புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் குளமாகிப்போன கல்முனை, பிச்சிபிலாவடி வீதி - மக்கள் கவலை! 

16 Aug, 2023 | 01:34 PM
image

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வீதி செப்பனிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக கவலையோடு தெரிவிக்கின்றனர். 

வீதி செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்டதால்  அவ்விடம் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீதி புனரமைப்பு வேலைத்திட்ட பணிகள் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11)  அப்பகுதி அரசியல்வாதி ஒருவர் கொடுத்த  அழுத்தம் காரணமாக பணிகள் யாவும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அத்தோடு, குறித்த வீதி தோண்டப்பட்டவாறு  பாதியில் திருத்த வேலைகள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்த முடியாமல் தாம் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகஜர்களை அனுப்பியுள்ளனர்.

மேலும், கடந்த காலங்களில் கூட வீதியின் நிர்மாணப் பணிகள் தனி நபர் ஒருவரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, பிச்சிபிலாவடி வீதியின் புனரமைப்பு பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்குமாறு பிரதேசவாசிகள் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00