நீர், மின் கட்டணங்களால் மக்களுக்கு பாரிய சுமை : தேசிய கொள்கை அவசியம் என்கிறது ஐக்கிய தேசிய கட்சி

Published By: Vishnu

16 Aug, 2023 | 07:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்.)

 

நீர் மற்றும் மின்சாரம் தொடர்பில் தேசிய கொள்கை தேவை. தேசிய கொள்கை இல்லாமையே நீர், மின் கட்டணங்களால் மக்களுக்கு பாரிய சுமை ஏற்பட்டு வருகிறது  என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீ, மற்றும் மின் கட்டண அதிகரிப்பு உடனடியாக தீர்க்க முடியுமான பிரச்சிளை அல்ல. உலக நாடுகளைப்போன்று இலங்கையிலும் நீர் மற்றும் மின்சாரத்துக்கு தேசிய கொள்கை அமைக்கப்பட வேண்டும். தேசிய கொள்கை இல்லாமையே இந்த இரண்டு முக்கிய துறைகளும் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு காரணமாகும். 

குறிப்பாக இலங்கையில் ஏனைய நாடுகளில் இருப்பதுபோல், குடி நீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நீர் தொடர்பில் தேசிய கொள்கை இருக்கவேண்டும். ஆனால் இன்று குடி நீர் தொடர்பில் நாங்கள் பின்பற்றிவருவது சிறுபிள்ளைத்தனமான முறைமையாகும்.

உதாரணமாக தெரிவிப்பதாக இருந்தால், குடிநீர் ஒரு லீட்டரை சுத்திகரித்து எடுப்பதற்கு 25ரூபா செலவிடப்படுவதாக இருந்தால், அதில்தான் நாட்டில் இருக்கும் மிருங்களை குளிப்பாட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்றே எமது வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதும் இந்த குடி நீரையாகும்.

ஆனால் உலக நாடுகள் குடிநீருக்கு பிரத்தியேகமான வழியை ஏற்படுத்தி இருக்கின்றன. உலக நாடுகளில் அங்கு வீடுகளுக்கு குடிநீருக்கு தனியான குழாய் வழியை ஏற்படுத்தி கொடுத்திருப்பது போன்று வேறு தேவைகளுக்காக தனியான நீர் குழாய் வழியொன்றை வழங்கி இருக்கிறது.

அதனால் இலங்கையில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது 2கோடி மக்களுக்கு மாத்திரமல்ல சுமார் 20 கோடிக்கும் அதிக பேருக்கு நீரை முகாமைத்துவம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. மக்களுக்கு குடிக்கவும் நீர்தேவை அதேநேரம் விவசாயம், கட்டுமான தேவை போன்ற ஏனைய அனைத்து தேவைகளுக்கும் இந்த நீரையே வழங்க வேண்டி இருக்கிறது. அதனால் இந்த விடயத்தில் நாங்கள் தோல்வியுற்ற தேசமாகும்.

எனவே இரண்டு வழி நீர் விநியோக நடவடிக்கை மேற்கொள்வதுடன் குடிநீருக்கும் மின்சாரத்துக்கும் என தேசிய கொள்கை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே இந்த துறைகளை வளர்ச்சியடையச் செய்ய முடியும். தற்போது மக்கள் எதிர்கொண்டுவரும் நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பு பிரச்சினைக்கான தீர்வை காண முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49