(இராஜதுரை ஹஷான்)
இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஜப்பான் நாட்டின் பிரதிநிதிகள் குழுவினரிடம் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள தகஷிதி யுசுகே தலைமையிலான மேலவை அமைச்சர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நிதியமைச்சில் இடம்பெற்றது.
இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து இலங்கை மீட்சிப்பெறுவதற்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் ஆரம்பத்தில் இருந்து இலங்கைக்கு சாதகமாக செயற்படுவது வரவேற்கத்தக்கது என நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டும் இலங்கை வலுவானதொரு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு எந்நிலையிலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். என தகஷிதி யுசுகே தலைமையிலான மேலவை அமைச்சர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் உறுதியளித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM