ஏமாற்றுவதும் ஏமாறுவதும் யார்?

18 Sep, 2023 | 05:33 PM
image

ஆர்.ராம்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் நடை­பெற்று நான்கு வரு­டங்­க­ளுக்குப் பின்னர் உள்­­நாட்டில் பல்­வேறு தரு­ணங்­களில், பல்­வேறு தரப்­பி­ன­ராலும் சுட்­டிக்­காட்­டிய 'அர­சியல் ஆதா­யத்­துக்­கான மிலேச்­சத்­தனம்' என்­கின்ற விட­யத்­தினை அசாத் மௌலானா என்ற தனி­ந­பரை மையப்­ப­டுத்தி சனல்-4 வெளி­யிட்ட காணொளி சர்­வ­தேச ரீதி­யாக பேசு­பொ­ரு­ளாகி­யி­ருக்­கின்­றது.

அதே­நேரம், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டர்க், தனது எழுத்­து­மூ­ல­மான அறிக்­கையில், 'உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும்' என்று கடந்த ஆண்­டு­களில் குறிப்­பிட்­டதைப் போலவே வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தோடு, 54ஆவது அமர்­வுக்­கான கூட்­டத்­தொ­டரை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய பிரதி உயர்ஸ்­தா­னிகர் நாடா அல்-­நஷீஃப் “உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­ட­னான விசா­ரணை அவ­சியம்” என்று சுட்டிக்­காட்­டி­யுள்­ள­மையும் சர்­வ­தேச கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தொடர்பில் சனல்-4 வெளி­யிட்ட காணொ­ளியும், ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வைகள் நீதிக்­கான சர்­வ­தேச விசா­ரணை வலி­யு­றுத்­தலும், உள்­நாட்டில் மீண்டும் பாதிக்­கப்­பட்ட தரப்பின் மத்­தி­யிலும், அர­சியல், பாது­காப்பு, இரா­ஜ­தந்­திர மட்­டங்­க­ளிலும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

குறிப்­பாக, மக்கள் எழுச்­சியால் தப்­பி­யோடி மீண்டும் நாடு திரும்பி இருக்­கு­மி­டமே தெரி­யா­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக் ஷவை ‘மௌனம்’ கலைத்து மறு­த­லிப்பு அறிக்கை வெளி­யி­டு­ம­ள­விற்கு தீவி­ர­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.  

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய சனல்-4 காணொ­ளியும், ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் வலி­யு­றுத்­தலும் ஏக­கா­லத்தில் நிகழ்ந்­த­மையால், ராஜபக் ஷக்கள், “நாம் மீண்டும் எழுச்சி அடைந்து வரு­கின்­மையால் சர்­வ­தே­சத்­திற்கு ஏற்­பட்­டுள்ள ஒவ்­வாமை தான் காரணம்” என்று அர்த்தம் கற்­பிக்க ஆரம்­பித்­துள்­ளார்கள்.

ராஜபக் ஷக்­க­ளையும், ஆட்சி அதி­காரத் தரப்­பி­ன­ரையும் எந்­நே­ரமும் சூழ்ந்­துள்ள முப்­ப­டை­களின் முக்­கியஸ்­தர்­களும், சிங்­கள, பௌத்த தேசி­ய­வா­தி­களும், ஏனைய கூட்­டா­ளி­களும் “2018 உள்­ளூராட்சி தேர்­த­லின்­போதே கோட்­டாவின் வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. 69இலட்சம் வாக்­கு­களைப் பெற்ற கோட்­ட­பா­ய­வுக்கு, வெறும் 6 சத­வீ­த­மாக உள்ள கிறிஸ்­த­வர்­களின் வாக்­கு­க­ளுக்­காக வன்­மு­றையை கையி­லெ­டுக்க வேண்­டி­ய­தில்லை” என்று தர்க்கம் புரி­வ­தற்கு தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும், எதி­ர­ணியில் உள்ள ஏனைய தரப்­பி­னரும், சனல்-4 காணொளி மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள ராஜபக் ஷக்கள் மற்றும் அவர்­க­ளது பங்­கா­ளி­க­ளுக்கு எதி­ரான மனோ­நி­லையை மையப்­ப­டுத்தி ‘சர்­வ­தேச விசா­ர­ணையை' கோரி­ வ­ரு­கின்­றார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குர­லாக இருக்கும் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும், ஏனைய அருட்­தந்­தை­யர்­களும், சிவில் அமைப்­பி­னரும், 'சர்­தேச விசா­ர­ணையை' வலி­யு­றுத்தி வரு­கின்­றார்கள்.

மேற்­படி நிலை­மை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­களைச் சமா­ளிப்­ப­தற்­காக நிறை­வேற்று அதி­கா­ரத்தை தன்­ன­கத்தே கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, “ஓய்­வு­பெற்ற உச்ச நீதி­மன்ற நீதி­ய­ரசர் எஸ்.ஐ. இமாம் தலை­மையில் குழு அமைக்­கப்­பட்டு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படவுள்ளது” என்று தடா­ல­டி­யான அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் உள்ள அனைத்­து­மட்­டங்­க­ளிலும் அடுத்து என்ன நடை­பெ­றப்­போ­கின்­றது என்­பது தொடர்பில் பலத்த எதிர்­பார்ப்­புக்கள் வலுத்­தி­ருக்­கின்­றன. உண்­மையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் விவ­காரம் தற்­போது பல்­வேறு முரண்­ந­கை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அவற்றை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதன் ஊடாக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு பொறுப்­புக்­கூறல், நீதியை வழங்கல் ஆகி­ய­வற்­றுக்­கான நிகழ்­த­கவு எவ்­வா­றி­ருக்கும் என்­பதில் தெளி­வ­டை­யலாம்.

ஆளும் ­த­ரப்பில் கடமை தவ­றி­ய­வர்­களும் பொறுப்­பா­ளி­களும்

இத்தாக்­குதல் சம்­பவம் நிகழ்ந்­த­போது, ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர் மைத்­திரி. பிர­த­ம­ராக இருந்­தவர் ரணில். பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்­தவர் ருவான் விஜ­ய­வர்த்­தன, சட்டம் ஒழுங்க அமைச்­ச­ராக இருந்­தவர் சாகல ரத்­நா­யக்க.

இவர்­களில், தற்­போது ஜனா­தி­ப­தி­யாக ரணில் உள்ளார். அவர் பிர­த­ம­ராக இருந்­த­போது “விடயம் தனக்கு தெரி­யாது” என்று கூறி நழு­வி­யவர் இப்­போது பாது­காப்பு அமைச்­ச­ராக சனல்-4 காணொ­ளியை நிரா­க­ரித்­துள்­ள­தோடு, ஜனா­தி­ப­தி­யாக விசா­ரணை குழுவை ஸ்தாபிக்­க­வுள்­ள­தாக இரு­வேறு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தியி­ருக்­கின்றார்.

அவ­ரது வலது மற்றும் இடது கைக­ளாக, இருக்கும் சாக­லவும், ருவானும் ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­ச­கர்­க­ளாக பத­வியில் உள்­ளனர். அவர்­க­ளுக்கும் அர­சாங்­கத்தின் மீது குறிப்­பிட்­ட­ளவு அதி­கா­ரங்­களை பிர­யோ­கிப்­ப­தற்­கான இய­லுமை உள்­ளது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தில் பங்­கேற்­காது விட்­டாலும், அவ­ரையும், கட்­சியும் ஆட்­டு­விக்­க­வல்­ல­வர்கள் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்­ள­வர்­க­ளா­கவே உள்­ளதால் மைத்­தி­ரியும் 'பகு­தி­ய­ள­வான' அரச தரப்பு பிர­தி­நி­தி­யா­கவே உள்ளார். அசாத் மௌலா­னாவின் வாக்­கு­மூ­லத்தின் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்ட, சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்­தனும் (பிள்­ளையான்) இரா­ஜாங்க அமைச்­ச­ராக உள்ளார்.

ஆகவே, தாக்­குதல் நிகழ்­வதை தடுக்­கா­தி­ருந்­த­வர்­களும், அதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­களும் தற்­போ­தைய நிலையில் ஆளும் அணி­யி­லேயே காணப்­ப­டு­கின்ற நிலையில் உள்­ளக விசா­ர­ணையின் சுயா­தீ­ன­த் தன்­மையும், அது நிறை­வுக்கு வரும் காலத்­தையும் உறு­திப்­ப­டுத்த முடி­யாது.

அதி­கா­ரி­களின் மட்­டத்­திலும் நீடிக்கும் ஆதிக்கம்

சனல்-4 காணொ­ளியால் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தற்­போது அரச புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக பத­வியில் நீடிக்­கின்றார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கு எதி­ரான வழக்கின் முக்­கிய சாட்­சி­யா­ள­ரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன தற்­போது பொலிஸ் நிரு­வாகப் பிரிவின் தலை­வ­ராக உள்ளார்.

தற்­போ­தைய பாது­காப்புச் செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரட்­னவும், முப்­ப­டை­களின் பிர­தானி ஜெனரல் சவேந்­திர சில்­வாவும் ராஜபக் ஷ விசு­வா­சிகள் என்­ப­தற்கு அப்பால் சாதா­ரண சிப்பாய் மீதே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­ட­வர்கள்.

மேற்­ப­டி­யான அதி­கா­ரிகள், தமது அதி­கா­ரத்­தினை திட­மாக பயன்­ப­டுத்தும் நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­ற­போது, விசா­ர­ணைகள் ஆழ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டுதல், சாட்­சி­யங்­களை திரட்­டுதல் உள்­ளிட்ட நடை­முறை செயற்­பாட்டு விட­யங்கள் சாத்­தி­ய­மா­குமா என்ற நியா­ய­மான ஐயப்­பா­டுகள் எழு­கின்­றன.

தேர்தல் பிர­சா­ரத்­துக்­கான பெரும் ஆயு­த­மாகும்

அடுத்து ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான கால­மாக இருப்­பதால் அனைத்துக் கட்­சி­களின் அர­சியல் மேடை­க­ளிலும் சனல்-4 காணொ­ளியும், சர்­வ­தேச விசா­ர­ணையும், பிர­தான பிர­சார ஆயு­த­மாக மாறப்­போ­கின்­றது.

குறிப்­பாக, ஜனா­தி­பதி ரணில் மீண்டும் கள­மி­றங்­க­வுள்ள தீர்­மா­னித்­துள்­ளதால், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு பதி­லாக உள்­ளக விசா­ரணை முன்­னி­லைப்­ப­டுத்தி தென்­னி­லங்கை சக்­தி­களை தன்­பக்கம் ஈர்க்க முனை­வ­தோடு மைத்­திரி, ராஜபக் ஷ தரப்­புக்­களை ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு அல்­லது அமைதி காப்­ப­தற்கு வகு­வ­குப்பார். மேலும், சனல்-4 உள்­ளிட்ட மேற்­குல தரப்­பி­னரின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்து, முப்­படை அங்­கத்­த­வர்­களின் பாது­கா­வ­லான தன்னை வரித்­துக்­கொள்ள முயல்வார்.

மறு­பக்­கத்தில், சஜித்தும், அநு­ரவும், ஜனா­தி­பதி ரணில் மற்றும் ராஜபக் ஷக்கள் உட்­பட தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும், பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்­க­ளையும் ஒரு­நேர்­கோட்டில் இணைத்து உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளையும், சர்­வ­தேச விசா­ரணை மீது அழற்­சியைக் கொண்­டி­ருந்­தாலும் அத­னையும் தமது பிர­சா­ரத்தின் பிர­தான மையப்­பொ­ருட்­க­ளாக வைத்­தி­ருப்­பார்கள். ராஜபக் ஷக்­களோ அல்­லது அவர்கள் சார்பு தரப்­பி­னரே கள­மி­றங்­கினால், எதி­ரணி மற்றும் மேற்­கு­ல­கத்தின் கூட்டில் 'தேசப்­பற்­றா­ளர்­க­ளான' தமது மீள் எழுச்­சிக்கு எதி­ரான பொய் பிர­சாரம் என்று வர்­ணிப்­பார்கள். ஏற்­க­னவே சனல்-4வையும், ஐ.நாவையும் 'ராஜபக் ஷக்­களின் போர் வெற்­றியால் வன்­மத்தைக் கொண்­டி­ருக்கும்' தரப்­பு என்று  தென்­னி­லங்­கையில்  முத்திரை குத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

ஆகவே ராஜபக் ஷக்­களின் மேற்­குல எதிர்ப்பு, தேசப்­பற்­று­வாத பிர­சா­ரத்­தினை ஏற்­றுக்­கொண்டு தேரர்­களும், தேசி­ய­வா­தி­களும் ராஜபக் ஷக்­களின் பின்னால் திரண்டால் ஆகக்­கு­றைந்­தது எதி­ரணி அந்­தஸ்­தை­யா­வது அவர்கள் தக்­க­வைத்துக் கொள்­வார்கள்.

நீதிக்­கான ஏக குரல் விக்கித் தவிக்கும்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நீதிக்­கான ஏக குர­லாக தன்னை வரித்­துக்­கொண்­டுள்ள பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சனல்-4இன் இறுதிப்போர் குறித்த காணொளியை நிராகரித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளியை ஏற்றுக்கொண்டு முரண்நகைக்குள் சிக்கியுள்ள சூழலில், தேர்தல் மேடைகளில் தீவிர பிரசாரங்களின் போது வெளியிடப்படும் கருத்துக்களால் யாரை நம்புவது, யாருக்கு ஆணை வழங்குவது என்று அவரை நம்பியிருக்கும் மக்களை வழிநடத்த முடியாது விக்கித் தவிக்கும் நிலைமையே உருவாகியுள்ளது. இவ்வாறான நிலைமைகளில் முள்ளிவாய்க்கால் உட்பட தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட எத்தனையோ அநீதிகளுக்கான விசாரணைகளும், ஆணைக்குழு அறிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டு பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டு வருவதைப்போன்றதொரு துரதிஷ்டமான நிலையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் நிகழ்ந்தேறவுள்ளது.

ஈற்றில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒரு தடவை பாராளுமன்றில் உரையாற்றும்போது, ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று தண்டனைகள் வழங்கப்படாதிருக்கின்றமை குறித்து விசனப்படும்போது கூறிய “அவர்கள் எல்லாம் ஒரே ஆட்கள் தம்பி” என்ற கூற்றைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07