குவைத்தில் சிக்கி தவித்த தாய் 3 குழந்தைகளுடன் மீண்டும் இணைந்தார்

Published By: Digital Desk 3

11 Sep, 2023 | 11:07 AM
image

குவைத்தில் வேலை இன்றி சிக்கி தவித்த மூன்று பிள்ளைகளின் தாய் நாடு திரும்பிய நிலையில், எவ்வித பாதுகாப்பும் இன்றி இருந்த பிள்ளைகளுடன் இணைந்தார்.

குவைத்தில் இருந்து தாய் நாடு திரும்புவதற்கு உதவுமாறு மூன்று குழந்தைகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து,  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 24 மணித்தியாலத்திற்குள் குறித்த தாய் தனது பிள்ளைகளுடன் மீண்டும் இணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற வசனா பெர்னாண்டோ என்ற தாய்க்கு வேலை வழங்க மறுத்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் அறையில் தங்க விடப்பட்டிருந்தார். 

அவர் தனது மூன்று குழந்தைகளை தனது தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற நிலையில், தாய் புற்றுநோயால் இறந்துள்ளார்.

இந்நிலையில், 15 வயது மகன், ஏழு வயது மகள் மற்றும் 5 வயது மகன் ஆகியோர் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பாழடைந்த குடிசையில் வசித்து வந்துள்ளனர்.

இவர்களது கோரிக்கை தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார, அவர் நாடு திரும்புவதற்கு இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தனது இக்கட்டான நிலையை எடுத்துரைத்த ஊடகங்களுக்கும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததற்கும் வாசனா தனது நன்றியைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 10:59:21
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17