ஆப்­கானில் தலி­பான்­களின் 2 வருட ஆட்சி

Published By: Vishnu

03 Sep, 2023 | 06:06 PM
image

லத்தீப் பாரூக்

சுமார் நான்கு தசாப்த கால வெளி­நாட்டு ஆதிக்­கத்தின் பின், பல அழி­வு­க­ளையும் மர­ணங்­க­ளையும் சந்­தித்த பின் நிலத்தால் சூழப்­பட்ட மலைப்­பாங்­கான நாடான ஆப்­கா­னிஸ்தான், வடக்கில் தஜி­கிஸ்தான், துருக்மே­னிஸ்தான் உஸ்­பெ­கிஸ்தான் ஆகிய நாடு­க­ளையும் மேற்கில் ஈரா­னையும், கிழக்­கிலும் தெற்­கிலும் பாகிஸ்­தா­னையும் எல்­லை­க­ளாகக் கொண்ட ஒரு பரந்து விரிந்த தேச­மாகும். அமெ­ரிக்­காவின் ஆதிக்­கத்தில் இருந்து கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தான் 2021 ஆகஸ்ட்டில் அது தன்னை மீண்டும் விடு­வித்துக் கொண்­டது.

ஆப்­கா­னிஸ்தான் ஒரு உன்­ன­த­மான நாடு. வர­லாறு நெடு­கிலும் ஆப்கான் மக்கள் அச்­ச­மற்ற சுதந்­திர மனி­தர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். தாங்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமது சுதந்­தி­ரத்­துக்­காகப் போரா­டவும் அவர்கள் ஒரு­போதும் பின் தங்­கி­ய­தில்லை. சுமார் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன் மாவீரன் அலெக்­ஸாண்டர் ஆப்­கா­னிஸ்தான் பற்றிக் குறிப்­பி­டு­கையில் 'ஆப்­கா­னிஸ்­தா­னுக்குள் இல­கு­வாகப் பிர­வே­சித்து விடலாம். ஆனால் அங்­கி­ருந்து மீண்டு வரு­வ­தென்­பது பெரும்­பாலும் முடி­யாத காரியம்' என்று கூறி உள்ளார்.

நவீன உலகின் இரு­பெரும் வல்­ல­ர­சு­க­ளான சோவியத் ரஷ்­யாவும் அமெ­ரிக்­காவும் அங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டதில் இருந்து இந்த கூற்றின் உண்மைத் தன்­மையை புரிந்து கொள்ள முடி­கின்­றது. ஆனால், அதற்­காக அவர்கள் செலுத்­திய விலை என்­னமோ அதிகம் தான். 1979 டிசம்பர் 24ல் முன்னாள் சோவியத் ரஷ்யா ஆப்­கா­னிஸ்­தா­னுக்குள் ஊடு­ரு­வி­யது. பத்து ஆண்­டுகள் கழித்து 1989 பெப்­ர­வரி 15ல் அது அங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டது. இந்தக் காலப்­ப­கு­தியில் கொல்­லப்­பட்ட ஆப்­கா­னிஸ்தான் மக்­களின் சரி­யான எண்­ணிக்கை இது­வரை யாருக்கும் தெரி­யாது. எவ்­வா­றா­யினும் தமது சொந்த மண்ணில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மில்­லியன் கணக்­கான ஆப்­கா­னிஸ்தான் மக்கள் அண்டை நாடு­களில் அகதி முகாம்­களில் இன்­னமும் துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டுள்­ளனர்.

வர­லாற்றில் இருந்து எந்தப் பாடத்­தையும் கற்றுக் கொள்­ளாத, அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் புஷ் ஜுனியர், நியூ­யோக்­கி­லுள்ள உலக வர்த்­தக மையத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை மையப்­ப­டுத்தி 24 மணி­நே­ரத்­துக்குள் தலி­பான்கள் மீது போலி­யாக குற்றம் சாட்டி உலகை அச்­சு­றுத்தி ஒரு இரா­ணுவ கூட்­ட­ணியை உரு­வாக்கி 27 தினங்­க­ளுக்குள் ஆப்­கா­னிஸ்தான் மீது படை­யெ­டுப்பு நடத்­தினார்.

இதன் மூலம் ஆப்­கா­னிஸ்தான் மீது அமெ­ரிக்கா தலை­மை­யி­லான விமானக் குண்டு வீச்­சுக்கள், அழி­வுகள், நாசங்கள், படு­கொ­லைகள் என்­பன தொடர்ந்­தன. ஆனால், இந்த அடா­வ­டித்­த­னங்­களை எல்லாம் மீறி முன்னர் சோவியத் யூனியன் எதிர்­நோக்­கிய அதே விதிக்கு அமெ­ரிக்­காவும் முகம் கொடுத்­தது. 2001ல் தொடங்­கிய இந்தத் தாக்­குதல் 2021ல் முடி­வுக்கு வந்­தது. 2021 ஆகஸ்ட் 30ல் அமெ­ரிக்­காவும் அங்­கி­ருந்து வெளியேற வேண்­டிய நிர்ப்­பந்தம் உரு­வா­னது.

இதன் மூலம் வெட்கக் கேட்டை சந்­தித்த இன்­றைய நிலையில் உலகின் ஒரே­யொரு வல்­ல­ர­சான அமெ­ரிக்கா, தனது நாட்டு வங்­கி­களில் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு சொந்­த­மான பத்து பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை முடக்கி வைத்­த­தோடு அந்த நாட்டின் மீது பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளையும் தடை­க­ளையும் விதித்­துள்­ளது. இது அந்த நாட்டு மக்­க­ளுக்கு சொல்­லொணா துய­ரங்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. யுத்­தத்தால் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்ட அந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்­பு­வதும் இதன் மூலம் கடி­ன­மான விட­ய­மாகி உள்­ளது.

இத­னி­டையே ஆப்­கா­னிஸ்­தானில் நிலவி வரும் நீண்­ட­கால வரட்சி அங்கு மனி­தா­பி­மான நெருக்­க­டி­யையும் தோற்­று­வித்­துள்­ளது. இதனால், விவ­சா­யிகள் பெரும் கஷ்­டங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். ஆப்­கா­னிஸ்­தானின் பொரு­ளா­தா­ரத்தில் மூன்றில் ஒரு பகுதி விவ­சா­யத்­தையும் உணவுப் பாது­காப்­பையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. அங்கு நீர்ப்­பா­சனம் பெரும் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. அதன் பனிக்­கட்டி மலைகள் உருகி வடிந்து அதன் மூலம் அந்த நாட்டின் ஆற்­றுநீர் பெருக வேண்டும், கோடை காலத்தில் நீர் நிலைகள் அதனால் செழிக்க வேண்டும் என்ற எதிர்ப்­பார்ப்பு மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது.

42 மில்­லியன் சனத்­தொ­கையைக் கொண்ட ஆப்­கா­னிஸ்­தானில் சுமார் 15.3 மில்­லியன் மக்கள் உணவுப் பாது­காப்பு நெருக்­க­டியை எதிர்­நோக்கி உள்­ள­தாக ஐ.நா உலக உணவு பாது­காப்புத் திட்டம் அறி­வித்­துள்­ளது.

இவற்றின் நடுவே, தலிபான் நிர்­வாகம் 280 கிலோ­மீற்றர் (174 மைல்கள்) நீள­மான கால்வாய் ஒன்றை நிர்­மா­ணித்து வரு­கின்­றது. இது பூர்த்தி செய்­யப்­பட்­டதும் நாட்டின் வட ­பகுதி முழு­வதும் விவ­சா­யத்­துக்­கான நீர்ப்­பா­ச­னத்தை திசை திருப்பி விநி­யோ­கிக்க முடியும் என்று எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், இந்தத் திட்டம் பூர்த்தி அடைய இன்னும் பல வரு­டங்கள் செல்லும். இதற்­கி­டையில் நியா­ய­மற்ற விதத்தில் தமது நீர் நிலை­களில் இருந்து நீர் திசை திருப்­பப்­ப­டலாம் என அண்டை நாடுகள் சில கவலை வெளி­யிட்­டுள்­ளன.

செஞ்­சி­லுவை மற்றும் செம்­பிறை சங்­கங்­களின் கருத்­துப்­படி ஆப்­கா­னிஸ்தான் மக்­களில் மூன்றில் இரண்டு பங்­கினர் உயிர் வாழ்­வ­தற்­கான அவ­சர மனி­தா­பி­மான உத­வி­களை நாடி நிற்­கின்­றனர். போதைப் பொருள் துஷ்­யி­ர­யோகப் பிரச்­சி­னைக்கும் இந்த நாடு முகம் கொடுத்­துள்­ளது.

குடும்­பங்­களின் நிதி நிலை­மைகள் கார­ண­மாக பிள்­ளை­களும் சிறு­வர்­களும் பல பிரச்­சி­னை­களை எதிர்கொண்­டுள்­ளனர். தூர இடங்­களில் வாழும் பிள்­ளைகள் பட்­டி­னி­யோடு பாட­சா­லை­க­ளுக்கு வரும் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இளை­ஞர்கள் பாகிஸ்தான் எல்­லை­யூ­டாக உயிரைப் பணயம் வைத்து தேயிலை, சீனி மற்றும் உலோகப் பொருள்கள் இலத்­தி­ர­னியல் பொருள்கள் என்­ப­ன­வற்றை கடத்தி வரும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்

இவற்றை எல்லாம் தாண்டி பெண்கள் மீது தலி­பான்கள் பிர­யோ­கித்து வரும் அர்த்­த­மற்ற கட்­டுப்­பா­டுகள் தற்­போது அனு­ப­வித்து வரும் துய­ரங்­களை மேலும் சிக்­க­லுக்­குள்­ளாக்கி உள்­ளன. இரண்டாம் நிலை பாட­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குச் செல்ல பெண்­க­ளுக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் பணி­பு­ரி­யவும் அரச துறைகள் மற்றும் நீதித் துறையில் பணி­யாற்­றவும் அவர்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் எவ்­வாறு உடை அணிய வேண்டும், எங்­கெல்லாம் பயணம் செய்­யலாம் என பல்­வேறு கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மையில் கிடைத்­துள்ள சில தக­வல்­களின் படி, சில மாகா­ணங்­களில் தரம் மூன்­றுக்கு அப்பால் இன்னும் சில இடங்­களில் தரம் ஆறுக்கு அப்பால் பெண்கள் பாட­சாலை செல்லக் கூடாது எனவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதாம். ஏற்­கெ­னவே அங்கு பெண்கள் கல்­வியில் பின்­ன­டைவை சந்­தித்­துள்ள நிலையில் இந்த முடி­வுகள் இன்னும் பல தலை­மு­றைக்கு பெண்­களை பின்­னோக்கித் தள்­ளி­விடும்.

தலி­பான்­க­ளையும் அவர்­க­ளது தேசத்­தையும் சிதைத்து விட காத்­தி­ருக்கும் மேற்­கு­லக ஆர்­வத்­துக்கு மேலும் தீனி போடும் வகையில், அண்­மையில் 100 ஆப்கான் பெண்கள் பல்­க­லைக்­க­ழக புல­மைப்­ப­ரிசில் பெற்று, துபாய் செல்­ல­வி­ருந்த நிலையில், அந்தப் பய­ணத்­துக்கு தலி­பான்­களால் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

துபாயில் செயல்­படும் அல் அப்தூர் குழு­மத்தின் தலைவர் கலாப் அல் அப்தூர், ஆப்­கா­னிஸ்­தானின் 100 பெண்­க­ளுக்­கான புல­மைப்­ப­ரிசில் திட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். அவர்­களை ஆப்கானிலிருந்து அழைத்து வரு­வ­தற்­கான பிரத்­தி­யேக விமானம் ஒன்­றையும் அவர் ஆகஸ்ட் 23ம் திகதி காலையில் அங்கு அனுப்பி இருந்தார்.

'ஆனால் ஏற்­க­னவே 100 பேருக்­கு­ரிய பயணக் கட்­ட­ணங்கள் யாவும் செலுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் தலிபான் ஆட்­சி­யா­ளர்கள் குறிப்­பிட்ட பெண்­க­ளுக்கு அந்த விமா­னத்தில் பயணம் செய்ய அனு­ம­திக்­க­வில்லை. அவர்கள் துபாயில் தங்­கி­யி­ருந்து தமது கல்­வியைப் பூர்த்தி செய்­வ­தற்­கான கட்­ட­ணங்கள், தங்­கு­மிட வச­திகள், போக்­கு­வ­ரத்து செல­வுகள், பாது­காப்பு ஏற்­பா­டுகள் என எல்­லாமே செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் தான் அவர்­க­ளுக்­கான வாய்ப்பு மறுக்­கப்­பட்­டது' என கலாப் அல் ஹப்தூர் தெரி­வித்­துள்ளார். தாங்கள் ஆண் துணை­யோடு பய­ணிக்க விமான நிலையம் சென்ற போது விமான நிலைய அதி­கா­ரிகள் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை என பாதிக்­கப்­பட்ட பெண்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஆப்­கா­னிஸ்­தானில் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் உயர் நிலை பாட­சா­லை­களும் பெண்­க­ளுக்கு மூடப்­பட்­டுள்­ளன. ஆனால், இது இஸ்­லா­மியப் போத­னை­க­ளுக்கு முற்­றிலும் முர­ணா­னது. ஆண் பெண் இரு பாலா­ருக்கும் ஒரே வித­மாக கல்­வியின் மகத்­து­வத்தை போதிக்கும் ஒரு மார்க்­கமே இஸ்­லா­மாகும்.

ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து அமெ­ரிக்கா வாபஸ் வாங்கி இரண்டு வரு­டங்கள் கழிந்­துள்ள நிலையில் மத்­திய ஆசிய நாடுகள் உட்­பட உலகின் ஏனைய நாடுகள் ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான உற­வு­களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நிலையில் உள்­ளன. இந்த பிராந்­தி­யத்தை தலி­பான்கள் சிதைத்து விடக் கூடும், தண்ணீர் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தக் கூடும் என்ற அச்­சங்­களின் மத்­தியில் தான் இந்த உற­வு­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. சீனாவும் ரஷ்­யாவும் பிராந்­திய பாது­காப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு செல்­வாக்கு நிலையில் இருக்­கின்­றன என்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தான் ஏனைய நாடுகள் ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான உற­வு­களை மிகவும் எச்­ச­ரிக்­கை­யுடன் கையாண்டு வரு­கின்­றன.

அமெ­ரிக்கப் படைகள் தற்­போது ஆப்­கா­னிஸ்­தானில் இல்லை என்­பது இந்த நாடு­களின் நம்­பிக்­கைக்கு மற்­றொரு கார­ண­மாகும். தலிபான் நிர்­வா­கத்­தோடு, அமெ­ரிக்­காவின் பங்­கா­ளி­க­ளா­கவே மத்­திய ஆசிய நாடுகள் தமது ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான உற­வு­களை நோக்­கு­கின்­றன.

மேற்­கு­லகில் சில நாடுகள் இன்­னமும் தலி­பான்­க­ளு­ட­னான உற­வுகள் கூடாது என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ளன. இந்த எதிர்ப்­புகள் மறை­மு­க­மான ஒரு நிர்ப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் அமைந்­துள்­ளன. இன்னும் சில நாடுகள் எது எப்­படி இருப்­பினும் சரி, தலி­பான்கள் கையில் இப்­போது ஒரு அர­சாங்கம் இருக்­கின்­றது. எனவே, அவ­சர தேவை­களின் நிமித்­தத்­தி­லேனும் அவர்­க­ளு­ட­னான உற­வுகள் அவ­சி­ய­மா­னவை என்ற நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளன. ஆனால், தனது இரா­ஜ­தந்­திர அங்­கீ­கா­ரத்­துக்­காக உலகம் பேரம் பேசும் வரை ஆப்­கா­னிஸ்தான் பிராந்­தியம் காத்­தி­ருக்­கவும் முடி­யாது. எந்த வகை­யி­லேனும் இந்தத் தெரி­வு­களும் இல­கு­வா­னவை அல்ல.

இதே­வேளை, பிரிட்டிஷ் கன்­சர்­வேடிவ் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டோபியஸ் எல்வூட் ஆப்­கா­னிஸ்­தானில் தலி­பான்­களின் அரசை பாராட்டி உள்ளார். நாட்டை அவர்கள் முழுமையாக மாற்றி உள்ளனர் என்று தெரிவித்துள்ள அவர், தலிபான் அரசாங்கத்துடன் பிரிட்டன் ராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில பிரிட்டிஷ்

பாராளுமன்ற உறுப்பி னரும் தற்போதைய பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவருமான எல்வூட், 'தலிபான்கள் ஏற்படுத்திய நிர்ப்பந்தத் தால் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், நான் அண்மையில் முற்று முழுதாக மாற்றம் கண்டுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து அண்மையில் தான் திரும்பி வந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஹலோ டிரஸ்ட் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமது சட்டபூர்வ நிலையை ஸ்தாபித்துக் கொண்ட தலிபான்கள், இப்போது இராஜதந்திர ரீதியாக அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27
news-image

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்:...

2025-02-03 16:39:04