இலங்கை சிக்குண்டிருப்பது அபிவிருத்தியின்மை பொறியே தவிர கடன்பொறி அல்ல ; கடன் மறுசீரமைப்புக்கு அப்பால் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் - சீனத் தூதுவர் சி சென்ஹொங்

Published By: Digital Desk 3

14 Sep, 2023 | 11:08 AM
image

(நா.தனுஜா)

இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை என்ற பொறிக்குள்ளேயே அது சிக்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

'அண்மையகால உயர்மட்ட விஜயங்களும், அவர்களின் இந்து சமுத்திரப்பிராந்தியம் சார்ந்த கோணங்களும்' என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி (புநழிழடவைiஉயட ஊயசவழபசயிhநச) என்ற அமைப்பினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போதே சீனத்தூதுவர் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகப்பிரதானி சாகல ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிஸுகோஷி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், 'இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை பொறிக்குள்ளேயே இலங்கை சிக்கியிருக்கின்றது. எனவே இப்போது இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி, எதிர்கால பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 'நாம் மோதலுக்குப் பதிலாக ஒத்துழைப்பைக் கோரவேண்டும். தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மையைக் கோரவேண்டும். நாம் பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தவேண்டும். அதேவேளை ஒருதரப்பினருக்கு மாத்திரம் நன்மையளிப்பதும், மற்றைய தரப்பினருக்குத் தீங்கை ஏற்படுத்துவதுமான விடயங்களைத் தவிர்க்கவேண்டும். நாம் ஏனையோரை சமத்துவமாக நடாத்தவேண்டும். ஏனைய தரப்பினரின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதுடன் வெளியகத்தரப்பினரின் அநாவசிய தலையீடுகளை முழுமையாக எதிர்க்கவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52
news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:51:06
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14