மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் நான்கு பேருக்கு எதிராக அட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள 10 விற்பனை நிலையங்கள் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டது.
விலைப்பட்டியல் காட்சியப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை வைத்திருந்தமை, கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, உத்தரவாதம் அளிக்கப்படாமல் விற்பனை செய்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதன்போது நான்கு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அட்டன் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரசாத லியனகே தலா 5000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி காமினி பெரேரா பணிப்புரையின் பேரிலேயே மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் இச் சுற்றுவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM