இன்றைய காலகட்டத்தில் அலுவலகத்தில் பணியாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நரம்பு சார்ந்த வலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் 7 - 8 சதவீத மக்களுக்கு நரம்பியல் வலி இருப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
நரம்பு சார்ந்த வலி என்பது நரம்பியல் திசுக்களில் ஏற்படும் காயம் அல்லது அதில் ஏற்படும் ஏதேனும் பிரச்சினையின் பக்க விளைவாக உருவாகிறது. இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இடுப்பு பகுதியில் வலி, தோள்பட்டை பகுதியில் வலி, தசை கூட்டு வலி, தாடை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, இதுபோன்ற பகுதிகளில் தீவிர வலி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குத்துவது போன்ற உணர்வு... முதலான அறிகுறிகள் ஏற்பட்டால் நரம்பியல் பாதிப்பின் காரணமாக வலி ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
வேறு ஏதேனும் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் காரணமாகவோ அல்லது நரம்பியல் பகுதிகளில் உண்டாகும் அழுத்தம் காரணமாகவோ இத்தகைய வலி உண்டாகிறது. மேலும் சில தொற்றுகள் காரணமாகவும், வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாகவும், நாளங்களில் ஏற்பட்ட சிதைவின் காரணமாகவும் இந்த வலிகள் உண்டாகின்றன.
இவர்களுக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை அல்லது திசு பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
வலியை நீக்குவதற்கு முதன்மையான நிவாரண சிகிச்சையாக ஸ்டீரொய்ட் மருந்தியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு சிலருக்கு இத்தகைய சிகிச்சையுடன் உடற்பயிற்சி, அறிவுத்திறன் மற்றும் நடத்தை சிகிச்சை, தியானம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சிகிச்சைகளின் மூலமாக நிவாரணம் அளிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM