ஆய்வு சுற்றுப்பயணத்துக்காக இலங்கையின் உயர்மட்டக் குழுவினர் இந்தோனேசியாவுக்கு பயணம்

Published By: Vishnu

15 Sep, 2023 | 11:11 AM
image

தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சின் செயலளர் ஆர்.பீ.ஏ. விமலவீரவின் வழிகாட்டலின் கீழ் முற்தரப்பு உயர்மட்டக் குழுவொன்று கடந்த செப்டம்பர் 4 முதல் 7 வரையான காலப்பகுதியில் இந்தோனேசியா நோக்கி ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டனர். மேலும் இக்குழுவானது அந்நாட்டில் காணப்படும் வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான நடைமுறையில் காணப்படும் விடயங்களை தெரிந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து கற்றுக் கொண்ட விடயங்கள் நம் நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் வேலையின்மை காப்புறுதித் திட்ட முன்முயற்சிக்கு மிகவும் வலு சேர்க்கும் ஒரு விடயமாக அமையப் பெறும் என்பதோடு இத்திட்டமானது நாட்டுக்குள் மிகவும் நெகிழ்ச்சியானதும் நியாயமானதுமான தொழிலாளர் சந்தையொன்றினை அமைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்

இந்தோனேசியாவிலுள்ள பீ.பீ.ஜே.எஸ் கெட்டனககரஜன் (BPJS Ketenagakerjaan) எனும் நிறுவனமானது இந்த ஆய்வுச் சுற்றுப் பயணத்துக்கான முழு ஏற்பாட்டையும் அந்நாட்டில் ஏற்பாடு செய்திருந்தமை இங்கு விசேட அமைசமாகும். மேலும் இந்நிறுவனமானது அந்நாட்டில் விசாலமான சமூகப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் என்பதோடு தொழிலாளர் தொடர்பாகன பரந்துபட்ட விடயங்கள் குறிப்பாக தொழிலின்மை காப்புறுதி, தொழில் புரிதலின் போது ஏற்படும் பாதிப்புக்கயுக்கான இழப்பீடு மற்றும் வயது முதிர்ச்சியின் போதான காப்பீட்டுத் திட்டம் போன்ற விடயங்களில் செயற்படும் முன்னணியில் திகழும் ஒரு நிறுவனமாகும்.

இந்த முற்தரப்பு ஆய்வுக் குழுவில் தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு, தொழில் திணைக்களம், முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்களான இலங்கை சுதந்திர பணியாளர் சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரிதிநிதிகளும் பங்குபற்றினர்.

உலகிலுள்ள தொழிலாளர்களில் 18.6 வீதமான தொழிலிழந்த தொழிலாளர்கள் மாத்திரமே தொழிலின்மைக்கான காப்புறுதியில் உள்வாங்கப்பட்டுள்ளனர், இது சமூகப் பாதுகாப்பின் மிக சிறிதளவான கிளையாகவே கணிக்கப்படுகிறது (உலக சமூக பாதுகாப்பு அறிக்கை 2020). சமூக பாதுகாப்பில் முழுமையான தொழிலின்மைக்கான காப்புறுதி மிகவும் இன்றியமையாததாகும். 

இந்த ஆய்வு சுற்றுப்பயணமானது ஜப்பான் அரசின் நன்கொடையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சமூகப் பாதுகாப்பு வலையைமைப்பை உருவாக்குதல்” நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘இலங்கையில் தொழிலின்மைக்கான காப்புறுதி முறைமையை அபிவிருத்தி செய்தல்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40