இலங்கையில் இனவாத முரண்பாடுகள் சர்வதேச புலனாய்வு பிரிவு, நிறுவனங்கள் ஏதும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 3

25 Aug, 2023 | 09:58 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக சர்வதேச புலனாய்வு பிரிவினர், நிறுவனங்கள் ஏதும் இதுவரை அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

நாட்டில் பல்வேறு தரப்பினர் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு பிரிவு கண்காணித்துள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் இரு தரப்பினரும் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பது கவலைக்குரியது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24)  இடம்பெற்ற கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய பாதுகாப்பு  தொடர்பிலும் நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் பல மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம்  தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்கள்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இனவாத முரண்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு மற்றும் நிறுவனங்கள் ஏதும் இலங்கைக்கு அறிவிக்கவில்லை.

இதை மிகவும் பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அத்துடன்  சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பிடப்படும் வதந்திகளுக்கு எந்நேரத்திலும் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.

நாட்டில் பல்வேறு பகுதியில் பல்வேறு தரப்பினர் அரசியல் நோக்கத்துக்காக இனவாதம் மற்றும் மதவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

குருந்தூர் மலை விவகாரம் குறித்து தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.குருந்தூர் புராதன பூமியை கொண்டு பௌத்த மதத்தின் எதிர்காலமும், இந்து மதத்தின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படாது என்பதை அனைவரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 30 வருட கால யுத்தம், உயிர் மற்றும் சொத்து சேதம் ஆகிய தாக்கங்களை தொடர்ந்தும் இன்றும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் இரு தரப்பிலும் உள்ளவர்கள் இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பது கவலைக்குரியது.

நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உள்ளோம்.தேசிய பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் நிச்சயம் உறுதிப்படுத்துவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49