மீண்டும் இனவாதம் தூண்டப்படுகின்றதா?

Published By: Vishnu

27 Aug, 2023 | 04:56 PM
image

எம்.எஸ்.தீன்  

நாட்டில் ஏற்­க­னவே விதைக்­கப்­பட்ட இன­வாத விஷ வித்­துக்­களை இன்னும் முற்­றாக அழித்துக் கொள்ள முடி­யாமல் ஜன­நா­ய­கத்தின் மீதும், மூவின மக்­களின் ஒற்­றுமை மீதும் பற்றுக் கொண்­ட­வர்கள் தவிக்கின்­றனர். மறு­பு­றத்தில் இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டு­களை தோற்­று­வித்து அதன் ஊடாக அர­சியல் இலாபம் தேடிக் கொள்ளும் முயற்­சி­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த காலங்­க­ளுடன் ஒப்­பிடும் போது இன­வாத தூண்­டு­தல்­க­ளினால் உணர்ச்சி வசப்­பட்டு  மோதிக்கொள்ளும் மன நிலையில் இருந்து மூவின மக்­களும்  மாறி­யுள்­ளார்கள். அதா­வது, இன­வா­தத்தை மக்­க­ளி­டையே பரப்பி அர­சியல் இலாபம் தேடிக் கொண்­ட­தோடு, நாட்­டையும் குட்டிச் சுவ­ராக்­கி­யுள்­ளனர் என்ற உண்­மை­யையும், கடந்த காலங்­களில் நடை­பெற்ற இன­ரீ­தி­யி­லான மோதல்­க­ளி­லி­ருந்தும் மக்கள் சிறந்த பாடத்தை  கற்­றுள்­ளார்கள் என்­பதும் தெளி­வா­கின்­றது.

ஆனால், அர­சி­யல்­வா­திகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்­ள­வில்லை. மக்­க­ளி­டையே மீண்டும் இன­வா­தத்தை தூண்டி அர­சியல் இலாபம் தேடிக்கொள்­ள­லா­மென்றே நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதித் தேர்தல் அடுத்த வருடம் ஜன­வ­ரிக்கு பின்னர் நடை­பெ­றலாம் என்­ற­தொரு அர­சியல் நகர்­வுகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற சூழலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்­றிய கதை­யா­டல்­களை ஏற்­ப­டுத்தி மக்கள் மனதில் சந்­தே­கங்­க­ளையும், அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய முயற்­சி­களை எடுக்­கின்­ற­னரா என்று கருத வேண்­டி­யுள்­ளது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று தற்­கொலை தாக்­கு­தல்கள் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வா­திகள் குறித்துப் பேசப்­பட்­டது. நாட்டில் தாக்­கு­தல்கள் இடம்பெ­ற­வுள்­ளன என்றும் எச்­ச­ரிக்கை செய்­யப்­பட்­டது. ஆனால், அது குறித்து அன்­றைய அர­சாங்­கமும், பாது­காப்புத் தரப்­பி­னரும் போதிய கவனம் செலுத்­தவில்லை.

இத்­த­கைய பின்­ன­ணியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தற்­கொலை தாக்­கு­தல்கள்  நடை­பெற்­றன. இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் முஸ்­லிம்­க­ளாக இருந்­த­மையால் முஸ்லிம் சமூ­கத்தின் மீது பல கெடு­பி­டிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வீடுகள் பாது­காப்பு தரப்­பி­னரால் சோத­னை­யி­டப்­பட்­டன.

பாண், பழம் வெட்டும் கத்­தியைக் கூட வீடுகளில் வைத்­தி­ருக்க முடி­யாத நிலையில் முஸ்­லிம்கள் இருந்­தார்கள். வீதி­களில் நட­மா­டு­வ­தற்கு கூட முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு இருக்­க­வில்லை. முஸ்­லிம்­களை ஏனைய சமூ­கத்­தினர் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே பார்த்­தார்கள். பள்­ளி­வா­சல்­க­ளிலும், குர்ஆன் மத­ர­ஸாக்­க­ளிலும் ஆயுதப் பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்­கள் முன் வைக்­கப்­பட்­டன. பலர் கைது செய்­யப்­பட்­டனர். முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்­தார்கள்.

ஆயினும், இத்­தாக்­கு­த­லா­னது தேர்தல் வெற்­றிக்­காக திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும், இதனை நிறை­வேற்­று­வ­தற்கு   தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட குழு­வி­னரை பயன்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் பாரா­ளு­மன்­றத்­திலும், அதற்கு வெளி­யிலும் பர­வ­லாக பேசப்­பட்­டன. இன்று வரை ஏப்ரல் 21ஆம் திகதித் தாக்­கு­தல்கள் பற்­றிய உண்­மையை மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தாத நிலையே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இப்­போது மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்­டுக்குள் உள்­ளார்கள் என ஜனா­தி­ப­திக்கு நெருக்­க­மா­ன­வரும், ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வஜிர அபே­வர்­தன பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

வஜிர அபே­வர்­த­னவின் இந்த குற்­றச்­சாட்டை சாதா­ர­ண­மாக கருதி இருந்து விட முடி­யாது. இது விட­யத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், முஸ்லிம் அமைப்­புக்­களும் கூடிய கரி­சனை கொள்ள வேண்டும். இதன் உண்மைத் தன்­மை­யையும், அதன் பின்­ன­ணி­யையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்­டுக்குள் உள்­ளார்கள் என்ற பேரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுக்கப் போகின்­றார்­களா அல்­லது இத்­த­கைய கருத்­துக்­களை மக்­க­ளி­டையே பரப்பி மக்­களை பீதியில் வைத்துக் கொண்டு தேர்தல் வெற்­றிக்­கான நகர்­வு­களை மேற்­கொள்ளப் போகின்­றார்களா என்று ஆராய வேண்டும்.

வஜிர அபே­வர்­த­னவின் இக்­க­ருத்து பற்றி பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி  உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பிய போது அர­சாங்கத் தரப்­பினர் எவரும் பதி­ல­ளிக்­க­வில்லை.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சிறி, ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்­கு­தல்­தா­ரிகள் நாட்டில் உள்­ளார்கள் என்று தெரி­வித்து நாட்டை மீண்டும் மோச­மான நிலைக்கு தள்ளி ஆட்­சியை கைப்­பற்றும் திட்­டமா இது என பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

ஊழல் மோச­டி­யாலும், இன­வாத அர­சி­ய­லாலும் நாடு மிக மோச­மான வகையில் பொரு­ளா­தாரப் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது. ஊழலை ஒழிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் தெரி­வித்துக் கொண்­டாலும், எந்­த­வொரு நட­வ­டிக்­கை­ளையும் எடுக்­காது ஊழல்­வா­தி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே அர­சாங்கம் செய்து கொண்­டி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டுக்­களும் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

இன­வாதக் கருத்­துக்­களும், அது தொடர்­பான நட­வ­டிக்­கைகளும் மெல்­ல­மெல்ல தீவி­ர­ம­டைந்து கொண்டு வரு­வதை அவ­தா­னிக்கக் முடி­கின்­றது. இவ்­வா­றுதான் 2019 ஏப்ரல் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­ன­தாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல முனை­யி­லி­ருந்தும் இன­வாதக் கருத்­துக்­கள் முன் வைக்­கப்­பட்­டன. அத்­த­கைய கருத்­துக்கள் ஒரு திட்­ட­மி­டலின் அடிப்­ப­டை­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அர­சாங்கம்  வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் முத­லீட்டை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால், மறு­பக்­கத்தில் இன­வாத கருத்­துக்­களும், முரண்­பா­டு­களும் தோற்றம் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இதன் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­திகள் உள்­ளனர். இத்­த­கைய இன­வாத செயற்­பா­டுகள்   தீவி­ர­ம­டை­யு­மாயின் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களும், சுற்­றுலா பய­ணி­களும் நாட்­டுக்கு வரு­வார்­களா என்று சிந்­திக்க வேண்டும். வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வருகை அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்ற இந்த நல்ல சூழலை இல்­லாமல் செய்­வ­தற்கே இத்தகைய இன­வாத கருத்­துக்கள் துணை­யாக அமையும்.

குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தால் இலங்­கையில் மீண்டும் இனக்  கல­வரம் தோற்றம் பெறும் சூழல் காணப்­ப­டு­வ­தாக இந்­திய புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.  இன­வா­தத்தைத் தூண்டி விட்டு நாட்டில் மீண்டும் யுத்­தத்தை தோற்­று­விக்கும் செயற்­பா­டு­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக தடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்தன தேரர் தெரி­வித்­துள்ளார்.

கடந்த காலங்­களில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இன­வாதக் கருத்­துக்­களை மிகத் தீவி­ர­மாக முன்­னின்று விதைத்­த­வர்­களே நாட்டில் இன­வாதம் தலை­தூக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது, அர­சாங்கம் அதனை தடுக்க வேண்­டு­மென்று இன்று சொல்லிக் கொண்­டி­ருப்­பதன் பின்­ன­ணியில் நிச்­ச­ய­மாக அர­சியல் இருக்­கின்­றது. கடந்த கால அனு­ப­வங்கள் இதனை எமக்கு தெளி­வூட்­டுக்­கின்­றன.

பௌத்த விகா­ரைக்­கு­ரிய காணி என்றும், தமி­ழர்­களின் காணி என்றும், முஸ்­லிம்­களின் காணி என்றும், அரச காணி என்றும், வடக்கு, கிழக்கு இணைப்பு என்றும் கருத்­துக்கள் முன் வைக்­கப்­படும் அதே வேளையில் அக்­க­ருத்­துக்­க­ளுடன் இன­ ரீ­தி­யான சிந்­த­னையும் ஆதிக்­கமும் வெளிப்­ப­டுதைக் காண்­கின்றோம். இக்­காணி விவ­கா­ரங்கள் அரச உயர் அதி­கா­ரி­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டவை. அவை குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கருத்­துக்­களை முன் வைப்­பதில் எந்தத் தவறும் கிடை­யாது.

ஆனால், தமது இனத்­தினர் தம்மை வீர­னாக கருத வேண்டும் என்­ப­தற்­கா­கவும், அதன் மூல­மாக தங்­களின் அர­சியல் செல்­வாக்கை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாக­ரி­க­மற்ற முறையில் சண்­டித்­த­ன­மான கருத்­துக்­களை முன்வைப்பது  நாக­ரி­க­மற்­ற­தாகும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­களின் இனத்­திற்­காக குரல் கொடுக்க வேண்டும். அதற்­கா­கவே அவர்­க­ளுக்கு மக்கள் வாக்­க­ளித்­துள்­ளார்கள். தங்­கள்  இனத்­திற்காக குரல் கொடுப்­பதை கடமை என்று சொல்லிக் கொண்டு அடுத்த சமூ­கத்தின் உரி­மையை மீற முடி­யாது. அவ்­வாறு மீறும் வகையில் செயற்­ப­டு­வோரை சிறந்த  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்கள் என்று கருத முடி­யாது. மக்­களின் உணர்ச்­சியை தூண்டி அர­சியல் இலாபம் தேடு­வோரின் செல்­வாக்கு நீண்ட காலத்­திற்கு நிலைத்­தி­ருக்­காது. இதுவே தர்­மத்தின் போதனையாகும்.

ஆகவே, வடக்கு, கிழக்கு இணைப்பும், பிரிவும், குருந்தூர்மலை விவகாரம் மற்றும் மட்டக்களப்பு நாவலடி காணி பிரச்சினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும்  செயற்பாடுகளை யார் எடுத்தாலும், அவர் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதற்கு மூவின மக்களும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

இனப் பிரச்சினை, யுத்தம்,  வறுமை போன்ற எதுவாக இருந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. ஆதலால், அரசியல்வாதிகளின் பதவிப் பசிக்கும், நாற்காலி போட்டிக்கும்  நாம் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன ரீதியான மோதல்களை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கும், வேறு காரணங்களை கூறி இன்றைய ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கும் காணி பிரச்சினை உள்ளிட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது.  ஜனநாயகத்தை அரசியல்வாதிகளின் ஆட்சியைப் பிடிக்கும்  எண்ணத்திற்காக கிடப்பில் போடவும்  முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38
news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உறுதியான நிலைப்பாடு...

2025-02-16 12:01:43
news-image

குழப்புகின்ற கட்டமைப்புகள்

2025-02-16 11:53:51
news-image

இழப்பீடு எனும் செஞ்சோற்றுக் கடன்

2025-02-16 10:43:21
news-image

அரசுக்கு சவாலான விகாரை

2025-02-16 10:42:10