8 நோயாளர்களுக்கு H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிலை வைத்திய ஆய்வு பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைமூலம் குறித்த 8 நோய் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதம வைத்திய பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நோய் தொற்றுடையவர்களாக சந்தேகிக்கப்படும் 28 இலிருந்து 30 வரையான நோயாளர்கள் தொடர்ச்சியான சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக குறித்த வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு நோய்க்கான அறிகுறியாக தொடர்ச்சியான இருமல், தலைவலி, வயிற்றோட்டம், உடம்புவலி மற்றும் தொண்டை வலி என்பன தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களில் கர்ப்பிணி பெண்கள், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீண்டகாலமாக புற்று நோய், நீரிழிவு நோய், மற்றும் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் H1N1 நோய் தொற்றை வேகமாக பெறக்கூடியவர்களாக, இனம்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM