(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் கடைசி சுப்பர் 4 போட்டியில் இந்தியாவுக்கு 266 ஓட்டங்களை வெற்றி இலக்காக பங்களாதேஷ் நிர்ணயித்துள்ளது.
அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் அவர்களிடையே 5ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட இணைப்பாட்டமும் பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தன.
பங்களாதேஷ் அணி ஒரு மாற்றத்துடனும் இந்திய அணி 4 மாற்றங்களுடனும் களம் இறங்கின.
பங்களாதேஷ் அணியில் மொஹமத் நய்முக்கு பதிலாக தன்ஸித் ஹசன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்திய அணியில் விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ப்ரசித் கிருஷ்ணா, மொஹமத் ஷமி ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைக் குவித்தது.
முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (13), லிட்டன் தாஸ் (0), அனாமுல் ஹக் (4), மெஹிதி ஹசன் மிராஸ் (13) ஆகிய நால்வரும் பிரகாசிக்கத் தவறினர்.
இதன் காரணமாக 14 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும் ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷக்கிப் அல் ஹசன் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் நசும் அஹ்மத் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
மெஹிதி ஹசன் 29 ஓட்டங்களுடனும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM