'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மார்கழி திங்கள்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிட்டனர்.
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, சுசீந்திரன், அறிமுக நடிகர் ஷியாம் செல்வன், அறிமுக நடிகைகள் ரக்ஷனா மற்றும் நக்க்ஷா சரண், அப்புகுட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்ரமணி, ஷர்மிளா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியிலான காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுசீந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் தாத்தா -பேத்தி இடையேயான உறவும், வர்க்க வேறுபாடுகளுடன் கூடிய காதலும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரத்யேகமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதன்போது 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், கார்த்தி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஆர். கே. செல்வமணி, சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், ஜி தனஜெயன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இதன் போது பேசிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார், ''இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது அலைகள் ஓய்வதில்லை படத்தை மீண்டும் பார்த்தது போல் இருக்கிறது. மனோஜ் பாரதிராஜா அவருடைய விருப்பத்திற்கு ஏற்ற நீண்ட நாட்களுக்கு இயக்குநராகியிருக்கிறார். இந்தப் படத்தில் காதலுடன் வேறு ஏதேனும் விடயம் இருக்கும் என்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. புதுமுக நடிகர் நடிகைகளின் நடிப்பு நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் சிறந்த கலைஞர்களாக உயர்வார்கள். படத்திற்கும், படக் குழுவினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM