உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பதற்கு எதிர்க்கட்சி சபையில் எதிர்ப்பு

Published By: Vishnu

06 Sep, 2023 | 05:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அரசாங்க நிதிக்குழுவில் கலந்துரையாடாமல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருந்தது. என்றாலும், குறித்த சட்டமூலம் அரசாங்க நிதிக்குழுவில் ஆராயப்படாமல் சபையில் விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க நிதி குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில்,

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக நிதிக்குழுவில் இன்னும் கலந்துரையாடவி்ல்லை. குறித்த சட்டமூலம் தொடர்பாக  எந்த பகுப்பாய்வையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அப்படியானால் அரசாங்க நிதிக்குழுவை ஓரங்கட்டி இதனை மேற்கொள்ளவா முயற்சிக்கிறது?

அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பான தகவல்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கேட்டோம். நேற்று வரை எமக்கு கிடைக்கவில்லை. தரவுகள் எதுவும் இல்லாமல் சட்டமூலத்தை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என கேட்கிறோம் என்றார்.

அதனை தொடர்ந்து வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில்,

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை உடனடியாக நிறைவேற்ற தவறினால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால், இந்த சட்டத்தை நிறைவேற்றுவதால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதி சிந்திப்பதில்லை. அதனால் அரசாங்க நிதிக்குழுவில் ஆராயாமல் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றார்.

அதனைத் தாெடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,

எந்த சட்டமூலமும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்ந்து அதன் அனுமதி கிடைத்த பின்னரே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நாங்கள் இந்த சபையில் தீர்மானம் மேற்கொண்டோம். அதனால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03
news-image

யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த...

2026-01-24 14:06:24