(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
சபாமண்டபத்தில் சபையின் அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போதும், சிலசந்தர்ப்பங்களில் சபா மண்டபத்துக்கு வெளியேயும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்ற பணியாளர்கள், செயலாளர்குழு மற்றும் அதன் பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் அதியுயர் சபையின் கௌரவத்துக்குப் பொருத்தமற்றவை என சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக சபாநாயகரின் அறிவிப்பை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் வியாழக்கிழமை (24) சபைக்கு அறிவித்தார்.
குறிப்பாக சபை அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போது பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய இந்தப் பணிகளை சுயாதீனமாக மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு சபாநாயகர், சபைக்குத் தலைமைதாங்கும் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கும் அல்லது உதவும் அதிகாரிகள் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமைய அரசியலமைப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற செயலாளர் குழுவுக்கு, சுயாதீனமாக அல்லது பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதைத் தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அமையலாம்.
அதனால் இதுபோன்று பாராளுமன்ற செயலாளர் குழுவில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக சபாநாயகரின் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM