அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்குளி, காக்கைத்தீவு கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்  

14 Sep, 2023 | 06:45 PM
image

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு "இலங்கையை சுத்தப்படுத்துங்கள்" என்கிற தொனிப்பொருளில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி காலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளன. 

சர்வதேச அரிமா கழகம் 306 B 2 பிரிவினர் மற்றும் காக்கைத்தீவு கடற்கரைப் பூங்கா சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. 

பூமியின் பெருமளவு பரப்பினை கொண்டுள்ள கடல் மற்றும் சமுத்திரங்களில் இருந்து நாம் பெறும் இயற்கையான வளங்கள், செல்வங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. 

எனவே, கடல் மற்றும் சமுத்திரங்களையும் கடல் வளங்களையும் அதற்குள் வாழும் அரிய வகை உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு   மனிதர்களுக்கு உண்டு. 

எனினும், கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக், கடதாசிக் கழிவுகள் போன்ற குப்பைகளாலும், நிலம் சார்ந்த நடவடிக்கைகளாலும் கடலும் கடலோரப் பகுதிகளும் அசுத்தமடைந்துள்ளன. 

இதனை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக உலகளவில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமையன்று 'சர்வதேச கடலோர தூய்மை தினம்' கொண்டாடப்படுகிறது. 

அதன் அடிப்படையில், இவ்வருடம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் உலகளவிலும், குறிப்பாக இலங்கையிலும் கடைபிடிக்கப்படுகிறது. 

அன்றைய தினம் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை நாடெங்கும் உள்ள கடற்கரை பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40
news-image

கொழும்பில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் தேசிய...

2023-09-26 19:37:50