இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு இருப்பு நாள் ஒதுக்கப்பட்டமை ஆச்சரியத்தை தருகிறது என்கின்றனர் சில்வர்வூட், ஹத்துருசிங்க

09 Sep, 2023 | 11:07 AM
image

(நெவில் அன்தனி)

இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டிக்கு இருப்பு நாள் (Reserve Day) ஒதுக்கபட்டுள்ளது குறித்து உண்மையிலேயே ஆச்சிரியப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் வெள்ளிக்கிழமை (08) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

பல அணிகள் பங்குபற்றும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இடைநடுவில் இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு மாத்திரம் இருப்பு நாள் வழங்க திடீர் முடிவு எடுக்கப்பட்டது குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என கிறிஸ் சில்வர்வூடிடம் கேட்டபோது,

'நேர்மையாக சொல்வதென்றால், இந்த அறிவிப்பை கேட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் போட்டிகளை நாங்கள் ஏற்பாடு செய்வதில்லை.. ஆகையால் அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பு நாளில் போட்டியில் முடிவு ஏற்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டால்தான் ஒரே ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால் அதுபற்றி கரிசனை கொள்ளாமல் தொடர்ந்து எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து எமது அணி கவனம் செலுத்தும்' என்றார்.

இதே கேள்விக்கு பதிலளித்த சந்திக்க ஹத்துருசிங்க, 'இந்த விடயம் பெரும் ஆச்சரியத்தை தருகிறது. பல அணிகள் பங்குபற்றும் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து இப்போதுதான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். ஆனால், அது பற்றி எம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அது போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் எடுத்த தீர்மானம்' என பதிலளித்தார்.

இது இவ்வாறிருக்க, ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பாளர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு இருப்பு நாள் ஒதுக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.

இன்றைய போட்டி

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த முக்கிய போட்டியில் இரண்டு அணிகளும் தத்தமது வெற்றிகளுக்காக முயற்சிக்கும் என இரண்டு அணிகளினதும் பயிற்றுநர்கள் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04