ஆசிய கிண்ண இறுதிப்போட்டி: அணிகளுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை எவ்வளவு?

Published By: Sethu

17 Sep, 2023 | 02:53 PM
image

(ஆர்.சேதுராமன்)

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்­டியில் இலங்கை, இந்­திய அணிகள் இன்று மோத­வுள்­ளன. கொழும்பு ஆர்.பிரே­ம­தாச அரங்கில்  பிற்­பகல் 3.00 மணிக்கு இப்­போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இம்­முறை 16 ஆவது தட­வை­யாக ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி நடை­பெ­று­கி­றது.  ஏற்­கெ­னவே நடை­பெற்ற சுற்­றுப்­போட்­டி­களில் இந்­திய அணி 7 தட­வை­களும் இலங்கை அணி 6 தட­வை­களும் சம்­பி­ய­னா­கி­யுள்­ளன. 

நடப்புச் சம்­பி­ய­னான இலங்கை அணி 13 ஆவது தட­வை­யாக இறு­திப்­போட்­டியில் பங்­கு­பற்­று­கி­றது. இந்­திய அணி 11 தட­வை­யாக இறு­திப்­போட்­டியில் பங்­கு­பற்­று­கி­றது.

இவ்­வ­ருட ஆசிய கிண்­ணத்தைக் கைப்­பற்­று­வ­தா­னது,  சில வாரங்­களில் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிரிக்கெட் தொடரில் கள­மி­றங்­கு­வ­தற்கு பெரும் தன்­னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும். இதுவும் இன்­றைய இறு­திப்­போட்டி மீதான எதிர்­பார்ப்பை வெகு­வாக அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது.

இத்­தொ­டரின் சுப்பர் 4 சுற்றில், தசுன் ஷானக்க தலை­மை­யி­லான இலங்கை அணியை ரோஹித் சர்மா தலை­மை­யி­லான இந்திய அணி 41 ஓட்­டங்­களால் வென்­றி­ருந்­தது. இத்­தொ­டரில் இலங்கை தோல்­வி­யுற்ற ஒரே­யொரு போட்டி அது­வாகும்.

இத்­தொ­டரில் தனது முதல் 5 போட்­டி­க­ளிலும் வென்ற இந்­திய அணி வலி­மை­யான அணி­யாகத் தென்­பட்­டது. எனினும், அவ்­வணி தனது  கடைசி சுப்பர் 4 போட்­டியில் பங்­க­ளா­தே­ஷிடம் 6 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது.

2 இலட்சம் டொலர் பரிசு

இத்­தொ­டரில் சம்­பி­ய­னாகும் அணிக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன்  2 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 6.35 கோடி இலங்கை ரூபா) பணப்­ப­ரிசும் வழங்­கப்­படும்.  இரண்­டா­மிடம் பெறும் அணிக்கு ஒரு இலட்­சம் அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 3.17 கோடி இலங்கை ரூபா) வழங்­கப்­படும்.

காயங்கள்

இன்­றைய இறுதிப் போட்­டியில் மோதும் இரு அணி­களும் வீரர்­களின் காயங்­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 

இலங்கை அணியின் சுழற்­பந்­து­வீச்­சா­ள­ரான மஹீஷ் தீக் ஷன பாகிஸ்­தா­னு­ட­னான போட்­டி­யின்­போது,  காலில் காய­ம­டைந்தார். இதனால், இன்­றைய இறு­திப்­போட்­டியில் அவர் விளை­யாட மாட்டார். 

இத்­தொ­டரில் மஹீஷ் தீக் ஷன 233 ஓட்­டங்­க­ளுக்கு 8 விக்­கெட்­களை வீழ்த்­தி­யி­ருந்தார். இப்­போட்­டியில் அவர் விளை­யா­டாத போதிலும், எதிர்­வரும் உலக் கிண்ணப் போட்­டி­களில் அவர் விளை­யா­டுவார் என இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க நேற்று தெரி­வித்தார்.  

இதே­வேளை, நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷு­ட­னான போட்­டி­யின்­போது இந்­திய வீரர் அக்ஸார் பட்­டேலின் கையில் பந்து தாக்­கி­யதால், அவரின் கையில் வீக்கம் ஏற்­பட்­டுள்­ளது. 

இன்­றைய இறு­திப்­போட்­டியில் அவர் பங்­கு­பற்­று­வாரா என்­பது கேள்­விக்­கு­றி­யான நிலையில், வொஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணி நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. ஆசிய விளையாட்டு விழாவுக்கான இந்திய அணியுடன் பெங்களுருவில் பயிற்சிகளில் ஈடு­பட்டுவந்த வொஷிங்டன் சுந்தர், கொழும்பில் இந்திய குழாமுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09
news-image

ஐ.சி.சி. உலகக் கிண்ண சம்பியனுக்கு பணப்பரிசு...

2023-09-23 09:41:43
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட் - பாகிஸ்தான்...

2023-09-22 18:47:14
news-image

ஸ்பானிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்...

2023-09-22 14:41:38
news-image

தென்னாபிரிக்காவின் பிரதான பந்துவீச்சாளர்கள் இருவர் விலகல்

2023-09-22 12:52:23
news-image

இலங்கையின் முன்னாள் முதல்தர வீரர் உட்பட...

2023-09-21 17:19:19
news-image

ஆயிரம் போட்டிகளில் தோல்வியைத் தழுவாத ரொனால்டோ...

2023-09-21 17:16:44
news-image

தனுஸ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை முடிவு...

2023-09-21 12:12:15