மலர்ந்துள்ள 2016 ஆம் ஆண்டு வேலை நிறுத்தங்கள் இல்லாத ஆண்டாக அமைய வேண்டுமாயின் தனியார் போக்குவரத்து துறையினரின் சகல கோரிக்கைகளுக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்மென தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த ஆண்டிலும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்த போராட்டங்கள் வெடிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சன சமூக நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் தனியார் போக்குவரத்து துறையினருக்கு சரியான கால அட்டவணை ஒன்று தயாரித்துக்கொடுக்கப்படவில்லை. அதனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமக்கான சரியான கால அட்டவணை தயாரித்துத் தரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க நூறு நாள் அரசாங்கத்தின் போது நாம் பஸ் கட்டணத்தையும் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருந்தமையும் நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்கு பிரதான காரணமானது.
ஆனால் தற்போது எமது கோரிக்கைகளுக்கு புறம்பாகவே நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது. கடந்த காலங்களில் போக்குவரத்து துறையில் அரசியல் தலையீடுகளும் ஊழலும் நிறைந்து காணப்படுவதாக தொடர்ந்து மஹிந்த அரசாங்கத்தை குற்றம் சாட்டிவந்த நல்லாட்சி அரசாங்கமும் அதனையே செய்கின்றது.
மேல்மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சரின் மகன் 7000 பஸ்கள் உள்ள மேல்மாகாண சபை போக்குவரத்து துறைக்கு தலைவராகவும், 3000 பஸ்களை கொண்டுள்ள மத்திய மாகாண சபைக்கு மத்திய மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சரின் மகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் உறவினர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்றும் அரச போக்குவரத்து துறையில் ஊழல் நிறைந்திருப்பதை அரசாங்கத்தினால் மறைக்க முடியாது. இந்த ஊழல் செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்கள் மஹிந்தவின் சகாக்கள் என்பதையும் அரசாங்கத்தினால் மறுப்பதற்கில்லை.
எனவே இவர்கள் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டுள்ள ரணில் மைத்திரி அரசாங்கத்தை எவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் என குறிப்பிட முடியும் என்பது எமக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த காலங்களில் ஜனாதிபதியால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குறிப்பிட்டு மேல்மாகாண சபையின் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டார். இதனை நல்லாட்சியாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
எனவே எம்முடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு சுதந்திர கட்சியையே சார்ந்துள்ளது ஏனெனில் சுதந்திர கட்சியே போக்குவரத்து அமைச்சை தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றது.
அதனால் எதிர்காலத்திலும் எமக்கான பதில்
தரப்படாவிட்டால் சுதந்திரக்கட்சியின் தலை வரான ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும்.
அதனிடையே அவருக்கு 2016 ஆம் ஆண்டை வேலை நிறுத்தங்கள் இல்லாத ஆண்டாக பாதுகாப்பதற்கும் முடியாது போகும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM