மறுப்பும் விசாரணையும்

18 Sep, 2023 | 05:33 PM
image

கார்வண்ணன்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் தொடர்­பாக தகவல்களை சனல் 4 ஆவ­ணப்­படம் வெளிப்­ப­டுத்­திய பின்னர், இந்த விவ­கா­ரத்தை இரு­வேறு முறை­களில் அணுக முற்­பட்­டி­ருக்­கி­றது இலங்கை அர­சாங்கம். இது தொடர்­பாக இரு வேறு விசா­ரணைக் குழுக்­களை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்து விசா­ரணை நடத்­து­வது முத­லா­வது அணு­கு­முறை.

சனல் 4 ஆவ­ணப்­ப­டத்தின் முன்­னோட்டம் வெளி­யா­ன­வு­ட­னேயே, அமைச்­ச­ர­வையில் இது ­கு­றித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும், பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு ஒன்றை அமைத்து விசா­ரணை நடத்த முடிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அமைச்சர் மனுஷ நாண­யக்­கார அறி­வித்­தி­ருந்தார்.

ஆனால், அமைச்­ச­ர­வையில் அது­பற்றிக் கலந்­து­ரை­யா­ட­வில்லை என்று ஏனைய அமைச்­சர்கள் சிலர் கூறி­யி­ருந்­தனர்.

அதே­வேளை, பாரா­ளு­மன்­றத்­திலும் தெரி­வுக்­கு­ழுவை அமைத்து விசா­ரணை நடத்தும் யோசனை முன்­வைக்­கப்­பட்ட போது, எதிர்க்­கட்­சி­யினர் அதனை ஏற்றுக் கொள்­ள­வில்லை.

கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் எதுவும் நியா­ய­மான சூழலில் நடக்­க­வில்லை என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

அதனால் தான் சர்­வ­தேச விசா­ர­ணையை கோரினர். இந்தச் சூழலில் சனல் 4 குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஓய்­வு ­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் எஸ்.ஐ. இமாம் தலை­மையில் ஜனா­தி­பதி விசா­ரணைக் குழுவை நியமித்துள்ளார்.

அதா­வது, ஒரு­பக்கம் தெரி­வுக்­குழு விசா­ரணை, இன்­னொரு பக்கம் ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு- இந்தக் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை அர­ச­த­ரப்­பினால் அதி­கா­ர­பூர்­வ­மாக செயற்படுத்தப்படும் விடயங்கள்.

ஓய்­வு­பெற்ற, உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்க ஜனா­தி­பதி தீர்­மா­னித்­தி­ருப்­ப­தான அறி­விப்பு வெளி­யா­கிய அன்று பாது­காப்பு அமைச்­சினால் ஒரு அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

சனல் 4 வெளி­யிட்­டுள்ள பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை அர­சாங்­கத்தின் சார்­பாக பாது­காப்பு அமைச்சு திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரிப்­ப­தாக அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஜனா­தி­பதி என்ற முறையில், ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் தலை­மையில் விசா­ர­ணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்க முடிவு செய்­தி­ருந்த நிலையில், அதே ஜனா­தி­ப­தியின் கீழ் உள்ள பாது­காப்பு அமைச்சு, அர­சாங்­கத்தின் சார்பில் சனல் 4 குற்­றச்­சாட்­டு­களை மறுத்­தி­ருக்­கி­றது. இது முரண்­பா­டா­ன­தாக உள்­ளது.

சனல் 4 குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பாடு அர­சாங்­கத்­துக்கு உள்­ளது. எந்தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­படும் போதும், அதனை நிரா­க­ரிப்­பது அர­சாங்­கத்­தி­னதும், பாது­காப்பு அமைச்­சி­னதும் வழக்கம் என்­பதால், பாது­காப்பு அமைச்சின் இந்த மறுப்பு அறிக்­கையை எவரும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

ஆனால், மறுப்­ப­றிக்கை வெளி­யிட்ட பாது­காப்பு அமைச்சும், குற்­றச்­சாட்டை விசா­ரிக்க ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மிக்க ஜனா­தி­பதி முடிவு செய்­தி­ருப்­ப­தாக அறி­வித்த ஜனா­தி­பதி ஊடகப் பிரிவும், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கீழ் இயங்­கு­கின்ற இரு­வேறு கட்­ட­மைப்­பு­க­ளாகும்.

குற்­றச்­சாட்டை விசா­ரிப்­ப­தாயின், அதனை மறுக்க வேண்­டி­ய­தில்லை.

பாது­காப்பு அமைச்சு ஜனா­தி­ப­தியின் முழுக் கட்­டுப்­பாட்டில் இருந்­தி­ருந்தால், அர­சாங்­கத்தின் சார்பில் அந்த மறுப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­காது.

பாது­காப்புத் திட்ட மறு­சீ­ர­மைப்பு குறித்து பேசப்­ப­டு­கின்ற இந்த தரு­ணத்தில் இவ்­வா­றான முரண்­பா­டான செயற்­பா­டுகள் வெளிப்­பட்­டி­ருப்­பது ஆச்­ச­ரியம். பாது­காப்பு அமைச்சு வெளி­யிட்­டுள்ள மறுப்பில், மூன்று முக்­கி­ய­மான விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக உள்ளூர் மற்றும் சர்­வ­தேச அமைப்­பு­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், ஸஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாதக் குழுவே இந்த அனர்த்­தங்­களின் காரண கர்த்­தாக்கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்­பது முதல் விடயம்.

சனல் 4 ராஜபக்ஷக்­களின் தேவைக்­காக, கோட்­டா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தாக்­குதல் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்­ததே தவிர, ஸஹ்ரான் ஹாஷிம் குழு அதில் சம்­பந்­தப்­ப­ட­வில்லை என்றோ, அவர்­களால் தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்றே குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

ஸஹ்ரான் குழு­வி­னரின் இலக்கும், ராஜபக் ஷவி­னரின் தேவையும் ஒரே புள்­ளியில் சந்­தித்­தது, அவ்­வாறு அவற்றை சந்­திக்க வைத்­தது பிள்­ளை­யானும், இரா­ணுவப் புல­னாய்வுப் பணிப்­பா­ள­ராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ்  சலேவும் தான் என்­பது சனல் 4 முன்­வைத்­தி­ருக்கும் குற்­றச்­சாட்­டாகும்.

ஸஹ்ரான் தலை­மை­யி­லான குழு­வினர் பாது­காப்பு அமைச்சின் சம்­பளப் பட்­டி­யலில் இருக்­க­வில்லை என்­பது பாது­காப்பு அமைச்சு குறிப்­பிட்­டுள்ள இரண்­டா­வது முக்­கிய விடயம்.

ஸஹ்ரான் குழு­வி­ன­ருக்கு தங்­களின் ஊடாக நிதி வழங்­கப்­பட்­டது என்று அசாத் மௌலானா கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, பிள்­ளையான் குழு­வுக்கு மாதம் தோறும் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவின் ஊடாக 35 இலட்சம் ரூபா தரப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

எனினும், ஸஹ்ரான் குழு தங்­களின் சம்­பளப் பட்­டி­யலில் இருக்­க­வில்லை என்று கூறி­யுள்ள பாது­காப்பு அமைச்சு, பிள்­ளையான் குழு­வுக்கு பாது­காப்பு அமைச்சு மாதம் தோறும் சம்­பளம் வழங்­கி­யதா என்­பது தொடர்­பான எந்தக் கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை. இது சனல் 4 குற்­றச்­சாட்டை பாது­காப்பு அமைச்சு ஏற்றுக் கொள்­வ­தாக கரு­தப்­படக் கூடி­யதா?

பிள்­ளையான் குழு ஒரு துணை இரா­ணுவப் படை­யா­கவே செயற்­பட்­டது.

அவர்­க­ளுக்கு எந்த அடிப்­ப­டையில் 35 இலட்சம் ரூபா மாதம் தோறும் வழங்­கப்­பட்­டது என்று ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திச­நா­யக்க கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

பாது­காப்பு அமைச்­சுக்குத் தெரி­யாமல், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு அவர்­க­ளுக்கு நிதியை வழங்­கி­யதா அல்­லது சம்­பளப் பட்­டி­யலில் வைத்­தி­ருந்­ததா என்ற கேள்­வியும் இதனால் எழு­கி­றது.

பாது­காப்பு அமைச்சின் சம்­ப­ளத்தைப் பெற்றுக் கொள்ளும் குழு­வினர், தவ­று­களை செய்­தி­ருந்தால், அதற்கு பாது­காப்பு அமைச்சும் பதி­ல­ளிக்கக் கட­மைப்­பட்­டுள்­ளது. ஆனால், இந்தக் குற்­றச்­சாட்டை கடந்து சென்­றி­ருக்­கி­றது பாது­காப்பு அமைச்சு. பிள்­ளையான் தரப்பின் மீதான குற்­றச்­சாட்­டு­களை மறுக்க முயன்றால், ஆதா­ரங்கள் பல வெளி­வரக் கூடும் என்­பதால் இந்த விட­யத்தில் அர­சாங்கம் அடக்கி வாசிக்க முடிவு செய்­தி­ருக்க கூடும்.

அடுத்து, பாது­காப்பு அமைச்சின் மறுப்­ப­றிக்­கையில், முக்­கி­ய­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள மூன்­றா­வது விடயம், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை பாது­காப்­ப­தாகும்.

36 ஆண்­டு­க­ளாக தேசத்­துக்கு சேவை­யாற்­றிய அர்ப்­ப­ணிப்­புள்ள சிரேஷ்ட இரா­ணுவ அதி­கா­ரிக்கு எதி­ராக, தாக்­கு­தலைத் திட்­ட­மிட்டு குண்­டு­தா­ரி­க­ளுக்கு உத­வி­ய­தாக தொடுக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை பாது­காப்பு அமைச்சு வன்­மை­யாக கண்­டிப்­ப­தாக அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

சனல் 4 குற்­றச்­சாட்டை முன்­வைத்துள்ள காலப்­ப­கு­தியில்- அதா­வது 2016 டிசம்பர் தொடக்கம், 2019 நவம்பர் வரைக்கும்- மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இலங்­கையில் இருக்­க­வில்லை, குறித்த காலப்­ப­கு­தியில் பாது­காப்பு அல்­லது புல­னாய்வு துறை­களில் பணியில் அமர்த்­தப்­ப­டவோ, குறித்த துறை­களில் அதி­கா­ர­பூர்­வ­மாக பொறுப்­புகள் எதுவும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வே இல்லை என்றும் பாது­காப்பு அமைச்சு வாதத்தை முன்­வைத்­தி­ருக்­கி­றது. குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­தற்கு உள்ள உரி­மையைப் போலவே, மறுப்­ப­தற்கும் உரிமை உள்­ளது.

ஆனால், சனல் 4 ஆவ­ணப்­ப­டத்தில், குறித்த காலத்தில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சதித் திட்­டத்தில் பங்­கெ­டுத்தார் என்று சாட்­சியம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சாட்­சி­யத்தை வெறும் அறிக்­கை­களால் நிரா­க­ரித்து விட முடி­யாது. அதற்கு அப்பால், அவர் குறித்த காலப்­ப­கு­தியில் ஒரு­போதும் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கவோ, தனிப்­பட்ட முறையில் வேறு பெய­ரிலோ அல்­லது வேறு கட­வுச்­சீட்­டிலோ நாட்­டுக்கு வந்து செல்­ல­வில்லை என்­ப­தையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும். அதற்­கான சான்­று­க­ளையும் சமர்ப்­பிக்க வேண்டும். ஏனென்றால், சுரேஷ் சலே அதி­கா­ர­பூர்­வ­மாகத் தான் இந்த நட­வ­டிக்­கை­களை ஒருங்­கி­ணைத்தார் என்று குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

அதனை அவர் அதி­கா­ர­பூர்­வ­மற்ற முறையில், தனக்­கி­ருந்த தனிப்­பட்ட தொடர்­பு­களின் அடிப்­ப­டையில், தனிப்­பட்ட செல்­வாக்கு மற்றும் தேவை­களின் அடிப்­ப­டையில் கூட முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம்.

அவ்­வாறு நடந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­பு­களும் உள்­ளன. பாரிய சதித் திட்­டத்தை முன்­னெ­டுக்கும் ஒருவர்,  அதனை அதி­கா­ரப்­பூர்வமான  வழி­மு­றை­களின் ஊடாக முன்­னெ­டுத்­தி­ருப்பார் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

2015 ஜனா­தி­பதி தேர்­தலில் இந்­தியப் புல­னாய்வு அமைப்­பான றோ தன்னைத் தோற்­க­டித்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ குற்­றம்­சாட்­டி­யமை நினை­வி­ருக்­கலாம். அந்த இடத்தில் றோ மீது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தாலும், இந்திய அர­சாங்­கத்தின் மீது அவர் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருக்­க­வில்லை.

ஏனென்றால் அது இந்­தி­யாவின் உத்­தி­யோ­க­ப்பூர்வ நிகழ்ச்சி நிரலா என்­பதை உறுதி செய்­யாமல், மஹிந்த ராஜபக்ஷ இந்­திய அர­சுக்கு எதி­ராக குற்­றச்­சாட்டை முன்­வைத்தால், தவ­றாகி விடும் என்­ப­தா­லேயே றோவின் மீது பழியைப்­போட்டார்.

புல­னாய்வுப் பிரி­வுகள் பல சம­யங்­களில் தன்னிச்சையாக செயற்படுவதுண்டு. சில வேளைகளில் அவ்வாறான செயற்பாடுகள் தனிநபர்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டிருந்த வரலாறும் உள்ளது.

எனவே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே விடயத்தில் அவரைப் பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சு முற்பட்டிருந்தாலும், அவர் உத்தியோ

கப்பூர்வமற்ற வகையில் சம்பந்தப்பட்டிருக்க வில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அதற்கான சான்றுகளை அவர் முன்வைப்பது முக்கியம். இந்தியா மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவி அதற்குத் தேவைப்படும்.

அதைவிட அவ்வாறான சான்றுகளை முன்வைக்க முற்படும் போது-வேறு இரகசிய செயற்பாடுகளும் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல வெளிவரலாம்.

எவ்வாறாயினும், சனல் 4 விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானதாக இல்லை. குற்றச்சாட்டை விசாரித்து விட்டு மறுப்பதற்குப் பதிலாக உடனடியாக மறுப்பை வெளியிட்டது குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் தான் என்ற கருத்தே இதன் மூலம் உருவாகியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணைக் குழுவோ, பாராளுமன்றத் தெரிவுக்குழுவோ மக்களினதும் சர்வதேசத்தினதும் நம்பிக்கையைப் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான...

2023-09-29 14:18:11
news-image

பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம்...

2023-09-29 14:00:32
news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22