புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் குளமாகிப்போன கல்முனை, பிச்சிபிலாவடி வீதி - மக்கள் கவலை! 

16 Aug, 2023 | 01:34 PM
image

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வீதி செப்பனிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக கவலையோடு தெரிவிக்கின்றனர். 

வீதி செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்டதால்  அவ்விடம் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீதி புனரமைப்பு வேலைத்திட்ட பணிகள் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11)  அப்பகுதி அரசியல்வாதி ஒருவர் கொடுத்த  அழுத்தம் காரணமாக பணிகள் யாவும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அத்தோடு, குறித்த வீதி தோண்டப்பட்டவாறு  பாதியில் திருத்த வேலைகள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்த முடியாமல் தாம் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகஜர்களை அனுப்பியுள்ளனர்.

மேலும், கடந்த காலங்களில் கூட வீதியின் நிர்மாணப் பணிகள் தனி நபர் ஒருவரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, பிச்சிபிலாவடி வீதியின் புனரமைப்பு பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்குமாறு பிரதேசவாசிகள் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48