2023 ஆம் ஆண்டில் இதுவரை 2 இலட்சம் பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

Published By: Vishnu

04 Sep, 2023 | 08:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

2023ஆம் ஆண்டு ஆரம்ப 8மாதங்களுக்குள் 200387இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில்  113635 ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 86752 பேர் பெண் தொழிலாளர்களாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் அதிகமாக தொழில் நிமித்தம் சென்றிருப்பது சவூதி அரேபியாவுக்கு என்பதுடன் இதன் எண்ணிக்கை 44827 ஆகும்.  இரண்டாவதாக குவைட் நாட்டுக்கே அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். அதன் எண்ணிக்கை 39000 ஆகும். மூன்று மற்றும் நான்காவதாக  கட்டார் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கே அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் சென்றிருக்கின்றனர். அதன் எண்ணிக்கை முறையே 34 166 மற்றும் 25 058 ஆகும்.

அத்துடன் ஐராேப்பிய நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழிலுக்காக அனுப்பப்படும் போக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் அதன் பிரகாரம் 2023ஆம் ஆண்டு முதல் 8 மாதங்களுக்குள் ருமேனியாவுக்கு 9916பேர் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.

அத்துடன் பயிற்சி மற்றும் தொழில் சேவைக்காக 152591பேர் சென்றுள்ளதுடன் வீட்டு பராமரிப்பு உதவியாளர் பதவிக்காக 47796பேர் மாத்திரமே சென்றுள்ளனர்.

மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது தொழில் நிமித்தம் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமானவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் எண்ணிக்கை 22801ஆகும். கம்பஹா மாவட்டத்தில் இருந்து 20957 பேரும் கண்டி மாவட்டத்தில் இருந்து 19222பேரும் குருணாகல் மாவட்டத்தில் இருந்து 17777பேரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 11831பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

2022ஆம் ஆண்டு 310967 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07