அவல நிலைக்குள்ளாகி திணறும் நோயா­ளர்கள்!

18 Sep, 2023 | 05:25 PM
image

ஆர்.ஹஸ்தனி

நோயற்ற வாழ்வே குறை­வற்ற செல்வம் என்­பார்கள். நோய்­களால் ஆட்­கொள்­ளப்­பட்டு துன்­பப்­ப­டு­வது நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு   மட்­டு­மல்­லாது அவர்­க­ளது குடும்­பத்­திற்கும் சமூ­கத்­திற்கும் முழு நாட்­டுக்­குமே விளை­வு­களை ஏற்­ப­டுத்தக்கூடி­ய­தாகும்.

ஒரு நாட்டின் அபி­வி­ருத்­திக்கும்  பொரு­ளா­தார ரீதி­யான  வளர்ச்­சிக்கும் ஆரோக்­கி­ய­மான தனி­ந­பர்­களை உள்­ள­டக்­கிய சமூகக் கட்­ட­மைப்­புகள் அவ­சி­ய­மா­ன­வை­யாக உள்­ளன.

பௌதீக ரீதியில் உட­லையும்  உணர்வு ரீதியில் உள்­ளத்­தையும் வாட்டும் நோயி­லி­ருந்து விடு­பட வேண்டும் என்ற எண்­ணத்­துடன்  மருத்­து­வ­ம­னை­களை நாடும் நோயா­ளர்கள் மருத்­துவத் துறையின் பல்­வேறு மட்­டங்­க­ளி­லான  குறை­பா­டுகள்,  தவ­றுகள்  மற்றும் அலட்­சி­யங்கள் கார­ண­மாக  மேலும் மீள முடி­யாத நோய் வலைக்குள் சிக்கி  துன்­பப்­படும் சந்­தர்ப்­பங்கள் எமது வாழ்வின் அனு­பவப் பாடங்­க­ளாக உள்­ளன.

குறிப்­பாக இலங்­கையைப் பொறுத்த வரை நாடு எதிர்­கொண்­டுள்ள வர­லாறு காணாத பொரு­ளா­தார நெருக்­க­டி­யுடன் இணைந்த பிரச்­சி­னை­யாக மருந்துத் தட்­டுப்­பாட்டு பிரச்­சினை மாறி­யுள்­ளது.  பல  மருத்­து­வம­னை­களில்  நோயெ­திர்ப்பு மருந்­துகள், குருதி உறை­தலைத் தடுக்கும் மருந்­துகள், வலி­நீக்கி மருந்­துகள், மயக்­க­ ம­ருந்­துகள்,   புற்­று­நோய்க்­கான மருந்­துகள், முக்­கிய அறுவைச் சிகிச்­சை­க­ளுக்குத் தேவை­யான  மருந்­துகள் உள்­ள­டங்­க­லாக மருந்து வகை­களின் தட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக நோயா­ளர்கள் பெரும் அவல நிலையை எதிர்­கொண்­டுள்­ளனர்.

இலங்கை மருத்­துவ சங்­கத்தின் மருத்­துவ விநி­யோகப் பிரிவின் 2023 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தி­லான தர­வுகள் 383 அத்­தி­யா­வ­சிய மருந்­து­களில் 164 மருந்­துகள் கையி­ருப்பில் இல்லை எனத் தெரி­விக்­கி­றது.

அதே­ச­மயம் கையி­ருப்­பி­லி­ருந்த  ஏனைய பல மருந்­து­களும் பற்­றாக்­குறை நிலை­யி­லேயே  இருந்­தன. உட­னடி சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ள வேண்­டிய தேவைப்­பாட்­டி­லுள்­ள­வர்கள் மருந்துத் தட்­டுப்­பாட்டால் ­சி­கிச்­சை­க­ளுக்கு  மாதக்கணக்­காகக் காத்­தி­ருக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்பட்டதால் அவர்கள் உயிர்  பிழைப்­ப­தற்­கான வாய்ப்பு அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாகியுள்ளது. முக்­கிய மருந்­து­களின் கையி­ருப்புக் குறைந்­ததால் ஒரு­போதும் இடம்­பெற்­றி­ராத சுகா­தார நெருக்­க­டி­யொன்றை இலங்கை எதிர்­கொண்­டுள்­ள­தாக  உலக சுகா­தார ஸ்தாபனம்  இந்த வருடம் ஜன­வரி மாதத்தில் வெளி­யிட்ட அறிக்­கையில்  எச்­ச­ரித்­தி­ருந்­தது.

இலங்­கைக்கு இந்த வருடம் முழு­வ­தற்­கு­மாக தேவைப்­படும் மருந்­துகள், மருத்­துவ  உப­க­ர­ணங்கள் மற்றும் மருத்­துவப் பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு  சுமார் 300 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான நிதி தேவை­யா­க­வுள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில்  இலங்­கைக்கு நன்­கொடை வழங்கும் நாடுகள் மற்றும் ஸ்தாப­னங்­க­ளி­ட­மி­ருந்து இந்த வரு­டத்தில் சுமார் 80 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான நிதியை மட்­டுமே பெறு­வது சாத்­தி­ய­மா­க­வுள்­ள­தாக  உலக சுகா­தார ஸ்தாபனம் அச்­ச­ம­யத்தில் தெரி­வித்­தி­ருந்­தது.

 இந்­நி­லையில் நாட்டின் பொரு­ளா­தாரம் தற்போது மேம்­பா­ட­டைந்து வரு­வ­தாக இலங்கை அர­சாங்கம் தெரி­விக்­கின்ற போதும், மருந்­து­க­ளுக்­கான தட்­டுப்­பாடு மோச­மான முறையில் தொடர்ந்து நீடித்து வரு­கி­றது.

இல­வச மருத்­துவம் குறித்து தன்­கென தனி முத்­தி­ரையைப் பதித்­துள்ள இலங்­கையில் தற்­போது   பொது மருத்­து­வ­ம­னை­களில் முக்­கிய மருந்­துகள் இல்­லாத நிலை ஏற்­பட்­டி­ருப்­பது நோயா­ளர்­களை  அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கு­வ­தாக உள்­ளது.  பொரு­ளா­தார நெருக்­க­டி­யை­ய­டுத்து இலங்கை ரூபாவின் பெறு­மதி டொல­ருக்கு எதி­ராக வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில்  மருந்து இறக்­கு­ம­தி­க­ளுக்­கான செல­வினம் மலைக்க வைக்கும் வகையில் அதி­க­ரித்­துள்­ளமை மருந்து இறக்­கு­ம­தி­யிலும் அதன் விலை­க­ளிலும்  பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதன் கார­ண­மாக தனியார் மருந்­த­கங்கள் பலவும் மருந்து இறக்­கு­ம­தி­களின் அளவை மட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளன.  பொது மருத்­து­வ­ம­னை­களில்  ஏற்­பட்­டுள்ள மருந்துத் தட்­டுப்­பாடு கார­ண­மாக  தமது மருந்துத் தேவைப்­பா­டு­களை பூர்த்தி செய்­வ­தற்கு தனியார் மருந்­த­கங்­களை நாடும் நோயா­ளர்கள்  மருந்­து­களின் விலை பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளதால் அவற்றை கொள்­வ­னவு செய்ய முடி­யாத  நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 இந்த துர்ப்­பாக்­கிய நிலை கார­ண­மாக  வீதி வீதி­யாக ஒரு­வேளை உண­வுக்கு பிச்சை எடுப்­ப­வர்கள் மத்­தியில் மருந்துச் சீட்­டுகள் சகிதம் மருந்­து­களை  வாங்­கு­வ­தற்கு உத­விகோரி  பிச்சை எடுப்­ப­வர்கள் கூட்டம் அதி­க­ரித்து வரும் நிலை தோன்­றி­யுள்­ளது. 

கொழும்பு வீதி­யொன்றில் தனது மருந்துச் சீட்டைக் காண்­பித்து பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த வயோ­திப பெண்­ணொ­ருவர் தனக்கு போஷாக்கு இல்லை எனத் தெரி­வித்து மருத்­துவர் வெ ளிநாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும்  சுமார் நான்­கா­யிரம் ரூபா பெறு­ம­தி­யான பால் மாவை அருந்த எழுதிக் கொடுத்­தி­ருப்­ப­தா­கவும் மருந்து வாங்­கவே பணம் கையில் பணம் இல்­லாத நிலையில் அந்தப்  பால் மாவுக்கு என்ன செய்­வது எனவும் புலம்­பிய சம்­பவம் மனதை நெகிழ வைப்­ப­தாக  இருந்­தது.   பிச்­சை­யெ­டுப்­பதைத் தொழி­லாகக் கொண்­டி­ராத நடுத்­தர குடும்­ப­மொன்றைச் சேர்ந்­த­வ­ராக தோன்­றிய அந்தப் பெண் தனக்­கான மருந்­து­களின் அதி­க­ரித்து வரும் விலை கார­ண­மாக கையேந்தி யாசகம் வாங்கும் அவல நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளார்.

அதே­ச­மயம் நாட்டில் மருந்­து­க­ளுக்­கான அவ­சர தேவைப்­பா­டு­களைக் காரணம் காட்டி தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபையின்  தரப் பரி­சோ­த­னை­யின்றி மருந்­து­களை  பாவ­னைக்கு விடும் செயற்­கி­ர­மங்கள் அரங்­கேறி வரு­கின்­ற­மையும் நோயா­ளர்­களை மென்­மேலும் ஆபத்தில் தள்­ளு­வ­தாக உள்­ளது.

பேரா­த­னை­யி­லுள்ள  ஒரு போதனா வைத்­தி­ய­சா­லையில் சத்­தி­ர­சி­கிச்­சையின்போது  வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தர­மற்ற மருந்தால் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் உட்­பட இரு பெண்கள் உயி­ரி­ழந்த விவ­காரம், வயிற்­று­வ­லிக்­காக சிகிச்சை பெற வந்த 21 வயது  பெண்­ணொ­ருவர் தர­மற்ற மருந்தால் உயி­ரி­ழந்­தமை என்­பன போன்ற சம்­ப­வங்கள் இலங்­கையில் தர­மற்ற மருந்து பாவ­னையால் இடம்­பெற்ற மர­ணங்­க­ளுக்கு ஒரு சில  உதா­ர­ணங்கள் மட்­டு­மே­யாகும்.  

அதே­ச­மயம் தர­மற்ற மருந்து பாவ­னை­யா­னது உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வது மட்­டு­மல்­லாது  நோய் கடு­மை­ய­டை­வ­தற்கும் நோயா­ளர்­க­ளுக்கு  உடற்­கு­றை­பா­டு­களை ஏற்­ப­டுத்தி அவர்கள் வாழ்நாள் முழு­வதும் விசேட தேவை­யுள்­ள­வர்­க­ளாக துன்­பப்­ப­டு­வ­தற்கும் வழி வகை செய்­வ­தாக உள்­ளது.

குறிப்­பாக இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட  கண்நோய்­க­ளுக்­கான சொட்டு மருந்­தான பிரெட்­னி­சோலோன் கார­ண­மாக இரு கண் மருத்­து­வ­ம­னை­களில் சத்­தி­ர­சி­கிச்­சைக்கு சென்ற 20 க்கும் மேற்­பட்ட நோயா­ளர்கள் பல­த­ரப்­பட்ட சுகா­தாரப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டனர். அவர்­களில் சிலர் கண் சத்­தி­ர­சி­கிச்­சை­யை­ய­டுத்து தாம் கண் பார்­வையை முழு­மை­யா­கவோ  அல்­லது பகு­தி­யா­கவோ இழந்­துள்­ள­தாக முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். அந்த மருந்தில்  நுண்­ணுயிர் தொற்று ஏற்­பட்­டி­ருந்­த­மையே  மேற்­படி பாதிப்­புக்குக் கார­ண­மாகக் கூறப்­ப­டு­கி­றது.

அத்­துடன் பொது மருத்­து­வ­ம­னையில் மருத்­துவ சேவையைப் பெறு­வ­தற்கு நீண்ட வரி­சையில் பல மணி நேரம் காத்­தி­ருக்க வேண்­டிய அவல நிலை மற்றும் தனியார் மருத்­து­வ­ம­னையில்  மருத்­துவ சேவையைப் பெறு­வ­தற்கு  அதிக கட்­ட­ணத்தை செலுத்த வேண்­டிய நிர்ப்­பந்தம் என்­ப­வற்றைக் கருத்திற் கொண்டு நோயா­ளர்கள் பலர் மருத்­து­வரின் ஆலோ­ச­னை­யையோ பரிந்­து­ரை­யையோ பெறாது தமது விருப்­பத்­திற்கு ஏற்ப மருந்­து­களைப் பெற்றுப் பயன்­ப­டுத்தும் போக்கு அதி­க­ரித்து வரு­வது நோயா­ளர்­களின் உயி­ருக்கு ஆபத்தைத் தேடித் தரு­வ­தாக உள்­ளது.

அர­சாங்­கத்தால் விதிக்­கப்­பட்­டுள்ள கடும் கட்­டுப்­பா­டு­களைக் கருத்­திற்­கொண்டு பல மருந்­த­கங்கள்  மருத்­து­வரின் பரிந்­து­ரை­யின்றி மருந்­து­களை வழங்­கு­வ­தற்கு மறுத்து வரு­கின்றபோதும் ஆங்­காங்கே சில மருந்­த­கங்கள் இலாப நோக்குக் கருதி  விதி­மு­றை­களை மீறி நோயா­ளர்கள் கேட்கும் மருந்­து­களை  வரை­ய­றைக்­குட்­பட்ட எண்­ணிக்­கையில் வழங்கி வரு­கின்­றன.

அத்­துடன் சிலர் தமக்கு ஏதா­வது நோய் ஏற்­பட்டால் அதே நோய் அறி­கு­றி­க­ளுடன் காணப்படும் குடும்ப அங்­கத்­தர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் மருத்­து­வர்­களால் வழங்­கப்­பட்ட மருந்தை எ­து­வித பரி­சீ­ல­னை­யு­மின்றி பயன்­ப­டுத்தும் வழக்­கமும் காணப்­ப­டு­கி­றது.  வேறு­பட்ட நோய்­க­ளுக்கு ஒரே நோய­றி­கு­றிகள் வெளிப்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்ள நிலையில் இவ்­வாறு நோய­றி­கு­றி­களை மட்டும் வைத்து மருந்­து­களைப் பெற்றுப் பயன்­ப­டுத்­து­வது உயி­ரா­பத்து விளை­விக்கக் கூடி­ய­தாகும். இலங்­கையில் 8 சத­வீதம் முதல் 12 சத­வீ­த­மா­ன­வர்கள் இவ்­வாறு ஏனை­ய­வர்­களால் பயன்­ப­டுத்­தப்­படும் மருந்­து­களை தமது நோய்­க­ளுக்குப் பயன்­ப­டுத்தி சுய  வைத்­தியம் செய்து கொள்­வதில் ஈடு­பட்டு வரு­வ­தாக பிந்­திய ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது. அத்­துடன்   இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் 46 சத­வீ­தத்­தினர் மருந்து குறித்து போதிய அறி­வின்றி உள்­ள­தாக அந்த ஆய்வு கூறுகி­றது.

 நோயா­ளர்கள் பலரும் தாம் பயன்­ப­டுத்­தும் ­ம­ருந்தின் பெயர் என்ன, அதனால் பக்க விளை­வுகள் ஏற்­ப­டுமா,  அது  ஒவ்­வாமை விளைவை ஏற்­ப­டுத்­துமா,  அந்த மருந்தை உண­வுக்கு முன்பா அல்­லது பின்­னரா எடுப்­பது,  மருந்தின் காலா­வ­தி­யாகும்  காலம் என்ன, அதனை எத்­தனை நாட்­க­ளுக்கு உப­யோ­கிப்­பது, நோய் குண­மான பின்­னரும் அந்த மருந்தை உப­யோ­கிக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளதா, எடுக்கும் மருந்தின் அளவு சரி­யா­னதா, மருந்தை ஒரு தடவை எடுக்கத் தவ­றினால் என்ன செய்­வது,  ஏற்­க­னவே வேறு நோய்­க­ளுக்­காக பயன்­ப­டுத்தும் மருந்­து­க­ளுடன் புதிய மருந்தை உள்­ளெ­டுக்­க­லாமா,  மருந்தை எப்­போது  நிறுத்­து­வது என்­பன குறித்து தெளி­வற்ற  நி­லையில்  உள்­ளனர். பலர் அது  குறித்து மருத்­து­வர்­க­ளிடம் ஆலோ­சனை பெறு­வது  தொடர்பில்  சிந்­திக்­காது உள்­ளனர்.  அதே ­ச­மயம் இன்­றைய அவ­சர உலகில் மருத்­து­வர்­களில் சிலர்  நோய­ளிக்கு மருந்து பாவனை தொடர்பில் முக்­கி­ய­மான விப­ரங்­களை  எடுத்துக் கூறு­வ­தற்கு தாமாக முன்­வ­ராத  போக்கும் காணப்­ப­டு­கி­றது.

 அத்­துடன் மருத்­து­வரின் கையெ­ழுத்தை விளங்கிக் கொள்­வதில் உள்ள பிரச்­சினை கார­ண­மாக மருத்­து­வத்­தா­தி­க­ளாலும் மருந்­தா­ளர்­க­ளாலும் தவ­றான மருந்­துகள் வழங்­கப்­படும் அபா­யமும் உள்­ளது. பல மருந்­து­களை ஒன்­றாக வைத்து உப­யோ­கிக்கும் சந்­தர்ப்­பத்தில் மருந்­து­களின் அளவை தவ­றாகப் பயன்­ப­டுத்தும் அச்­சு­றுத்தல் உள்­ளது.

 உல­க­ளா­விய ரீதியில்  பாது­காப்­பற்ற மருத்­துவ சிகிச்­சைகள் மற்றும் தவ­று­களால்  50 சத­வீ­த­மான நோயா­ளர்கள் தீங்கை எதிர்­கொண்டு வரு­வ­தாக  சர்­வ­தேச ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. அத்­துடன் உல­க­ளா­விய ரீதியில்  இடம்­பெறும் மருத்­துவத் தவ­று­களால்  42 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான  வரு­டாந்த செல­வினம் ஏற்­ப­டு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம் மருத்­துவ ரீதியில்  இடம்­பெறும் தீங்­கு­களால் அதிக வரு­மானம் பெறும் நாடு­களை விட குறைந்த வரு­மானம்  பெறும் நாடுகள் இரு மடங்கு பாதிக்­கப்­ப­டு­வ­தாக தரவுகள் தெரி­விக்­கின்­றன. மேலும் இலங்கை அர­சாங்­க­மா­னது  அந்­நியச் செலா­வ­ணியை ஊக்­கு­விப்­ப­தற்­காக  அர­சாங்கத் துறையில் கட­மை­யாற்­று­ப­வர்­களுக்கு  குறிப்­பிட்ட காலத் தவ­ணைக்கு சம்­ப­ள­மில்லா விடு­மு­றையில்  வெளி­நா­டு­களில் சென்று பணி­யாற்ற அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இதனால்   நிபு­ணர்கள் உள்­ள­டங்­க­லான மூளை­சா­லிகள் நாட்டை விட்டு வெளி­யே­று­வது அதி­க­ரித்­துள்­ளதால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்ட துறை­யாக மருத்­துவத் துறை உள்­ளது.

அர­சாங்­கத்தின் இந்த சலு­கை­யை­ய­டுத்து பல மருத்­து­வ­ம­னை­களில் மருத்­து­வர்கள் மற்றும் மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கடும் பற்­றாக்­குறை நில­வு­கி­றது.  ஊதிய உயர்வு கோரி மருத்­து­வர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பணிப்  பகிஷ்­க­ரிப்பு போராட்­டங்­களும் நோயா­ளர்­களை பெரிதும் பாதிப்­ப­தாக உள்­ளது.

 சில தனியார் மருத்­து­வ­ம­னைகள் அவ­சர நிலை­மை­களில் வரும் நோயா­ளி­க­ளுக்கு  சாதா­ரண அறைகள்  எது­வு­மில்லை எனவும் குளி­ரூட்டி வச­தி­யுள்ள  கட்­டணம் கூடிய அறைகள் மட்­டுமே  உள்­ள­தா­கவும்  தெரி­வித்து அதிக கட்­ட­ணங்­களை வசூ­லிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வது,  நோயா­ளியின் நோய்க்கு சம்­பந்­தப்­பட்ட வைத்­தி­யர்கள் அல்­லாது  இருக்கும் அனைத்து மருத்­து­வர்­க­ளையும் அவரைப் பார்­வை­யிட அனு­ம­தித்து அதற்கு மேல­தி­க­மாக கட்­ட­ணங்­களை அற­வி­டு­வது, நோயா­ளிக்கு அவ­சி­ய­மற்ற மருத்­துவ பரி­சோ­த­னை­களை  மேற்­கொள்ள நிர்ப்­பந்­தித்து கட்­ட­ணத்தின் அளவை அதி­க­ரிப்­பது போன்­ற­வற்றில் ஈடு­பட்டு வரு­வதால் நோயா­ளர்கள் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

அத்­துடன் மருத்­து­வ­ம­னையில்  பரா­ம­ரிக்க நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­களால் நோயா­ளர்கள் முறை­யாகப் பரா­ம­ரிக்­கப்­ப­டாது தாக்­கப்­படும் சம்­பவங்கள் பலவும் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லையில் உலக சுகா­தார ஸ்தாபனம் நோயா­ளர்கள் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும்  அது தொடர்பில் உல­க­ளா­விய ரீதியில் காத்­தி­ர­மானநட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுக்­கவும் டபிள்யூ.எச்.ஏ.  72.6 தீர்­மா­னத்தை 2019 ஆம் ஆண்டு நிறை­வேற்­றி­யி­ருந்­தது. மேற்­படி தீர்­மா­னத்தின் பிர­காரம் உலக நோயாளர் பாது­காப்பு தினத்தை  ஒவ்­வொரு வரு­டமும் செப்­டெம்பர் 17 ஆம் திகதி  வேறு­பட்ட தொனிப்­பொ­ருட்­களில் அனுஷ்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அந்த வகையில்   இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை அனுஷ்­டிக்­கப்­படும் நோயாளர்  பாது­காப்பு தினத்தின்  தொனிப்­பொருள்   'நோயா­ளரின் பாது­காப்புக் குறித்து நோயா­ளர்­களை ஈடு­ப­டுத்தல்' என்­ப­தாகும். நோயா­ளர்­க­ளுக்கு தமது நிலை குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது இதன் நோக்­க­மாகும்.

அதே­ச­மயம் மேற்­படி தினத்தின் இந்த வரு­டத்­திற்­கான சுலோகம் நோயா­ளர்­களின் குரலை உயர்த்­து­வது என்­ப­தாகும்.  இது நோயா­ளர்கள், அவர்­க­ளது குடும்­பத்­தினர் மற்றும் பரா­ம­ரிப்­பா­ளர்கள், உள்­ள­டங்­க­லான அனைத்து மட்­டங்­க­ளி­லு­முள்­ள­வர்கள் செயற்­ப­டு­வ­தற்­கான தேவை குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி முயற்­சி­களை முன்­னெ­டுப்­பது, நோயா­ளர்­க­ளுக்­கான சுகா­தாரக் கவ­னிப்பை ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்த நோயா­ளர்­க­ளையும் குடும்­பங்­க­ளையும் வலு­வூட்­டுவது, நோயா­ளர்­க­ளையும் அவர்­க­ளது  குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும்  2021-2030  ஆம் ஆண்டு காலப் பகு­திக்­கான உலக நோயாளர் பாது­காப்பு தொடர்­பான பரந்­த­ள­வான   திட்­டத்தில்  இணைக்க அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை  மேற்­கொள்­வது என்­பன  இந்த வரு­டத்­திற்­கான உலக நோயா­ளர்கள் பாது­காப்பு தினத்தின்  குறிக்­கோள்­களில் சில­வாகும்.  

வரு­டாந்தம் குறைந்த மற்றும் நடுத்­தர வரு­மானம் உழைக்கும் நாடு­களில் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­படும் நோயா­ளர்­களில் சுமார்  134 மில்­லியன் பேர் பாத­க­மான சம்­ப­வங்­களை எதிர்­கொள்­வ­தா­கவும் அதன் பெறு­பே­றாக  வரு­டாந்தம் 2.6 மில்­லி­யன் பேர் இறந்து வரு­வ­தா­கவும் உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­விக்­கி­றது.

இந்­நி­லையில் நோயா­ளர்கள் தமக்கு ஏற்­பட்­டுள்ள நோய் மற்றும்  உப­யோ­கிக்கும் மருந்­துகள் குறித்து விழிப்­பு­ணர்­வுடன் இருப்­பது அவ­சி­ய­மாகும்.   நோய்­க­ளுக்கு சுய­மாக மருந்­து­களை எடுத்­துக்­கொள்­வதைத் தவிர்த்து மருத்­து­வரின் ஆலோ­ச­னை­யுடன் மருந்­து­களை உரிய முறையில்  பயன்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்;.  அதே­ச­மயம் நோயா­ளர்­க­ளுக்கு சரியான முறையில் மருந்துகள் விநியோகிக்கப்படுவதையும் அவர்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் முக்கிய கடமையாகவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right