பெருந்தோட்ட தொழிலாளர்கள் - தோட்ட முகாமைத்துவம் முரண்பாடு : பொலிஸாரின் தலையீடு சிக்கலானது -பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சு சார் ஆலோசனை குழு

01 Sep, 2023 | 09:09 PM
image

(நமது நிருபர்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட  முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் பல்வேறு தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது என அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஒரு தரப்பினரால் பொலிஸில் எதாவது முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போது பொலிஸார் தலையிடாமல் இருக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  டிரான் அலஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்  கூடிய பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிப்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு வினவியது.

அவ்வாறு கௌரவிப்பதற்கு தற்பொழுது வேலைத்திட்டமொன்று காணப்படுவதாகவும் சோதனைகள் தொடர்பான விடயங்களைக் கருத்திற் கொண்டு அந்தந்த அதிகாரிகள் கௌரவிக்கப்படுவதாகவும் குழுவிற்கு வருகை தந்திருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமதுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு பயன்படுத்தப்படாமை தொடர்பில் இதன்போது வினவப்பட்டது. தற்பொழுது அந்த வீட்டைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன் கிராம மட்டத்தில் போதைப்பொருள் பாவனை, பரவல் மற்றும் அடிமையானவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் குழு வினவிய போது, போதைப்பொருள் தொடர்பான விசாரணை பொலிஸாருக்கு கிடைக்கும் பட்சத்தில் முன்பு போன்றில்லாமல்,சட்டத்துக்கு முரணாக வைத்திருத்தல் மற்றும் பணம் தூய்தாக்கல் தொடர்பிலும் விசாரணை செய்யப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாரால் வீடியோ ஒளிப்பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்குவதன் நெறிமுறை பற்றிக் குழு கவனம் செலுத்தியது. எந்தவொரு குற்றவாளியினதும் தனிப்பட்ட விடயங்களுக்கு பொலிஸார் கௌரவமளிக்க வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக ஏற்றுக்கொண்ட பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, இது தொடர்பில் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56