சனல் 4 தமிழ் மக்களுக்கும் வெளிகளைத் திறக்குமா?

Published By: Vishnu

10 Sep, 2023 | 06:03 PM
image

சி.அ.யோதிலிங்கம்

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 54 ஆவது கூட்டத் தொடர் திங்கட்கிழமை 11ஆம் திகதி ஆரம்­ப­மாக இருக்­கி­றது. அதற்கு முன்­னரே மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெளி­யிட்­டுள்ளார். அந்த அறிக்­கையில் போர்க்­குற்றம் தொடர்­பாக புதிய விட­யங்கள் பெரி­தாக இல்லை. பழைய விட­யங்கள் தான். இலங்கை அரசின் மீது அழுத்­தமும் பெரி­ய­ள­வுக்கு பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது எனக் கூற முடி­யாது. அதி­ருப்­திகள் மட்­டுமே தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அதிலும் போர்க்­குற்ற விவ­கா­ரங்கள் ஒரு பகுதி தான்.  தென்­னி­லங்­கையின் ஏனைய மனித உரிமை விவ­கா­ரங்­க­ளான உயிர்த்­த­ஞா­யிறு, அதி­கார துஷ்­பி­ர­யோகம், ஊழல் என்­பன பற்­றியே அதிகம் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளன. போர்க்­குற்ற விவ­கா­ரத்தை இலங்கை விவ­கா­ரத்தின் சிறிய பகு­தி­யாக்­குதல் என்­பதில் மேற்­கு­லக சக்­திகள் கவ­ன­மாக இருக்­கின்­றன என்­ப­தையே இவை வெளிக்­காட்­டு­கின்­றன. அதா­வது சிறுப்­பித்துக் காட்டல் என்ற தத்­தி­ரோ­பாயம் இங்கு பின்­பற்­றுப்­ப­டு­கின்­றது.  இது எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்று தான்.

 யுத்தம் முடி­வ­டைந்து 14 வரு­டங்­க­ளா­கியும் உண்மை வெளிக்­கொ­ண­ரப்­பட்டு, நீதி கிடைக்­கா­த­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வேத­னைப்­ப­டு­கின்­றனர். எந்­த­வொரு நிலை­மாறுகால ­நீதிச் செயன்­மு­றையும் வெற்­றி­ய­டை­வ­தற்கு உண்­மை­யான முயற்­சி­க­ளினால் அடித்­தளம் அமைக்­கப்­படல் வேண்டும். அதற்­கான அர­சியல் விருப்­புத்­தேவை, அர­சியல் போராட்டம் சிறந்த நிர்­வா­கத்­தையும் சக­ல­ரையும் உள்­ள­டக்­கிய தொலை­நோக்­கையும் கோரி­யி­ருந்­தது. அதா­வது சமூக ஒப்­பந்­தத்தை புதுப்­பிக்கக்  கோரி­யுள்­ளது. என்­கின்ற விட­யங்­களே கூறப்­பட்­டுள்­ளன.

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை ஆணை­யா­ளரின் அறிக்­கையை விட சனல்–-4 அறிக்கை தான் இலங்­கையின் அர­சியல் களத்தை பர­ப­ரப்­பாக்­கி­யுள்­ளது. சுருங்கக் கூறின் ஆணை­யா­ளரின் அறிக்­கையை விட சனல்-–4 மேல் நிற்­கின்­றது எனலாம்.  முன்­னைய அறிக்­கை­க­ளுடன் ஒப்­பிடும் போது இது காரம் குறைந்­தது தான்.

   முன்­னைய அறிக்கை குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு பாரப்­ப­டுத்­துதல், நாடுகள் தங்கள் நீதி­மன்­றங்­களில் விசா­ரித்தல் போன்ற விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யி­ருந்­தன. அவை எதுவும் புது அறிக்­கையில் இல்லை. ஐ.நா மனித உரி­மைகள் பேரவை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­ல­கத்தின் நிகழ்ச்சி நிரலை நகர்த்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒன்று தான். அந்த வகையில் சர்­வ­தேச அர­சி­ய­லுக்கு அது கட்­டுப்­பட்­ட­துதான். சர்­வ­தேச அர­சியல் தூக்கச் சொன்னால் தூக்கும். இறக்கச் சொன்னால் இறக்கும். என்ற நிலை­யி­லேயே ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உள்­ளது.

குறிப்­பாக மேற்­கு­லகின் நலன்­க­ளைத்தான் அது அதிகம் உயர்த்­திப்­பி­டிக்கும்.  உக்ரேன் விவ­கா­ரத்தை உயர்த்­திப்­பி­டிக்­கின்ற மனித உரி­மைகள் பேரவை தமிழர் விவ­கா­ரத்தை தாழ்த்திப் பிடிக்கும். உக்ரேன் விவ­காரம் உட­ன­டி­யா­கவே குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழர் இன அழிப்பு பரா­மு­க­மாக உள்­ளது.

தமிழ் இன அழிப்பு விவ­கா­ரத்தை அது கிடப்­பிலும் போடாது, மேலேயும் தூக்­காது என்­பதே இன்­றைய நிலை. இங்கு தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மான விடயம் மனித உரி­மைகள் பேரவை போர்க்­குற்ற விவ­கா­ரக்­கோ­வையை மூடாது என்­பதே. இலங்கைத் தீவில் புவிசார் அர­சி­யலும், பூகோள அர­சி­யலும் இருக்கும் வரை கோவையை அது மூடப்­போ­வ­தில்லை. தேவைக்­கேற்ப அதனை பயன்­ப­டுத்­தவே பார்க்கும். மறு­பக்­கத்தில் இலங்கை மீதான இந்­திய நலன்­களை மீறியும் அது செயற்­ப­டப்­போ­வ­தில்லை. எதிலும் பிராந்­தியக் குறுக்­கீடு என்­பது தமிழ் மக்­களின் தலை­விதி.

உக்ரேன் விவ­கா­ரத்தில் இவ்­வா­றான பிராந்­திய வல்­ல­ரசுக் குறுக்­கீடு இருக்­க­வில்லை. அதனால் நினைத்­ததைச் செய்யும் சூழல் மேற்­கு­ல­கிற்கு இருந்­தது. அங்கு அனைத்­தையும் செய்ய முடிந்த மேற்­கு­ல­கிற்கு இங்கு அனைத்­தையும் செய்ய முடி­யாது. கவிஞர் சேரன் தனது கவி­தையில் குறிப்­பிட்­டது போல 'இந்­தி­யாவின் நுனியில் இலங்­கையை ஏன் வைத்தாய்' என கேட்­பதைத்தவிர வேறு தெரி­வில்லை.

ரணில் மேற்­கு­லகின் மிகப்­பெ­ரிய சொத்து. அவரைப் போல மேற்­கு­லக விசு­வா­சியை இலங்­கையில் காண முடி­யாது. எனவே, ரணில் அர­சாங்­கத்தை பல­வீ­னப்­ப­டுத்த அவை என்­றைக்கும் விரும்­பப்­போ­வ­தில்லை.

தென்­னி­லங்கை விவ­கா­ரத்தில் கூட ரணிலின் ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களை மேற்­கு­லகம் கண்­டு­கொள்­ளப்­போ­வ­தில்லை. ராஜ­ப­க் ஷர்கள் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வங்­கு­ரோத்து அடையச் செய்­தார்கள்  என்றால் ரணில் இலங்­கையின் ஜன­நா­யக நிறு­வ­னங்­க­ளையே இல்­லாமல்  செய்­கின்றார். அவர் தேர்தல் எவற்­றையும் நடத்த மாட்டார். அது தொடர்­பான உயர்­நீ­தி­மன்றக் கட்­ட­ளை­க­ளையும் மதிக்க மாட்டார், அர­சியல் யாப்பு ஏற்­பா­டு­களை தான் நினைத்­த­வாறு மீறுவார். ஜன­நா­யகப் போராட்­டங்­களை மிரு­கத்­த­ன­மாக அடக்­குவார். இவை எவற்றையும் மேற்­கு­லகம் கண்­டு­கொள்ளப் போவ­தில்லை.  

ரணில் இல்­லை­யென்றால் 'இந்தோ பசுபிக்' மூலோ­பா­யத்­திட்­டத்தை ஒரு சிறிது கூட மேற்­கு­ல­கத்தால் நகர்த்த முடி­யாது. சீனா மாத்­தி­ர­மல்ல பெருந்­தே­சிய வாதமும் 'இந்தோ பசுபிக்' திட்­டத்­திற்கு சாத­க­மாக இல்லை. பெருந்­தே­சிய வாதம் மேற்­கு­லக எதிர்ப்பு, இந்­திய எதிர்ப்பு, தமி­ழின எதிர்ப்பு என்­கின்ற தூண்­க­ளினால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­ட­மையே இதற்குக் கார­ண­மாகும்.

 கள யதார்த்தம் கார­ண­மாக சீனாவின் 'பட்டுப் பாதை' திட்­டத்­திற்கு ரணில் குறிப்­பிட்­ட­ளவு இடம் கொடுப்பார். அதனை மேற்­கு­லகம் குறிப்­பிட்ட நிலை வரை சகித்துக் கொள்ளும்.

ஆனால், மேல்­நிலை பெறு­வதை எப்­ப­டியும் தடுக்­கவே பார்க்கும். இந்­தி­யாவைப் போல இலங்கைத் தீவில் தேசிய பாது­காப்பு பிரச்­சினை மேற்­கு­ல­கத்­திற்கு குறைவு. சீனா ஆதிக்கம் தொடர்­பாக இந்­தியா கொஞ்சம் பாயும் தான். ஆனால் சோடா போத்தல் கேஸ் போல உட­னேயே அடங்­கி­விடும். சீனக்­கப்பல் விவ­கா­ரத்தில் அடங்­கி­னது போல.

இலங்­கைத்­தீவின் கள யதார்த்­தமும், சீன வர்த்­தக நலன்­களும். எல்லை விவ­கா­ரங்­களும் இந்­தி­யாவை எப்­போதும் கட்­டியே வைத்­தி­ருக்கும். இதனால் நேரடி நட­வ­டிக்­கை­களை விட மறை­முக நட­வ­டிக்­கை­க­ளி­லேயே இந்­தியா அதிக கவனம் செலுத்தும். மறை­முக நெருக்­க­டி­க­ளையே கொடுக்கும். இலங்­கைத்­தீவில் பிடுங்­கக்­கூ­டி­ய­வற்றை பிடுங்க பார்க்­கும். தன்னால் முடிந்­த­ளவு இலங்­கைத்­தீவின் பிர­தே­சங்­களை தனது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருக்கப் பார்க்கும். இதைத்­த­விர வேறு எதையும் இப்­போ­தைக்கு செய்­யப்­போ­வ­தில்லை.

ரணில் உள்ளூர் சட்ட ஒழுங்­கு­களை மாத்­தி­ர­மல்ல  சர்­வ­தேச சட்ட ஒழுங்­கு­க­ளையும் தான் நினைத்­த­படி மீறுவார். பிராந்­திய சர்­வ­தேச சக்­திகள் இதனை வேடிக்­கையே பார்க்கும். இலங்கை ஆட்­சி­யா­ளர்கள் முதலில் தமிழ் மக்கள் சார்­பான சட்ட ஒழுங்­கு­க­ளையே மீறினர். பின்னர் இலங்­கைத்­தீவின் முழு மக்­க­ளுக்­கு­மான சட்ட ஒழுங்கை மீறினர்.

தற்­போது சர்­வ­தே­ச­மட்ட ஒழுங்­கு­க­ளையும் மீறு­கின்­றனர். நாடு­க­ளுக்கு இடை­யே­யான ஒப்­பந்­தங்கள் சர்­வ­தேச சட்ட அந்­தஸ்தை பெற்­றவை. இலங்கை, தான் நினைத்த மாதிரி அதனை மீறு­கி­றது. இலங்கை –- இந்­திய ஒப்­பந்­தத்தை மீறு­கின்­றது. இந்­தி­யா­வு­ட­னான துறை­முக ஒப்­பந்­தத்தை மீறு­கி­றது. ஜெனிவா வாக்­கு­று­தி­களை மீறு­கி­றது. வல்­ல­ர­சுகள் இவற்றை வேடிக்கை பார்க்­கின்­ற­னவே தவிர எவற்­றையும் செய்­வ­தில்லை.  

வல்­ல­ர­சுகள் நேர­டிப்­போரில் இறங்கும் நிலை தற்­போது இல்லை. அல்­லது மிகக்­கு­றைவு எனக் கூறலாம். அனைத்­துமே மறை­முகப் போர் தான். அதா­வது இரா­ஜ­தந்­திர போர் தான்.  தமிழ்த்­த­ரப்பு இத­னையும் புரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­னது

சீன– - இந்­திய முரண்­பாடு முழு­மை­யான பகை நிலைக்கு செல்­லாது. அதே­வேளை முழு­மை­யான நட்பு நிலைக்கும் செல்­லாது. முழு­மை­யான பகைக்கு வர்த்­த­கப்­பா­து­காப்பு, எல்லை நலன்கள் விடாது. முழு­மை­யான நட்பு நிலைக்கு செல்­வ­தற்கு புவிசார் அர­சியல் நலன்கள் விடாது. அதனால் நட்­பு­மற்ற, பகை­யு­மற்ற அர­சியல் அணு­கு­மு­றை­யி­னையே இந்­தியா பின்­பற்றும். இதனால் தான் 'குவாட்' அமைப்பில் பங்கு வகிக்­கின்ற அதே வேளை 'பிறிக்ஸ்' அமைப்­பிலும் பங்­கா­ளி­யா­கின்­றது. சீனாவின் மேலா­திக்­கத்தை சம­நி­லைப்­ப­டுத்த ‘குவாட்' அமைப்பு தேவை.

அதே­வேளை பொரு­ளா­தார நலன்­க­ளுக்கும் சர்­வ­தேச பூகோள நலன்­க­ளுக்கும்  'பிறிக்ஸ்'அமைப்பு அதற்கு தேவை.

உக்ரேன் போரினால் மேற்­கு­லக பொரு­ளா­தாரம் பல­வீ­னப்­பட்­டது. மாறாக, இந்­தியப் பொரு­ளா­தாரம் வளர்ச்சி கண்­டது. ரஷ்­யா­விடம் குறைந்த விலையில் எரி­பொ­ருட்­களை வாங்கி கூடிய விலையில் சர்­வ­தேச சந்­தை­களில் விற்­க­வெல்லாம் அதனால் முடிந்­தது. இந்­தி­யாவில் மேற்­கு­லக நலன்கள் நிரம்பிக் கிடப்­பதால் இந்­தியா மீது நெருக்­க­டிகள் எவற்­றையும் அவை கொடுக்­கப்­போ­வ­தில்லை.

தமிழ்த்­த­ரப்பு இந்தப் புதிய சூழலை முழு­மை­யாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மான வெளிகள் இச்­சூ­ழலில் இருக்­கின்­றன. அவற்றை முதலில் அடை­யாளம் காண வேண்டும். பின்னர் தகுந்த மூலோ­பாய, தந்­தி­ரோ­பாய திட்­டங்­க­ளுடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். இலங்­கைத்­தீவை மைய­மாகக் கொண்ட புவிசார் அர­சியல் ஒரு சாத­க­மான வெளி.  ஜெனிவா, கோவையை மூடாது என்­பது சாத­க­மான வெளி.  பொரு­ளா­தார நெருக்­கடி சாத­க­மான வெளி. அதே போல பெருந்­தே­சி­ய­வா­தமும் சாத­க­மான வெளி தான். இந்த வெளி­களை ஒருங்­கி­ணைத்து எவ்­வாறு முன்­னே­று­வது என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும்.

இங்­கே­யுள்ள பிர­தான பிரச்­சினை யார் முன்­னெ­டுப்­பது என்­பது? இன்று இதனை முன்­னெ­டுக்கும் ஆற்றல் தனித்­த­ரப்­பு­க­ளிடம் இல்லை. எனவே உட­ன­டி­யாக ஒருங்­கி­ணைந்த அமைப்பு ஒன்றை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். அத­னூ­டாக விவ­கா­ரங்­களை  கையாள முயல வேண்டும். தனித்­த­னி­யான அணு­கு­மு­றை­களை சர்­வ­தேச அர­சியல் கணக்­கெ­டுப்­ப­தில்லை.

பேரம் பேசும் பலத்­தையும்  தனித்த செயற்­பா­டு­க­ளினால் உரு­வாக்க முடி­யாது. தமிழ் மக்­களின் அர­சியல் கோரிக்­கை­களை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச தரப்­புகள் ஒருங்­கி­ணைவு அர­சி­யலை விரும்ப மாட்டாது. எனினும் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

இந்­தியக் குறுக்­கீடு, சிங்­க­ளத்தை தாஜா பண்ண வேண்­டிய நிலையில் வல்­ல­ர­சுகள் இருத்தல், அர­சு­க­ளுக்­கி­டை­யே­யான உற­வுகள் என்­பன பாத­க­மான நிலை தான். சாத­க­மான வெளி­களைக் கொண்டு பாத­க­மான நிலை­க­ளுக்கு முகம் கொடுக்கத் தயாராக வேண்டும்.

சனல் - 4 எழுப்பியுள்ள புதிய அலை தமிழ்த்தரப்பிற்கு மேலும் சாதகமான வெளிகளைத் திறந்து விடலாம். இங்கே ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்தும் திட்டம் இருப்பது போலத் தெரிகிறது. ராஜபக் ஷர்களை கட்டுப்படுத்துதல், சீன மேலாதிக்கத்தை கட்டுப் படுத்துதல் பெருந்தேசிய வாதத்தைக் கட்டுப்படுத்துதல் என்கின்ற மூன்று முக்கிய மாங்காய்கள் முக்கிய இலக்காக இருப்பது போலத் தெரிகிறது. ராஜபக் ஷர்கள் பெருந்தேசியவாதத்திற்குள்ளும், சீன அரணுக்குள்ளும் பாதுகாப்பு தேடுவதை மேற்குலகம் அனுமதிக்கப்போவதில்லை.

தற்போது தென்னிலங்கை, சனல் - 4 விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு சாதகமான விடயம். போர்க்குற்ற விவகாரம் சர்வதேச விசாரணைக்கு செல்வதையும் இது சாத்தியப்படுத்தப் பார்க்கும். ராஜபக் ஷர்கள், பெரும்தேசியவாதம், சீன மேலாதிக்கம் போன்ற இம்மூன்று பெரும் தூண்களை கட்டுப்படுத்தப்படாமல் 'இந்தோ –பசுபிக் மூலோபாயத்திட்டம்' ஒரு அடி கூட நகர முடியாது.

இன்னும் என்னென்ன அதிசயங்கள் நிகழப்போகின்றதோ?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தங்களும் உள்வீட்டு சவால்களும்

2025-04-23 17:50:20
news-image

புதுப்பிக்கப்பட்ட கூட்டணி ; அண்ணா தி.மு.க.வுக்கு...

2025-04-23 09:36:25
news-image

மூன்று மாத கால அவகாசத்தில் இலங்கை...

2025-04-22 14:14:15
news-image

ஒரு துறையைத் தவிர ஏனைய சகல...

2025-04-22 12:13:58
news-image

முதுமையில் இளமை சாத்தியமா?

2025-04-22 09:36:33
news-image

அடுத்த பாப்பரசர் யார் ? பிரான்சிஸின்...

2025-04-21 17:34:19
news-image

பாப்பரசரின் மறைவுக்குப் பின் நடைபெறப்போவது... !...

2025-04-21 16:23:25
news-image

புதிய குடிவரவு ‘ஒடுக்கு முறை’ சட்டங்களும்,...

2025-04-20 21:24:37
news-image

தமிழ்த் தேசியவாதத்தின் பெயரில் எதிர்காலத்தை உள்ளூராட்சி...

2025-04-20 17:29:55
news-image

என்.பி.பி.யின் கனவு பலிக்­குமா?

2025-04-20 15:53:10
news-image

ஈஸ்டர் தாக்­குதல் : வில­குமா மர்­மங்கள்?

2025-04-20 15:52:01
news-image

இந்­தி­யாவின் மூலோ­பாய மாற்றம்

2025-04-20 15:28:07