அடுத்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் போது பிரதான எதிர்கட்சி நிலைத்திருக்காது - ஐ.தே.க.

Published By: Vishnu

13 Sep, 2023 | 09:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடமாகும்போது நிலைத்திருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (13) இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறுமா என சிலர் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதார நிலையில்  எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும்  மக்களுக்கு தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் ஆரம்பாக நாங்கள் பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டு, தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தேடிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எந்தவொரு தேர்தலையும் நடத்த எங்களுக்கு முடியுமாக இருக்கும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் பழைய அரசியல் முறைமையில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றவோ அல்லது தொடர்ந்தும் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லவோ முடியாது. ஜனாதிபதியும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் நாங்கள் புதிதாச சிந்தித்து, சர்வதேசத்துடன் இணங்கிச்செல்ல முடியுமான வகையில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-

ஆனால் எதிர்க்கட்சி தொடர்ந்தும் பழைய அரசியல் முறைமைகளையே செயற்படுத்தி வருகிறது. அவர்களின் செயற்பாடுகள் தற்காலிகமானதாகும். எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் நாடு மீண்டும் கஷ்ட நிலைக்கே செல்லும். இவர்களின் இவ்வாறான நடவடிக்கை காரணமாக எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி அடுத்துவரும் தமிழ் சிங்கள புதுவருடமாகும்போது நிலைத்திருக்க முடியுாமல் இல்லாமல் போகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37