மலை­யக மக்­க­ளுக்கு ஏன் காணி உரிமை மறுக்­கப்­ப­டு­கின்­றது?

18 Sep, 2023 | 05:27 PM
image

சுகு­மாரன் விஜ­ய­குமார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி இப்போது பலரும் கதைத்து வருகின்றனர். கிரா­மங்­களில் வாழும் மக்­க­ளுக்கு வசிப்­ப­தற்­காக 20 பேர்ச்சஸ் அல்­லது அதற்கு அதி­க­மான அரசக் காணிகள் சட்ட ரீதி­யாக உரித்­துடன் வழங்­கப்­ப­டு­கின்­றன. எனினும் மலை­யக மக்­க­ளுக்கு வசிப்­ப­தற்­காக 1995ஆம் ஆண்டு தொடங்கி இது­வரை ஒரு குடும்­பத்­துக்கு 7 பேர்ச்சஸ் அளவு காணியே வழங்­கப்­பட்­டுள்­ளது. அவையும் சட்ட உரித்து அற்­ற­வை­க­ளாகும். 

1972 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க காணி சீர்­தி­ருத்த ஆணைக்­குழு சட்­டத்தின் பிரிவு 3(3) இன் பிர­காரம் பெருந்­தோட்­டங்­களில் லயன் வீடு­களில் குடி­யி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்கு 20 பேர்ச்சஸ் அள­வி­லான காணி ஒதுக்­கப்­ப­டு­வ­து உறுதி செய்யப்பட்டுள்ளது எனினும் தற்­போ­தைய அர­சாங்கம் மலை­யக மக்­க­ளுக்கு ஒரு குடும்­பத்­திற்கு 10 பேர்ச்சஸ் துண்டு அள­வான காணியை மாத்­திரம் வழங்க நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

நாட்டில் காணி இல்­லாத பிர­ஜை­க­ளுக்கு காணி வழங்­கு­வ­தற்­காக காணி அபி­வி­ருத்தி கட்­டளைச் சட்டம் (1935), அரச காணிகள் கட்­டளைச் சட்டம் (1947), காணி கைய­ளிப்பு (விசேட ஏற்­பா­டுகள்) சட்டம் (1979), காணி சீர்­தி­ருத்த ஆணைக்­குழு சட்டம் ஆகிய சட்­டங்கள் ஊடாக அனு­ம­திப்­பத்­திரம் (permit) அளிப்புப் பத்­திரம் (grant) மற்றும் அறு­தி­யீட்டு உறு­தி­யூ­டாக (deed of transfer) காணி உரிமை வழங்­கப்­ப­டு­கி­றது.

எனினும் மலை­யக மக்­க­ளுக்கு இந்தச் சட்­டங்­களில் ஏற்­பு­டைய சட்­டங்­களைப் பயன்­ப­டுத்தி அனு­ம­திப்­பத்­தி­ரமோ, அளிப்புப் பத்­தி­ரமோ, அறு­தி­யீட்டு உறு­தியோ இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.  நாட்டில் காணியற்ற பிர­ஜைகள் உரிய அரச அதி­கா­ரிகள், அரசு நிறு­வ­னங்­களின் மூலம் மற்றும் காணி கச்­சேரி ஊடாக தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர்.

எனினும் மலை­யக மக்கள் தொடர்பில் அவர்களின் குடியிருப்பு மற்றும் காணி விவகாரங்களை பெருந்­தோட்ட கம்­பெ­னி­களும்,   கம்­பெ­னி­களின் கட்­டுப்­பாட்டில் இருக்கும் கம்­பெனி சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட பெருந்­தோட்ட மனி­த­வள அபி­வி­ருத்தி நிதி­யமும், (ட்ரஸ்ட் நிறு­வனம்) (PHDT) தொழிற்­சங்­கங்­களும் மேற்­கொள்­கின்­றன.

நாட்டில் காணியற்ற பிர­ஜை­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய அரச காணிகள், காணி அமைச்சு, காணி சீர்­தி­ருத்த ஆணைக்­குழு, வீட­மைப்பு அதி­காரச் சபை, காணி ஆணை­யாளர், மாவட்டச் செய­லாளர், பிர­தேச செய­லாளர் போன்ற அரசு நிறு­வ­னங்கள் மற்றும் அரசு அதி­கா­ரிகள் ஊடாக தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

நாட்டில் பிர­ஜை­க­ளுக்கு அரச காணிகள் வழங்­கப்­பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கும் போது அப்­பொ­றுப்பை வீட­மைப்பு அதி­கார சபையே நிறை­வேற்­று­கி­றது.

எனினும் மலை­யக மக்­க­ளுக்கு பெருந்­தோட்ட கம்­ப­னியின் கட்­டுப்­பாட்டில் உள்ள பெருந்­தோட்ட மனி­த­வள அபி­வி­ருத்தி நம்­பிக்கை நிதியம் என்ற நிறு­வனம் நிறை­வேற்­று­கின்­றது. அல்­லது பெருந்­தோட்ட கம்­பெ­னி­கள்  மற்றும் பெருந்­தோட்ட மனி­த­வள அபி­வி­ருத்தி நம்­பிக்கை நிதி­யத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள தோட்ட வீட­மைப்பு கூட்­டு­றவு சங்­கத்தின் ஊடாக நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது.

சப்­ர­க­முவ, தென், மேல், ஊவா, மத்­திய, வட மேல் மாகா­ணங்­களில் உள்ள பல ஹெக்­டயர் அள­வான பெருந்­தோட்டக் கா­ணிகள் சகோ­தர சிங்­கள மக்­க­ளுக்கு அரச நிறு­வ­னங்கள் அனு­ம­திப்­பத்­திரம், அளிப்புப் பத்­திரம், அறு­தி­யீட்டு உறுதி ஊடாக வழங்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் மலை­யக மக்­க­ளுக்கு பெருந்­தோட்ட காணி­களை வழங்­கு­வ­தற்கு மாத்­திரம் பெருந்­தொட்ட கம்­பெ­னி­க­ளுக்கும் அரசு நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே காணப்­ப­டு­கின்ற குத்­தகை ஒப்­பந்தத்தை  உதாரணமாகவும் கார­ண­மாகவும்  காட்­டி காணி உரிமை மறுக்­கப்­பட்டு வரு­கி­றது. 

அத்­தோடு பெருந்­தோட்ட கம்­ப­னி­க­ளுடன் எவ்­வித தொடர்­பு­மற்ற காணி சீர்­தி­ருத்த ஆணைக்­குழு, JEDB, SLSPC, TRI ஆகிய அரச நிறு­வ­னங்கள் மற்றும் பெருந்­தோட்ட அமைச்சின் கட்­டுப்­பாட்டில் உள்ள பெருந்­தோட்டக் காணி­களை அவற்றில் வாழும் மலை­யக மக்­க­ளுக்கு குடி­யி­ருப்புத் தேவைக்­காக அனு­ம­திப்­பத்­திரம், அளிப்புப் பத்­திரம், அறு­தி­யீட்டு உறுதி ஊடாக வழங்­கு­வ­தற்கு இது­வ­ரையில் எந்த வித­மான முயற்­சியும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அரச ஆவ­ணங்­க­ளின்­படி, ஏறத்­தாழ 103,000 ஹெக்­டயர் அள­வி­லான பெருந்­தோட்ட காணிகள் பயன்­ப­டுத்­தப்­ப­டாத காணி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எனினும் மலை­யக மக்­க­ளுக்கு ஒரு குடும்­பத்­துக்கு 20 பேர்ச்சஸ் என்ற அளவு காணியை மற்றும் ஏனைய சமூகத் தேவை­க­ளுக்­காக காணி­களை வழங்கி புதிய குடி­யி­ருப்­பு­களை ஏற்­ப­டுத்தி கிரா­மங்­க­ளாக மாற்­று­வ­தற்கு வெறும் 20,000 ஹெக்­ட­ய­ருக்கும் குறை­வான காணியே தேவைப்­ப­டு­கின்­றது.

ஏனைய பிர­சை­க­ளுக்கு விவ­சாய மற்றும் இதர தொழில் முயற்­சி­க­ளுக்­காக அரச காணிகள் வழங்­கப்­படும் நடை­முறை பின்­பற்­றப்­பட்டு அப்­பி­ர­ஜை­களின் பொரு­ளா­தார ஸ்திரத்­தின்­மையும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு அவர்­களின் பங்­க­ளிப்பும் உறுதி செய்­யப்­ப­டு­றது.

மலை­யக மக்­க­ளுக்கு விவ­சாய மற்றும் இதர தொழில் முயற்­சி­க­ளுக்­காக காணி வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அத்­தோடு பெருந்­தோட்டக் காணி­களை பெருந்­தோட்­டங்­க­ளுக்கு வெளியில் உள்­ள­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான கொள்­கையே ஆட்­சி­யா­ளர்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

எமது நாட்டில் பிர­ஜை­க­ளுக்­காக குடி­யேற்ற திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்டு புதிய கிரா­மங்கள் அமைக்­கப்­படும் போது ஏனைய எல்லா கார­ணி­க­ளுக்கும் அப்பால் பிர­ஜை­களின் குடும்ப பாது­காப்பு, நலன், பொரு­ளா­தார சுபீட்சம் என்­ப­ன­வற்­றுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்டு அத்­திட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால்  மலை­யக மக்­க­ளுக்கு குடி­யி­ருப்­புக்­காக காணி வழங்­கப்­படும் போது மாத்­திரம் நம் மக்­களின் உழைப்பால் உரு­வாக்­கப்­பட்ட தேயிலைச் செடி­க­ளுக்கும் இறப்பர் மரங்­க­ளுக்கும் அம்மக்­களை விட அதிக மதிப்பு வழங்­கப்­பட்டு தேயிலைச் செடி­க­ளையும் இறப்பர் மரங்­க­ளையும் காப்­பாற்­று­வ­தாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்­க­ளி­லேயே வாழ்­வது உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.

 அல்­லது மனி­தர்கள் வாழ பொருத்­த­மற்ற காணி­களில் குடி­யேற்­றப்­ப­டுதல் இடம்­பெற்று வரு­கி­றது.

இலங்­கையில் வாழும் எல்லா பிர­ஜை­க­ளுக்கும் அரசு காணி வழங்­க­வில்லை என்­பது உண்மை என்ற போதும் காணி ஒன்றை தனது சொந்த வரு­மா­னத்தில் கொள்­வ­னவு செய்ய முடி­யாத ஏக பெம்­பான்மை பிர­ஜை­க­ளுக்கு காணி வழங்கி அவர்­களின் நில உரி­மை­யையும் இருப்­பையும் அரசு உறுதி செய்­துள்­ளது. தொடர்ந்தும் செய்­யப்­பட்டு வரு­கி­றது.

எனினும் வர­லாறு நெடு­கிழும் ஏறத்­தாள மலை­யக மக்கள் அனை­வ­ருக்கும் காணி உரிமை மறுக்­கப்­பட்­ட­மையும் அதன் கார­ண­மாக மிக மிக அடிப்­படை உரி­மை­யான முக­வ­ரியைக் கூட பெற்றுக் கொள்ள முடி­யாது ஆரம்­பத்தில் தோட்ட சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருந்­த­வர்கள் வழங்­கிய 'முக­வ­ரியை' மலை­யக மக்கள் சுமந்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

கிரா­மங்­களில் மட்டும் நகர்ப்­பு­றங்­களில் வாழும் மக்­களில் முறையை 95 மற்றும் 84 சத­வி­த­மா­ன­வர்கள் சொந்­த­மான வீடு­களை கொண்­டுள்­ளனர்.

எனினும் மலை­ய­கத்தில் தனி வீடு­களைக் (எனினும் வீடுகள் அமைந்­துள்ள காணிக்கு சட்ட ரீதி­யான உரித்து இல்லை) கொண்­ட­வர்கள் வெறும் 10.2 சத­வீதம் மாத்­தி­ரமே.

1981ஆம் ஆண்டில் நக­ரங்­களில் இருந்த கட்­டி­டங்­களின் எண்­ணிக்கை 511,810, கிரா­மங்­களில் இருந்த கட்­டி­டங்­களின் எண்­ணிக்கை 2,084,841. 2012ஆம் ஆண்டில் அவை முறையே 908,078 மற்றும் 4,133.982 ஆக அதி­க­ரித்­தி­ருந்­தன. அதா­வது குறித்த காலப்­ப­கு­தியில் நக­ரங்­களில் 396,267 கட்­டி­டங்கள் புதி­தாக கட்­டப்­பட்­டுள்­ளன. அது 77.42 சத­வீத அதி­க­ரிப்­பாகும். குறித்த காலப்­ப­கு­தியில் கிரா­மங்­களில் 2,049,141 கட்­டி­டங்கள் புதி­தாக கட்­டப்­பட்­டுள்­ளன. அது 98.25 சத­வீத அதி­க­ரிப்­பாகும்.

எனினும் மலை­ய­கத்தில் 1981ஆம் ஆண்டு 217,193 கட்­டி­டங்கள் (ஒரு லயன் வீடு ஒரு கட்­டி­ட­மாக கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.) இருந்த நிலையில் 2012 ஆண்­டா­கின்ற போது 225,099ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதா­வது வெறும் 7,906 கட்­டி­டங்­களே புதி­தாக கட்­டப்­பட்­டுள்­ளன. அது வெறும் 9.64 சத­வீத அதி­க­ரிப்­பாகும். 2023 ஆகின்ற போது மலை­ய­கத்தில் வெறும் 39,799 வீடு­களே காணப்­ப­டு­கின்­றன. 

மலை­யக மக்­களின் காணி உரிமை தொடர்­பாக இங்கு சில கேள்­விகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

1. மனி­தர்கள் கால­டி­ப­டாத காடு­களை அழித்து பெருந்­தோட்­டங்­களை உரு­வாக்கி பேணி இந்­நாட்டின் நவீன பொரு­ளா­தா­ரத்­திற்கு தமது உழைப்பை வழங்­கிய மக்­க­ளுக்கும் அவர்­களின் வழித்­தோன்­றல்­க­ளுக்கும் ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் காணியை சட்ட ரீதியான உரித்துடன் வழங்கி இதர உரிய வசதிகளுக்கான காணிகளுடனான குடியேற்றங்களை அமைத்து கிராமங்களை உருவாக்கும்படி அரசாங்கத்தை கோருவதற்கு மலையக தலைமைகளுக்கு ஏன் இத்தனை தயக்கம்?

2. காடுகளை அழித்து மனிதர்கள் வாழக்கூடிய பல ஆயிரம் ஹெக்டயர் காணிகளை உருவாக்கிய மலையக மக்களுக்கு வீட்டுரிமைக்காகவும் தொழில் உரிமைக்காகவும் காணி உரிமையை பாரட்சமின்றி வழங்க அரசாங்கத்தை கோருவதற்கு மலையக தலைமைகளுக்கு எது தடையாக உள்ளது?

3. 200 வருடங்கள் கடந்தும் இந்த பாரபட்சங்கள் ஓரங்கட்டல்கள் தொடர வேண்டுமா?

மாத்தளை ரத்வத்த தோட்டம், இரத்தினபுரி காவத்தை வெள்ளந்துரை தோட்டம் என தொழிலாளர்களின் குடியிருப்புகளை உடைத்து சேதமாக்கி அழித்து ஒழிக்கும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இவர்களுக்கு காணி உரிமை கிடைக்கும் வரை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் சந்தேகங்களில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right