சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வருவதாக படக் குழுவினர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் கே. சந்துரு இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'ரிவால்வர் ரீட்டா'. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
இவருடன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை அண்டனி மேற்கொண்டிருக்கிறார்.
கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கதையின் நாயகியான கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினர் கொண்டாடினர்.
இதன் போது திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நடிகை ராதிகாவும் பங்கு பற்றி வாழ்த்தியிருந்தார்.
படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM