நுவரெலியா, ஹக்கல வனப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை காட்டுத்தீ பரவியுள்ளது.
குறித்த காட்டு தீயை நுவரேலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவினர் பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் ஹக்கல பூங்கா பாதுகாவலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
காட்டுத் தீயானது சுமார் ஐந்து மணித்தியால போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், மலையின் உச்சியில் ஏற்பட்ட தீ பாரியளவு ஏற்படாமல் இருப்பதற்காக பட்டிபொல வனப் பகுதியில் இருந்து வன பாதுகாப்பு அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.
காட்டுத்தீ காரணமாக சுமார் 15 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் கெப்பட்டிபொல பொலிஸ் அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM