குவைத்தில் சிக்கி தவித்த தாய் 3 குழந்தைகளுடன் மீண்டும் இணைந்தார்

Published By: Digital Desk 3

11 Sep, 2023 | 11:07 AM
image

குவைத்தில் வேலை இன்றி சிக்கி தவித்த மூன்று பிள்ளைகளின் தாய் நாடு திரும்பிய நிலையில், எவ்வித பாதுகாப்பும் இன்றி இருந்த பிள்ளைகளுடன் இணைந்தார்.

குவைத்தில் இருந்து தாய் நாடு திரும்புவதற்கு உதவுமாறு மூன்று குழந்தைகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து,  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 24 மணித்தியாலத்திற்குள் குறித்த தாய் தனது பிள்ளைகளுடன் மீண்டும் இணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற வசனா பெர்னாண்டோ என்ற தாய்க்கு வேலை வழங்க மறுத்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் அறையில் தங்க விடப்பட்டிருந்தார். 

அவர் தனது மூன்று குழந்தைகளை தனது தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற நிலையில், தாய் புற்றுநோயால் இறந்துள்ளார்.

இந்நிலையில், 15 வயது மகன், ஏழு வயது மகள் மற்றும் 5 வயது மகன் ஆகியோர் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பாழடைந்த குடிசையில் வசித்து வந்துள்ளனர்.

இவர்களது கோரிக்கை தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார, அவர் நாடு திரும்புவதற்கு இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தனது இக்கட்டான நிலையை எடுத்துரைத்த ஊடகங்களுக்கும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததற்கும் வாசனா தனது நன்றியைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04
news-image

எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்வதில் இலங்கை...

2023-12-01 17:20:46
news-image

நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்த எதிர்க்கட்சித்...

2023-12-01 19:33:37
news-image

தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை...

2023-12-01 19:28:21