13 குறித்த சஜித்தின் சரியான நிலைப்பாடு

Published By: Vishnu

20 Aug, 2023 | 08:26 PM
image

‘ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஆட்­சியில் ஒரு­மித்த நாட்­டுக்குள் 13ஆவது திருத்தச் சட்­டத்தின் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கலை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். ஒரு நாட்டின் ஒரு­மைப்­பாட்டை பேண தேசிய ஒற்­றுமை மிகவும் அவ­சி­ய­மாகும். சகல பிர­ஜை­களும் சம­மாக கரு­தப்­பட்டு ஒவ்­வொரு சமூ­கத்­துக்கும் சுய­ம­ரி­யா­தை­யுடன் வாழும் உரிமை வழங்­கப்­பட வேண்டும்’ என்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­துள்ளார்.

விழு­மியம் மிக்க சமூ­கத்­துக்­கான பிக்­குகள் ஆலோ­சனை பேர­வையின் இரண்டாம் கட்ட நிகழ்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலி மாவட்­டத்தை இலக்­காகக் கொண்டு காலி நக­ர­சபை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சஜித் பிரே­ம­தாச இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்­டத்­தினை அமுல்­ப­டுத்தும் விவ­கா­ரத்தில் தெற்கில் எதிர்ப்­ப­லைகள் தோன்­றி­யுள்­ளன. ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தாக அறி­வித்­த­தை­ய­டுத்து  நான்கு பெளத்த மாநா­யக்க  தேரர்­களும் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர்.

அத்­துடன்  பெளத்த தேரர்கள் ஒன்­றி­ணைந்து  பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­பா­கவும் ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்­தனர். இவ்­வா­றான எதிர்ப்­புக்கள்  மேலெ­ழுந்­த­தை­ய­டுத்து 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் இழு­பறி நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. தற்­போது  பொலிஸ்  அதி­கா­ர­மற்ற 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில்  யோசனை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெற்­றுள்ள   13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு  மீண்டும்  பாரா­ளு­மன்­றத்தை   ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க  நாடி உள்­ளமை தொடர்பில்  தற்­போது  விமர்­ச­னங்கள்  எழுந்­துள்­ளன.  13ஆவது திருத்தச் சட்­டத்தை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க  விவா­தப்­பொ­ரு­ளாக்­கி­யுள்­ள­மை­யினால் தெற்கில் எதிர்ப்­பலைகள்  உரு­வா­கி­யுள்­ள­தாக   எதிர்க்­கட்­சி­களின் தலை­வர்கள்   தற்­போது குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர்.  இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்­மையில்  கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.  நீண்ட அர­சியல் அனு­ப­வ­மிக்க ஜனா­தி­பதி  ரணில் விக்­கி­ர­ம­சிங்க   அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள   13ஆவது திருத்தச் சட்­டத்தை   விவா­தப்­பொ­ரு­ளாக்­கி­யுள்­ள­மை­யினால்  உறங்­கிக்­கொண்­டி­ருந்த  தென்­னி­லங்கை கடும் போக்கு சக்­திகள் மீண்டும்   உயிர்­பெற்­றுள்­ள­தா­கவும்  அர­சி­ய­ல­மைப்பில்   ஏற்­க­னவே   பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை ஆத­ர­வுடன் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்ள  13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு  மீண்டும்  பாரா­ளு­மன்ற  அனு­ம­தியை கோரி­யுள்­ளமை   அநா­வ­சி­ய­மான  விடயம் என்றும்  ரவூப் ஹக்கீம்  குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே­போன்றே சுதந்­திர மக்கள் சபையின் பிர­தி­நி­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸும்  மாகா­ண­சபைத்  தேர்­தலை நடத்­தாமல் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாருக்கு  அதி­கா­ரத்தை    வழங்­கப்­போ­கின்றார்.  அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்தை  அமுல்­ப­டுத்­து­வ­தாக   கூறிக்­கொண்டு அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு  எதிர்ப்­புக்­களை  ஜனா­தி­பதி  வலுப்­ப­டுத்தி   தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை  தோற்­று­விக்­கின்றார் என்று  கருத்து தெரி­வித்­துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பேச்­சா­ளரும்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான   எம்.ஏ. சுமந்­தி­ரனும்  கருத்து  கூறி­யுள்ளார். ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க   13ஐ அமுல்­ப­டுத்தப் போகின்றேன் எனக்­கூறி  வேண்­டு­மென்றே குட்­டையை  குழப்­பிக்­கொண்­டி­ருக்­கின்றார் என்று  சுமந்­திரன்   குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தப் போவ­தாக   ஜனா­தி­பதி   பகி­ரங்­க­மாக  தெரி­வித்­த­மையே தெற்கில்   எதிர்ப்­ப­லைகள் உரு­வா­வ­தற்கு காரணம் என்ற தோர­ணை­யி­லேயே  இவர்­க­ளது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. தற்­போ­தைய நிலையில்   இத்­த­கைய செயற்­பாடு தேவை­யற்­ற­தொன்று  என்­ப­தா­கவே  இவர்­க­ளது  கூற்­றுக்கள்  அமைந்­துள்­ளன.

உண்­மை­யி­லேயே  13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில்  நாட்­டி­லுள்ள  பிர­தான அர­சியல் கட்­சிகள்   ஓர் நிலைப்­பாட்­டுக்கு வரு­மே­யானால்  இத்­த­கைய  எதிர்ப்­புக்­களை   இல்­லா­தொ­ழிக்க முடியும்.  ஏனெனில்  எமது நாட்டின் வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால்  சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண்­ப­தற்கு   நட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­படும்  போது சிங்­கள இன­வாத  தரப்­புக்கள்  எதிர்ப்பு தெரி­விப்­பது என்­பது  வழ­மை­யா­ன­தொரு செயற்­பா­டா­கவே காணப்­ப­டு­கின்­றது.

பெளத்த சிங்­கள  பேரி­ன­வாத சக்­திகள்   சிறு­பான்­மை­யின மக்­களின் உரி­மை­களை  வழங்­கு­வதை  விரும்­பு­வ­தாக இல்லை.  அந்த மக்­க­ளுக்கு தீர்­வுகள் வழங்­கப்­ப­டு­மானால்  அது   சிங்­கள பெளத்த தேசிய வாதத்­துக்கு எதி­ரா­ன­தாக அமைந்­து­விடும் என்று  இந்த சக்­திகள்  எண்­ணி­வ­ரு­கின்­றன.

ஒரு­பக்கம்   சிங்­கள பெளத்த இன­வாத சக்­தி­களின் எதிர்ப்­பலை  காணப்­ப­டு­கின்ற நிலையில்,   சுய­நல அர­சியல் நோக்­கத்­துக்­காக  சிங்­கள  மக்­களை  தூண்­டி­விடும் செயல்­பாட்டில்   சில அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்டு வரு­கின்­ற­மை­யையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

தற்­போ­தைய நிலையில்  13ஆவது திருத்­தத்தை  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆத­ரித்து வரு­கின்­றது. 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும்  என்ற நிலைப்­பாட்டில்  பிர­தான எதிர்க்­கட்­சி­யான  ஐக்­கிய மக்கள் சக்தி  இருந்து வரு­கின்­றது. கடந்த  ஜன­வரி மாதம் நடை­பெற்ற  சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தில்  கருத்து தெரி­வித்த   எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச,  13ஆவது திருத்தம்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்  என்று   வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.   13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்த பாரா­ளு­மன்­றத்­திலும் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­படும் என  அவர் கூறி­யி­ருந்தார்.

தற்­போது தனது ஆட்­சியில் 13ஆவது திருத்தச் சட்­டத்தின்   அதி­கார பர­வ­லாக்­கலை   நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு   எதிர்­பார்த்­துள்­ள­தாக   அவர்  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். பெளத்த பிக்­குக்கள் மத்­தியில்  காலியில்  உரை­யாற்­றி­ய­போது  அவர் இதனை  திட்­ட­வட்­ட­மாக   தெரி­வித்­துள்­ளமை  பாராட்­டத்­தக்க செயற்­பா­டா­கவே  அமைந்­துள்­ளது.

ஏனெனில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யா­னது 13ஆவது திருத்தச்சட்ட விட­யத்தில்  ஒரே கொள்­கையை  கொண்­டுள்­ளது.  காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுடன்  13ஆவது திருத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று  எதிர்க்­கட்­சியின்  பிர­தம கொற­டாவும்   ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளுமன்ற உறுப்­பி­ன­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல  அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.

இதி­லி­ருந்து அந்­தக்­கட்­சியின் நிலைப்­பாடு  தெளி­வா­கின்­றது.  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தலை­மை­யி­லான  ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி 13ஆவது திருத்தச் சட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்டும் என்று கோரு­கின்­றது. ஆனாலும் பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்ற விட­யத்தில் அந்­தக்­கட்சி   உறு­தி­யாக இருக்­கின்­றது.

தற்­போது 13ஆவது திருத்த விட­யத்தில் முரண்­பா­டான நிலைப்­பாட்டில் பொது­ஜன பெர­மு­ன­கட்­சியே உள்­ளது.  அர­சாங்­கத்தின் பிர­தான அங்­கத்­து­வக்­கட்­சி­யான பொது­ஜன பெர­முன 13ஆவது திருத்த  விட­யத்தில் மாறு­பட்ட கொள்­கையை  கொண்­டி­ருக்­கின்­றது. அதன்   தலை­வரும்  முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக் ஷ  13ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டையில் தீர்­வு­ காண  தயார் என்று கடந்த நவம்பர் மாதம்  பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விடயம் தொடர்பில்  மஹிந்த ராஜ­பக் ஷவிடம் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர்  இதற்கு  இணங்­கி­யி­ருந்தார்.

அதற்கு முன்­னரும் இந்­தி­யா­விடமும் 13க்கு அப்பால் சென்று தீர்வு காண தயார் என்று மஹிந்த ராஜ­பக் ஷ   உறுதி வழங்­கி­யி­ருந்தார்.  ஆனால் தற்­போது அந்­தக்­கட்­சியின் செய­லாளர் சாகர காரி­ய­வசம் 13 குறித்து மாறு­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்றார். 13ஐ  அமுல்­ப­டுத்தும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இல்லை என்று அவர் கூறி­யுள்­ள­துடன்  அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தானால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்தலாம் என்றும்  யோசனை  முன்வைத்துள்ளார்.

13 தொடர்பில் ஜே.வி.பி.யும் முரண்பட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது.  ஆனாலும் தமிழ் மக்களுக்கு  13ஆவது திருத்தம் தீர்வை வழங்குமானால் அதனை எதிர்க்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது  13ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுன  தீர்க்கமான முடிவொன்றுக்கு வருமானால் அதனை  அமுல்படுத்துவது ஒன்றும் கடினமாக காரியமாக   அமையப்போவதில்லை.

ஏனெனில் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய  தேசியக்கட்சி , சஜித் பிரேமதாச  தலைமையிலான ஐக்கிய மக்கள்  சக்தி , மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  என்பன 13ஐ அமுல்படுத்துவதற்கு ஆதரவாக  உள்ளன. பொதுஜன பெரமுனவும்  இணக்கத்துக்கு  வருமானால் அதனை அமுல்படுத்துவதற்கான சூழல்  உருவாகும்.தெற்கின் எதிர்ப்புக்களையும் இல்லாது செய்ய முடியும் என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நினைவேந்தல்  நிகழ்வுகளுக்கு; பொதுக்கட்டமைப்பு அவசியம்

2023-09-24 15:36:06
news-image

சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான கோரிக்கை துரோ­கத்­த­ன­மான செயற்­பா­டல்ல

2023-09-17 20:50:18
news-image

இன, மத­வாத செயற்­பா­டு­க­ளுக்கு மக்கள் துணை­போகக்...

2023-08-27 16:55:29
news-image

13 குறித்த சஜித்தின் சரியான நிலைப்பாடு

2023-08-20 20:26:07
news-image

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த...

2023-07-30 19:07:21
news-image

யதார்த்தத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டிய...

2023-07-24 16:07:45
news-image

வாழைப்பழத்திற்கே இந்த விலையென்றால் ! மக்கள்...

2023-03-10 10:48:55
news-image

அவதானம் ! அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்...

2022-10-07 12:26:10
news-image

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம்...

2022-09-30 14:49:03
news-image

மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!!

2022-10-07 13:56:09
news-image

உலகிற்கு முன்னெச்சரிக்கையாகும் இலங்கை சிறுவர்களின் நிலை

2022-08-27 21:39:00
news-image

இளமையிலேயே கருகும் மொட்டுக்கள் ! யார்...

2022-08-25 13:42:28