரி­டத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

2024 ஆண்­டுக்­கான வரவு - செலவுத் திட்டம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் திட்­ட­மா­கவே அமை­யப்­பெறும். எனவே பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் வகையில் இந்த வரவு – செல­வுத் ­திட்டம் அமை­யப்­பெற வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் எமது இந்த யோச­னையை ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைக்க எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் இதன்போது பிர­த­ம­ரிடம் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்ற அர­சியல் கூட்­ட­ணியை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லும் தீர்­மா­னத்­தையும் இதன் போது பஷில் ராஜ­பக்ஷ தெரி­யப்­ப­டுத்­தினார்.

சாகர காரி­ய­வசம், நாமல் ராஜ­பக்ஷ, காமினி லொக்­குகே, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ, எஸ்.எம். சந்­தி­ர­சேன மற்றும் சஞ்­சீவ எதி­ரி­மான ஆகி­யோரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

லான்­சாவின் புதிய கட்சி

லிபரல் கட்சி அல்­லது லிபரல் ஜன­நா­யக (டெமோக்­ரட்டிக்) கட்­சியை பாரா­ளு­மன்­றத்தில் தற்­போது சுயா­தீ­ன­மாக செயற்­படும் நிமல் லான்சா குழு­வினர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். லிபரல் கட்சி நான்கு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் 1981இல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நீண்­ட­கால உறுப்­பி­ன­ரான கலா­நிதி சானக அம­ர­துங்­க­வினால் நிறு­வப்­பட்­டது.

1982ஆம் ஆண்டு லிபரல் கட்சி ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருந்து பிரிந்­தது. இலங்­கையில் தாரா­ள­ம­ய கொள்கையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நான்கு வருட முயற்­சி­க­ளுக்குப் பிறகு, குறிப்­பாக அதி­காரப் பர­வ­லாக்­கத்தை ஊக்­கு­விக்கும் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்களை மையப்­ப­டுத்தி 1987ஆம் ஆண்டு கலா­நிதி அம­ர­துங்­க­வினால் தனிக்­கட்­சி­யாக இது பதிவு செய்­யப்­பட்­டது.

1996ஆம் ஆண்டில் கலா­நிதி அம­ர­துங்க கார் விபத்தில் மர­ண­ம­டைந்­ததைத் தொடர்ந்து, பேரா­சி­ரியர் ரஜீவ விஜே­சிங்க லிபரல் கட்­சியின் அர­சியல் தலை­வ­ராக செயல்­பட்டார். கடந்த ஆண்டில் (2022) லிபரல் கட்சி அதன் பெயரை லிபரல் ஜனநாயகக் கட்சி என்று மாற்­றி­யது.

கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ராக கமல் நிஷங்­கவும், பொதுச் செய­லா­ள­ராக அமல் ரந்­தெ­னி­யவும் உள்­ளனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்சா தற்­போது லிபரல் கட்­சியை கையக­ப்படுத்­தி­யுள்ள நிலையில், புதிய நிர்­வாகக் குழு நிய­மிக்­கப்­பட உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நல்லூர் தேர்த் திரு­வி­ழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய சாகல

ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­ச­கரும் ஜனா­தி­பதி பணிக்­கு­ழாமின் பிர­தா­னி­யு­மான சாகல ரத்­நா­யக்க நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் தனது நேர்த்­திக்­க­டனை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்றார்.

நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தின் வரு­டாந்த தேர்த் திரு­விழா கடந்த 13ஆம் திகதி புதன்­கி­ழமை வெகு­வி­மரிசை­யாக இடம்­பெற்­றி­ருந்­தது. 

தேர்த்­தி­ரு­வி­ழா­வன்று அதி­காலை நல்லூர் ஆல­யத்­துக்கு சென்ற சாகல ரட்­நா­யக்க அங்கு இரண்­டரை மணி நேரம் காத்­தி­ருந்து கந்­தனின் வசந்­த­மண்­டப பூஜையில் கலந்­து­கொண்­ட­துடன் தேர் வீதி­யு­லா­விலும் பங்­கேற்­றி­ருந்தார்.12ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை கொழும்­பி­லி­ருந்து தனியார் ஹெலி­கொப்­டரில் தனிப்­பட்ட முறையிலான விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இவர் யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்தார்.

பலாலி விமான நிலை­யத்தில் ஹெலி­கொப்டர் இரவு 7.30 மண­யளவில் தரை­யி­றங்­கி­யுள்­ளது. அங்­கி­ருந்து யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்­றுக்கு சென்ற அவர், பின்னர் அங்­கி­ருந்து நல்லூர் ஆல­யத்­துக்கு அரு­கி­லுள்ள அவ­ரது நண்பர் ஒரு­வரின் வீட்­டுக்குச் சென்று இரவு விருந்­து­ப­சா­ரத்தில் கலந்­து­கொண்­டி­ருந்தார். 

அதன் ­பின்னர் தான் தங்கியிருந்த ஹோட்­ட­லுக்குச் சென்ற அவர் மறுநாள் தேர்த் திருவிழாவன்று அதிகாலை 3 மணியளவில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு சென்றுள்ளார். நல்லூர் ஆலயத்தைப் பொறுத்த  வரையில் அங்கு சகலரும் சமம் என்ற கொள்கையே பின்பற்றப்படுகின்றது. இதனால் முக்கியஸ்தர்களுக்கு அங்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. 

தேர்த் திருவிழாவன்று 6 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேரகாலத்துடன் ஆலயத்துக்குள் செல்லாவிடின் வசந்தமண்டப பூஜையை பார்வையிட முடியாது போகும்.

இதன் காரணமாகவே வேட்டி அணிந்து அதிகாலை 3 மணியளவில் ஆலய வளவுக்குள் வந்த சாகல ரத்நாயக்க குழுவினர் மூன்றரை மணியளவில் ஆலயத்துக்குள் சென்று அமர்ந்துள்ளனர். இரண்டரை மணி நேரம் காத்திருந்து இவர்கள் வசந்த மண்டப பூஜையை பார்வையிட்டு வழிபட்டுள்ளனர்.

சாகல ரத்நாயக்கவின் பாதுகாப்புக்கு சில அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் ஆலயத்துக்குள் அவருடன் வந்திருந்த போதும் அவர்களும் வேட்டி அணிந்து சைவ பாரம்பரியங்களை பேணியிருந்தனர்.

இவ்வாறு பெரும் பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கந்தனின் பூஜையில் கலந்து கொண்டு தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய சாகல ரத்நாயக்க தேர் வீதியுலா வந்தபோது அதிலும் பங்கேற்றிருந்தார்.

தேர் வீதியுலா நிறைவடைந்ததையடுத்து ஆலயத்துக்குள் சென்று அவர், விசேட அர்ச்சனையையும் செய்திருந்தார். இதன் போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனும் பங்கேற்றிருந்தார்.

இதன்பின்னர் நல்லூர் வீதியிலுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் மடத்துக்கும் சென்று சாகல ரத்நாயக்க மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான...

2023-09-29 14:18:11
news-image

பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம்...

2023-09-29 14:00:32
news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22