சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் குழப்பம் விளைவித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராக மறுப்பு- மனோநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிப்பு

Published By: Rajeeban

15 Aug, 2023 | 12:08 PM
image

சிட்னியிலிருந்து மெல்பேர்னிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்துள்ளார்

முகமட் அரீவ் என்பவரே நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்துள்ளார்

நேற்று சிட்னியிலிருந்து புறப்பட்ட எம்எச்122 விமானத்தில் இவர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டு விமானம் மீண்டும் சிட்னி விமானநிலையத்திற்கு திரும்பியது. விமானபயணத்தின்போது ஆண்பயணியொருவர் குழப்பமான விதத்தில் செயற்பட்டு தன்னிடம் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்தார்  என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக போலி மிரட்டலை விடுத்தமை விமானத்தை சேதப்படுத்தியமை விமானபணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  பின்பற்றாமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்காக இவருக்கு பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்நிலையில் இன்று அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து சிறைச்சாலைக்கு வருவதற்கு மறுத்துள்ளார்.

இதன் பின்னர் விசாரணைகள் வீடியோ மூலம் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து நீதிமன்றத்திற்குதகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் நீதிமன்றத்திற்கு வருவதற்கான வாய்ப்பை நீதிமன்ற பணியாளர்கள் பல தடவை வழங்கிய போதிலும் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

இதேவேளை தனது கட்சிக்காரருக்கு உளநலசோதனைகளை நடத்துமாறு அவரின் சட்டத்தரணி கோரியுள்ளார்.

எனது கட்சிக்காரரால் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து புதன்கிழமை வரை நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று குறிப்பிட்ட நபர் விமானத்தில் சத்தமிட்டதை காண்பிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

விமானம் புறப்பட்டு அரைமணித்தியாலத்தின் குழப்பமடைந்த அவர் பயணிகளை தள்ளிவிடத்தொடங்கினார் என சக பயணியான வேலுதா பரம்பத்  தெரிவித்துள்ளார்.

அவர் மூர்க்கமானவராக மாறத்தொடங்கினார் போதிக்க தொடங்கினார் எனஅவர் தெரிவித்துள்ளார்.

அவர் கையில் எதனையோ கட்டியிருந்தார் ஒவ்வொருமுறையும்  அவர் கதைக்கும்போது நான் உயிரிழக்க அஞ்சவில்லை என்னிடம் ஏதோ இருக்கின்றது போல தெரிவிக்கின்றார் போல தோன்றியது இதன் காரணமாகவே  விமான பணியாளர்கள் அச்சமடைந்திருக்கவேண்டும் என வேலுதா பரம்பத் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03