இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய கடப்பாடு இலங்கை அதிகாரிகளிற்குள்ளது என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடாநசீவ் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54வது அமர்வு இன்று ஆரம்பமானவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்
தேர்தல்களை நடத்துவதை தாமதிப்பதும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளை மறுசீரமைப்பதும் அரசியலில் பங்கெடுப்பது மற்றும் வாக்காளர்களின் சுதந்திரமான வெளிப்பாடு ஆகியவற்றிற்கான உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது.
அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி கொள்கைகள் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதன் கடப்பாடுகளால் வழிநடத்தப்படவேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைகளை மறுப்பது மக்கள் தங்கள் உண்மையான துயரங்களை வெளிப்படுத்துவதை ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதை தடுக்கும் இதனால் நாட்டில் மேலும் பதற்றம் உருவாகும்.
உண்மையை கண்டறிவது மாத்திரம் போதுமானதல்ல அதனுடன் பொறுப்புக்கூறலிற்கான தெளிவான அர்ப்பணிப்பும் இணைந்திருக்கவேண்டும்.
சர்வதேச தற்காலிக சிறப்பு நீதிமன்றங்கள் மூலமும்இதனை முன்னெடுக்கவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சுயாதீன வெளிப்படையான ஒரு பின்தொடர்தல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தொடர்ச்சியாக இலங்கைக்கு பரிந்துரை செய்து வந்துள்ளார்.
இதனனை முழுமையான சர்வதேச மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM