இரண்டாம் தவணையில் 100 மில்லியன் டொலரை பங்களாதேஷுக்கு செலுத்தியது இலங்கை

02 Sep, 2023 | 06:18 PM
image

(நா.தனுஜா)

பங்களாதேஷ் வங்கியினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனில் இலங்கை அரசாங்கம் இரண்டாம் தவணைக்கொடுப்பனவாக 100 மில்லியன் டொலரை மீளச்செலுத்தியுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் தவணைக்கொடுப்பனவாக 50 மில்லியன் டொலரை பங்களாதேஷுக்கு மீளச்செலுத்தியிருந்தது.

இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்த வேண்டியிருந்த போதிலும், சுமார் 51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் (வங்குரோத்து நிலை) இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.

அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் மார்ச் மாதம் கடனை மீளச்செலுத்தமுடியாத நிலையில், மேலும் 6 மாத கால அவகாசத்தைக் கோரிய இலங்கை, முதற்கட்டமாக ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக செப்டெம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக உறுதியளித்தது. அதனையடுத்து அக்கடனை மீளச்செலுத்துவதற்கு பங்களாதேஷ் மேலும் 6 மாதங்கள் கால அவகாசத்தை வழங்கியது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஏற்கனவே வாக்குறுதி அளித்ததைப்போன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 50 மில்லியன் டொலரையும், செப்டெம்பர் மாதத் தொடக்கத்தில் 100 மில்லியன் டொலரையும் பங்களாதேஷ் வங்கிக்கு இலங்கை மீளச்செலுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர்...

2025-02-11 00:40:52
news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14