லிபியாவில் பேரழிவின் மத்தியில் ஒரு அதிசயம் - முழு குடும்பமும் நீரில் அடித்துச்செல்லப்பட 11வயது சிறுவன் உயிர்தப்பியுள்ளான்

Published By: Rajeeban

18 Sep, 2023 | 03:41 PM
image

லிபியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள  வெள்ளத்தில்  முழுக்குடும்பம் உயிரிழந்துள்ள நிலையில் அந்த குடும்பத்தைசேர்ந்த11வயது  சிறுவன் மாத்திரம் உயிர் தப்பியுள்ளான்.

இதனை அதிசயம் என வர்ணிக்க முடியும் என ஸ்கைநியுஸ் தெரிவித்துள்ளது.

டெர்னாவில் அந்த சிறுவனின் முழுக்குடும்பத்தையும் அடித்துச்சென்ற அலை அந்த சிறுவனை மாத்திரம் மீண்டும் கரைக்கு கொண்டுவந்து சேர்ந்துள்ளது.

அந்த சிறுவன் குறிப்பிடத்தக்க காயம் எதுவுமின்றிகாணப்படுகின்றான் காலில் சிறிய சிராய்ப்புகள்மாத்திரம்காணப்படுகின்றன  

வெள்ள நீர் எங்களை உயரத்திற்கு தூக்கி மீண்டும் நிலத்தில் வீழ்த்தியதுஎன அந்தசிறுவன் தெரிவித்துள்ளான்.

நான் நிலத்தில் கண்விழித்தேன் அங்கிருந்து எழுந்து நடந்தேன் பின்னர் பொலிஸ் காரில் என்னை பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

அந்த சிறுவனின் மன உணர்வு என்ன என நான் கேட்டேன்  அவன் அதற்கு ஒன்றுமில்லை என பதிலளித்தான்.

அந்தசிறுவனின் உறவினரான முஸ்தபா பரஸ் தற்போது அவனின் பாதுகாவலராக காணப்படுகின்றார்

நாங்கள் 11 பேரை இழந்தோம் ஐந்து உடல்களை மாத்திரம் மீட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொறியியலாளரான அவர் தடுத்திருக்க கூடிய இந்த துயரம் குறித்து கடும்சீற்றம் வெளியிட்டுள்ளார்.

1973 இல் கட்டப்பட்ட லிபிய அணை 50 வருடங்களாக பராமரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த துயரத்திற்கு அலட்சியமும் ஊழலும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரழிவை சந்தித்துள்ள டெர்னாவின் பகுதியில் படையினர் மீட்பு பணிகளிற்கு தலைமை வகிக்கின்றனர்.

சிலவேளைகளில் அவர்களது நடவடிக்கைகள் சிறப்பானவையாக காணப்படுகின்றன

சிலவேளைகளில் எதிர்மறையான விளைவுகளை  ஏற்படுத்துகின்றன.

முதல் நாள் பெருமளவு படையினரின் பிரசன்னம் காணப்படவில்லை.

அன்று காலை விடிந்ததும் ஆயிரக்கணக்கான உடல்கள் கரையொதுங்கின வெள்ள நிவாரண குழுவே நடவடிக்கையில் ஈடுபட்டது.

அந்த குழுவில் செம்பிறை சங்கத்தினர் பொலிஸார் இராணுவத்தினர் மருத்துவர்கள் ஆகிய பலர் காணப்பட்டனர்.

ஐரோப்பாவில் பேரழிவை ஏற்படுத்திய டானியல் புயல் அது மத்தியதரை கடலை கடந்தவேளை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர்.

நாங்கள் கடலில் இருந்து வரும் வெள்ளத்திற்கு தயாராகயிருந்தோம் ஆனால்  பின்னாலிருந்த அணை உடைந்த வெள்ளமே பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என ஒருவர் தெரிவித்தார்.

முதல்நாள் காலை 1500 உடல்கள் கரையொதுங்கின- என தெரிவித்த அவர் நாங்கள் அனைவரும் கடற்கரைக்கு ஒடினோம் அது கிட்டத்தட்ட மங்கலாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04