புலனாய்வுப்பிரிவினர் என அடையாளப்படுத்தி கொள்ளை : மூவர் கைது

Published By: Priyatharshan

07 Feb, 2017 | 03:41 PM
image

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

 
இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் 38,22,45 வயதுடைய மூன்று சந்தேக நபர்களையும் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.



இவர்களிடமிருந்து புலனாய்வுப் பிரிவினரின் தொப்பி ஒன்று , கத்தி ஒன்று , தங்க நகைகள் , கறுப்பு சட்டை ஒன்று, தொலைபேசி மூன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

15,35,500 ரூபா களவாடப்பட்டதாகவும் ஜந்து வீட்டில் தாங்கள் களவெடுத்தகாகவும் சந்தேகநபர் ஒத்துக்கொண்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10