யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
போயா தினமான புதன்கிழமை (30) மதுபானத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நல்லூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 28 வயதான சந்தேக நபரிடமிருந்து 10 சாராயம் போத்தல்கள் மற்றும் 12 லீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன. குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 சாராய போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM