(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் யாழ். மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மூவர் தம்புள்ளை அணிக்காக விளையாடி யாழ். மாவட்டத்துக்கும் வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் மாகாண கிரிக்கெட் போட்டிகளில் ஒரே நேரத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் ஒரு அணியில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். மத்திய கல்லூரி வீரர் ஜே. ஆர். நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் ஜெயச்சந்திரன் அஸ்நாத் ஆகிய மூன்று யாழ். வீரர்களே தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்தனர்.
இந்த மூவரும் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
வலதுகை லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான ஆகாஷ், கடந்த வருடம் 15 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண போட்டியில் தம்புள்ளை அணிக்காக விளையாடியவராவார்.
நியூட்டன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதுடன் அஸ்நாத் சைனாமன் பந்துவீச்சாளர் ஆவார்.
இந்த மூவரும் திறமையாக பந்துவீசியதாகவும் அவர்கள் மூவரும் வருங்காலத்தில் சிறந்த நிலையை அடைவர் எனவும் இலங்கை இளையோர் அணி தேர்வாளர் ரஞ்சன் பரணவித்தான தெரிவித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த், வி. டினோஷன் ஆகிய இருவரும் தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்தனர்.
தற்போது அவர்கள் இருவரும் முதல் தர கழக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
அவர்களில் வியாஸ்காந்த் கடந்த 4 லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயங்களில் ஜெவ்னா (ஸ்டாலியன்ஸ் ஃ கிங்ஸ்) அணிக்காக விளையாடி வருகிறார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM