மலை­யக பகு­தி­களில் நடத்­தப்­பட்ட நாட­கங்களில் இஸ்­லா­மி­யர்­க­ளது பங்கு

18 Sep, 2023 | 05:26 PM
image

(கலாபூஷணம் சு.இராஜசேகரன்)                      

க்­கா­லத்தில் நாம் அனு­ப­விக்கும் தொலைக்­காட்­சி­களோ, வானொ­லி­களோ, திரைப்­பட மாளி­கை­களோ இல்­லாத இருண்ட காலப்­ப­கு­தியில், தோட்­டத்து பெரிய கங்­கா­ணி­களின் வீட்டின் வராண்­டாவில் தீப்­பந்தம்  அல்­லது லாந்தர் விளக்கு வெளிச்­சத்­தி­லேயே பல காவி­யங்கள், இதி­காச கதைகள் அரங்­கே­றி­யுள்­ளன.   கங்­கா­ணியின் வீட்டின் வெளியே குளிரில் கம்­பளி  சாக்கு போத்­தி­ய­படி கீழே அமர்ந்­தி­ருக்கும் தொழி­லா­ளர்கள் அனை­வரும் இர­சித்து கேட்கும்படி ‘ஆர­வல்லி - சூர­வல்லி’, மத­ன­கா­ம­ராசன், விக்­கி­ர­மா­தித்தன் போன்ற கதைகள் விடிய விடிய கூறப்­பட்டு வந்­தன.

பின்னர்  தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து பெரிய கங்­கா­ணி­மாரால்  இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்ட கலை­ஞர்கள் “காமன் கூத்து, பொன்னர் சங்கர், அருச்­சுணன் தபசு, மதுரை வீரன். நல்ல தங்காள்” போன்ற கூத்­து­க­ளையும் ஆடிக் காட்­டி­யுள்­ளார்கள்.  அவர்­க­ளோடு இணைந்த தோட்­டத்து இளை­ஞர்­களும் இக்­க­லை­களை  பழகிக் கொண்­டதால்  இன்றும் அக்­க­லைகள் அழி­யாது பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

நாள­டைவில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து வந்த நடி­கர்­களால் நகர்­பு­றங்­களில் நாட­கங்கள் நடத்­தப்­பட்­டன. இந்­நா­ட­கங்­களை பார்ப்­ப­தற்­காக பல மைல் தூரம் நள்­ளி­ரவு  வேளையில் நடந்து சென்றும் வந்­துள்­ளார்கள். பின்னர், படிப்­ப­டி­யாக தோட்­டங்­களில் பிரட்­டு­க­ளத்­திலும் பிள்ளைமடு­வத்­திலும் இரவில் நாட­கங்கள் நடத்­தப்­பட்­டன.

1930ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த கலைஞர்களால் மலை­யகம் எங்கும் நாட­கங்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.வேல்­நா­யக்கர் டிரா­மசெட், செந்தில் தேசிகர் டிராமா, சிக்­கந்தர் சாய்பு டிராமா, ராஜ­கோபால் டிராமா என்­பன இந்த நாட­கக்­கம்­ப­னி­களின் பெயர்­க­ளாகும்.

பசறை, பண்­டா­ர­வளை, நாவலப்பிட்டி, பூண்­டு­லோயா,லிந்­துல போன்ற தோட்டப் புறங்கள் சார்ந்த நக­ரப்­ப­கு­தி­களில் தமது நாடக சபாக்­களை  இந்த கம்பனிகள் நடத்­தி­யுள்­ளன. இந்த டிராமா செட்­டு­களில் சிக்­கந்தர் சாய்பு கம்­ப­னியின் செட்­டு­கள் பார்­வை­யா­ளர்­களை வியப்­பூட்­டு­வது போல் அமைந்­தி­ருக்கும்.  அவர்­களால் நடத்­தப்­பட்ட லங்­கா­த­கனம், ஹரிச்­சந்­திரா, கிருஸ்­ண­லீலா, சத்­தி­யவான் சாவித்­திரி, குலே­ப­கவாலி போன்­றவை   மக்­களால் தொடர்ந்து சென்று பார்த்து இரசிக்கப்பட்ட நாடகங்கள். சில சம­யங்­களில் சில நாட­கங்களை பல தட­வை­கள் மேடை­யேற்ற வேண்­டிய  நிலையும் ஏற்­பட்­டுள்­ளது.

மலை­யக தொழிற்­சங்­கத்தின் தந்தை எனப் போற்­றப்­படும்.கோ. நடே­சையர் காலத்தில் தான் நாட­கங்கள் மலை­யகப் பிர­தான நக­ரங்­க­ளிலும், ஏனை இடங்­க­ளிலும் இடம்­பெற ஆரம்­பித்­துள்­ளன.  இதில், அக்­கா­லப்­ப­கு­தியில் வெளி­வந்த ஜன­மித்­திரன், லங்­கா­மித்­திரன், தேசத்­தொண்டன் போன்ற பல பத்­தி­ரி­கைகள் மூல­மாக  கிடைத்த  தக­வ­லின்­படி 1917ஆம் ஆண்டு முதல் நடை­பெற்ற நாட­கங்­களில்  கொம்­பனித் தெரு ‘பார்ஸி’ நாடகக் குழு­வி­னரால் 10.12.1918. அன்று ‘குலே­ப­க­வாலி’ நாடகம் நடத்தப்பட்டது என அறிய முடிந்­தது.

அட்­டனில் நாடக சபாக்கள்– ‘மஹா­விஷ்ணு ஹோல்’

இங்கு ஹெரோல்ட் தோட்­டத்­துக்கு செல்லும் நாலு­பீலி எனும் இடத்­தில்தான் ‘மஹா­விஷ்ணு ஹோல்’ இருந்­தது. இங்கு பல நாட­கங்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. அத்­தோடு, அப்போது வெளி­வந்த  ஊமைப்­ப­டங்­களும் இங்கு காட்­டப்­பட்­டுள்­ளன. இதனை ‘சின்ன டம்­பாரை’ பெரிய கங்­கா­ணியும், மல்­லி­யப்பு தோட்ட பெரிய கங்­கா­ணி­யுமே   நிர்­வா­கித்­த­வர்­க­ளாவர். இதன் வளர் ச்சிக்கு பெரிதும் உத­வி­யாக இருந்­தவர் டம்­பாரை தோட்­டத்து பெரி­யண்ணன் பெரி­ய­கங்­கா­ணி­யா­ராகும். இந்த  நாடகக் கம்­ப­னியின் பாது­காப்­புக்­காக ‘சிங்­காப்பு எனும் சண்­டி­யரை வைத்­தி­ருந்­தனர். இந்த சிங்­காப்பு தான் பிற்­ப­கு­தியில் அட்­டனில் பல கடை­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­ரான ‘சிங்­காப்பு முத­லாளி ஆவார்.

இந்த மஹா­விஷ்ணு ஹோலில் பல நாட­கங்­களை  ‘மதுரை மீன­லோ­சினி’ நாடகக் கம்­பனி நடத்­தி­யுள்­ளது. இந்தக் குழுவில் பெண்­களே இல்லை. அதனால், பெண் வேடத்தை ஆண்­களே புனைந்­தார்கள். இக்­கு­ழுவில் பிர­தான பெண்­வே­டத்தில் ஜொலித்­தவர் ‘ராவுத்தர்’ என்ற இஸ்­லா­மி­ய­ராகும்.

மானா மதுரை நாடக சபா

இப்­போது அட்டனில்  மார்க்கட் (பழைய சந்தை) இருக்கும் இடத்தில் தான் ‘ஸ்ரீ சங்­க­ரதாஸ் சுவா­மி­களின்’ நாடகக் கம்­பனி இருந்­தது இதுவும் ஒரு காலத்தில் இப்­ப­குதி மக்­களின் சிறந்த நாடக சபா­வாக இருந்­தது. இங்கு இராமா­ய­ணத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பல பெயர்­களைக் கொண்ட நாட­கங்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளன. இச் சபா­விலும் தபேலா வாசித்­தவர் ஒரு இஸ்­லா­மியர்.

தல­வாக்­கலை பகு­தியில் நாடக சபா

தல­வாக்­கலை நக­ரி­லி­ருந்து சுமார் மூன்ற மைல்­க­ளுக்கு அப்பால் அமைந்­துள்ள ‘லிந்­துல’ என்ற சிறிய நகரில் ‘லோடன் சபா’ என அழைக்­கப்­பட்ட தகரக் கொட்­ட­கையில் தான் தமிழ்­நாட்­டி­லி­ருந்து வந்த சபாக்­களால்  நாட­கங்கள் போடப்­பட்­டன. இந்த கொட் டகையில் ‘ஸ்ரீ சங்­க­ரதாஸ் சுவா­மி­களின்’ நாடகக் கம்­ப­னியும் நாடகம் நடத்­தி­யது. இந்த நாடகக்­கு­ழுவில் காட்­டப்­ப­டு­கின்ற காட்­சிகள் அனைத்தையுமே தத்­ரூ­ப­மாக அமைத்து காட்­டு­வார்கள். கான­கத்தில் ஸ்ரீ ராமன், சீதா­தே­வி­யு­டனும் இலக்­கும­ண­னு­டனும் குகனின் படகில் போகும் காட்சியா­னது உண்­மையில் ஆற்றில் படகில் செல்­வது போல் அமைந்திருக்கும். இத்­த­கைய காட்­சி­களை கொண்­டய்­யா­ராஜு  என்­பவர் அமைத்­தி­ருந்தார்.அவ­ருக்கு உறு­து­ணை­யா­கவும்,  நடி­கர்­க­ளது மேக்கப் மேனாக (அரி­தாரம் இடும்) பைய­னாக மலே இனத்தைச் சேர்ந்த ‘சரூக்’ எனும் இஸ்­லா­மிய இளைஞர் ஒருவர் கடமையாற்­றி­யுள்ளார்.  

ஸ்டேசன் வட்­ட­கொ­டையில் நாடக சபா

ஸ்டேசன் வட்­ட­கொ­டையில் ‘கமலா டாக்கீஸ்’ என்ற நாடகக் குழுவினர் அந்த தோட்டத்து கொழுந்து மடுவத்தில் தமது நாடகங்களை போடுவார்கள். மாதத்தின் இறுதிப்பகுதியில் நாடகம் பார்க்க கூட்டமே வராது. அக்காலப்பகுதியில் அவர்கள் சாப்பாட்டுக்கே வழியற்று தவித்ததை நேரடியாகவே பார்த்துள்ளேன். இந்த நாடகசபாவில் ‘சரீபா’ எனும் ஒரு இஸ்லாமிய பெண்ணும் நடித்தார்.காலம் செல்லச்செல்ல போதிய வருமானங்கள் இல்லாத நிலையில் அந்த  நாடக சபாக்கள் மூடப்பட்டன.  

நாடகசபாக்கள் மூலமாக இஸ்லாமிய சமூகத்தினரும் மலையகத்தில் இருந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் புலனாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலை­யக பகு­தி­களில் நடத்­தப்­பட்ட நாட­கங்களில் இஸ்­லா­மி­யர்­க­ளது...

2023-09-18 17:26:42
news-image

இன்று விநாயகர் சதுர்த்தி

2023-09-18 10:28:22
news-image

தம்பாட்டி பிரதேசத்தின் அடையாளமான பண்டாரவன்னியன் நாடகக்கூத்து

2023-09-17 20:44:06
news-image

திறக்கிறது இன்னுமொரு அறிவுத் திருக்கதவு

2023-08-26 13:44:38
news-image

கொழும்பு அழகியற் பல்கலைக்கழக மண்டபத்தில் கர்நாடக...

2023-08-24 17:28:58
news-image

பக்தர்களின் நலம் காக்கும் நாச்சியாபுரம் ஸ்ரீ...

2023-08-17 14:31:20
news-image

இறை வழிபாட்டின் முக்கியத்துவம்

2023-08-15 13:01:05
news-image

ஆடி அமாவாசை விரதம் யார் இருக்க...

2023-08-14 18:18:54
news-image

தர்ப்பண பூஜை

2023-08-14 18:20:29
news-image

ஆடி அமாவாசை

2023-08-14 18:28:54
news-image

சித்தர்களின் அருளைப் பெறுவதற்கான சூட்சுமங்கள்

2023-07-28 16:25:07
news-image

பிரபல ஓவியர் மாருதி காலமானார்

2023-07-28 15:06:33