மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பொழியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று:
தெற்கிலிருந்து 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 தொடக்கம் 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல்:
கொழும்பில் இருந்து காலி முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யும்.
மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையான பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளிலும், புத்தளம் முதல் மன்னார் வரையான காங்கேசன்துறை வரையான கரையோரப்பகுதிகளிலும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலியில் இருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM