அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்குளி, காக்கைத்தீவு கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்  

14 Sep, 2023 | 06:45 PM
image

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு "இலங்கையை சுத்தப்படுத்துங்கள்" என்கிற தொனிப்பொருளில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி காலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளன. 

சர்வதேச அரிமா கழகம் 306 B 2 பிரிவினர் மற்றும் காக்கைத்தீவு கடற்கரைப் பூங்கா சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. 

பூமியின் பெருமளவு பரப்பினை கொண்டுள்ள கடல் மற்றும் சமுத்திரங்களில் இருந்து நாம் பெறும் இயற்கையான வளங்கள், செல்வங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. 

எனவே, கடல் மற்றும் சமுத்திரங்களையும் கடல் வளங்களையும் அதற்குள் வாழும் அரிய வகை உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு   மனிதர்களுக்கு உண்டு. 

எனினும், கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக், கடதாசிக் கழிவுகள் போன்ற குப்பைகளாலும், நிலம் சார்ந்த நடவடிக்கைகளாலும் கடலும் கடலோரப் பகுதிகளும் அசுத்தமடைந்துள்ளன. 

இதனை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக உலகளவில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமையன்று 'சர்வதேச கடலோர தூய்மை தினம்' கொண்டாடப்படுகிறது. 

அதன் அடிப்படையில், இவ்வருடம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் உலகளவிலும், குறிப்பாக இலங்கையிலும் கடைபிடிக்கப்படுகிறது. 

அன்றைய தினம் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை நாடெங்கும் உள்ள கடற்கரை பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10
news-image

சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது...

2025-01-11 18:24:17
news-image

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. யானை...

2025-01-10 19:02:55