ஒரு ஏக்கருக்கு 1 இலட்சம் ரூபா நட்டஈடு வேண்டும் - மகாவலி விவசாய சங்கம் கோரிக்கை

Published By: Digital Desk 3

26 Aug, 2023 | 07:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும். 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கினால் பெரும்போக விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடமாட்டார்கள் என மகாவலி விவசாய வலயத்தின் பொதுச்செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் 54,753 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.குறைந்தபட்சம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய பயிர்செய்கைகள் பாதிக்கப்பட்டிருக்கும்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் உடவளவ வலய விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். சேதன பசளை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையான நட்டஈடு கிடைக்கவில்லை.

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்துக்கு 40 ஆயிரம் ரூபா ஒரு ஹெக்டயர் விவசாய நிலத்துக்கு 1 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.

 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய இவ்வாறு நட்டஈடு தொகை தீர்மானிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மூட்டை உரத்தின் விலை 3,000 ரூபாவாக காணப்பட்டது.

ஆனால், தற்போது உர மூட்டையின் விலை 10 ஆயிரம் ரூபாவில் இருந்து ஆரம்பமாகிறது.ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயி ஒருவர் குறைந்தப்பட்சம் ஒன்றரை இலட்சம் ரூபாவையேனும் செலவழிக்க வேண்டும்.

2017 ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமைய 40 ஆயிரம் ரூபா நட்டஈட்டை எவரும் ஏற்க போவதில்லை. குறைந்தளவிலான நட்டஈட்டை வழங்கினால் விவசாயிகள் எவரும் எதிர் வரும் பெரும்போக விவசாயத்தில் ஈடுபடமாட்டார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:26:08
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41