கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் கால்வாய்கள், அணைகள் மற்றும் குட்டைகளை புனரமைக்கும் திட்டத்திற்காக திறைசேரியால் 595 மில்லியன் ரூபா நிதி இலங்கை காணி மீட்பு கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, திறைசேரி இந்த பணத்தை ஒதுக்கியுள்ளது.
கொழும்பு நகரின் பிரதான கால்வாய் அமைப்பு 44 கி.மீ. இந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களில் பெரும்பாலானவை ஜப்பபான் கோர்ஸ் புல் மற்றும் துர்நாற்றம், சேற்று மண், பிளாஸ்டிக் போத்தல்கள், பியர் கேன்கள், செருப்புகள், சுகாதார பொருட்கள், கழிவுநீர் மற்றும் எண்ணெய் போன்ற ஆக்கிரமிப்பு களைகளால் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், மிகக் குறைந்த மழை பெய்தாலும் கொழும்பு நகரின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கும்.
எனவே, கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதான கால்வாய் அமைப்பு, நீர்த்தேக்கங்கள் மற்றும் அதனை அண்மித்துள்ள உடற்பயிற்சி நடை பாதைகள், குட்டைகள், பூங்காக்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி கொழும்புக்கு அருகில் வத்தளை நகரின் ஊடாக பாயும் ஹமில்டன் கால்வாயின் புனரமைப்பு இங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. ஹமில்டன் கால்வாய் 14.3 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. நீர்கொழும்பு களப்பிலிருந்து களனி கங்கையின் முகத்துவாரம் வரையிலும், நீர்கொழும்பு களப்பிலிருந்து மஹா ஓயா வரையிலும் இந்த கால்வாய் பராமரிக்கப்பட உள்ளது.
நீரின் மேற்பரப்பில் உள்ள நீர்வாழ் தாவரங்களை அகற்றுதல், கால்வாய் கரைகளை பராமரித்தல், கால்வாயில் உள்ள சேற்று மண்ணை அகற்றுதல், அந்த சேற்றை பொருத்தமான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், கால்வாய் கரைகளை கேபியன்கள் (Gabion) மூலம் பாதுகாத்தல், தேவையற்ற செடிகளை அகற்றுதல், குப்பை கழிவுகளை சுத்தம் செய்தல் போன்றவை. மேற்கொள்ளப்படவுள்ளது.
வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் கொழும்பு நகரையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க இந்த கால்வாய்கள் மற்றும் குட்டைகளை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இதற்கு பொது மக்களின் முழு ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
இந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் போது அவற்றின் அசல் இடத்தை சேதப்படுத்த வேண்டாம் என்றும், அவற்றில் வாழும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செடிகளை அகற்றாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கால்வாய்களின் பராமரிப்பு பணிகள் இலங்கை காணி மீட்பு கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஒருகொடவத்தை (கொழும்பு வடக்கு), நாவல கிரிமண்டல மாவத்தை (கொழும்பு கிழக்கு), கிருலப்பனை (கொழும்பு தெற்கு) மற்றும் முத்துராஜவெல (நீர்கொழும்பு) ஆகிய 4 முக்கிய பிரதேச அலுவலகங்களின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், பத்தரமுல்லை - தியத்த உயன, மாதிவெல - கிம்புலாவெல மற்றும் பெல்லன்வில ஆகிய அபிவிருத்தி செய்யப்பட்ட வளாகங்களில் அமைந்துள்ள உப அலுவலகங்கள் கால்வாய் பராமரிப்புப் பணிகள் மற்றும் நகரத்தை அழகுபடுத்தும் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM