ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை(16) மாலை மன்னாரில் வைத்து பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மூர்வீதி புதிய தெரு பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் போல் கிளிண்டன் மார்க் (வயது-28) என்ற ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் நேற்று புதன்கிழமை (16) மாலை மன்னார் பெரிய கடை பகுதியில் உள்ள மது விற்பனை நிலைய பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது உடமையில் இருந்து 100 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த நபரை விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM