வாய்ப்பை பயன்படுத்துமா தமிழ் கட்சிகள்?

Published By: Vishnu

13 Aug, 2023 | 06:09 PM
image

கபில்

தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண அர­சாங்கம் தயா­ரா­கவே இருக்­கி­றது என்றும் ஆனால் தமிழ்க் கட்­சிகள் மத்­தியில் தான் அதற்கு ஒற்­று­மை­யில்லை என்றும் அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க அண்­மையில் கருத்து ஒன்றை முன்­வைத்­தி­ருக்­கிறார்.

அர­சாங்கம் 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தை கோரி­யுள்ள நிலையில் தான் அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்த நிலைப்­பா­டு­களை முன்­வைக்­கு­மாறு, ஜனா­தி­ப­தியின் சார்பில் அவ­ரது செய­லாளர், பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்தார்.

இதன் அடிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் தங்­களின் நிலைப்­பாட்டை ஒரு­மித்து முன்­வைக்­க­வில்லை என்­பது உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்து இப்­போது ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணி­யாக செயற்­படும், புளொட்டும், ரெலோவும் அவ­ச­ர­ அவச­ர­மாக தங்­களின் திட்­டத்தை ஒன்­றாக முன்­வைத்­தி­ருக்­கின்­றன.

13ஆவது திருத்தச் சட்­டத்தை அப்­ப­டியே நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பது தான் அவர்­களின் நிலைப்­பாடு, கோரிக்கை.

தமிழரசுக் கட்சி இன்­னமும் தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­த­வில்லை. 13ஐ எதிர்க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இது தீர்­வுக்­கான தொடக்கப் புள்­ளியோ, தீர்வோ அல்ல என்று கடிதம் அனுப்­பி­யி­ருக்­கி­றது.  

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஏற்­கெ­னவே தனது யோச­னை­களை முன்­வைத்­தி­ருப்­பதால் மீண்டும் அதனை செய்­வாரா என்று தெரி­ய­வில்லை.

ஆக தமிழ்த் தேசிய நிலைப்­பாட்டில் உள்ள தரப்­புகள், 13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்க விட­யத்தில் தனித்­த­னி­யான நிலைப்­பாட்டில் இருக்­கின்­றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தவிர்ந்த ஏனைய கட்­சிகள் 13ஆவது திருத்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டை கொண்­டி­ருந்­தாலும், அதனை ஒரே குரலில் ஜனா­தி­ப­தி­யிடம் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தயா­ராக இல்லை.

அதற்கு முக்­கி­ய­மான காரணம், போட்டி, பூசல்­களும், தன்­மு­னைப்பு அர­சி­யலும் தான்.

இதனைச் சாட்­டாக வைத்துக் கொண்டு தான், தமிழ்க் கட்­சிகள் மத்­தியில் ஒற்­று­மை­யில்லை என்ற கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது நாட்டின் எதிர்­காலம் மற்றும் வளர்ச்­சிக்கு அவ­சியம் என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருந்­தாலும், அவர் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஏன் பாரா­ளு­மன்­றத்தின் கதவைத் தட்­டு­கிறார் என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

13 ஆவது திருத்­தச்­சட்ட அமு­லாக்கம் குறித்து கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, மாகாண சபைகள் சட்­டமும், 13ஆவது திருத்தச் சட்­டமும் அதி­யுயர் அதி­காரம் படைத்த அர­சி­ய­ல­மைப்பு சட்டம் என்றும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது நிறை­வேற்று அதி­கா­ரத்­தி­னதும் பாரா­ளு­மன்­றத்­தி­னதும் கடப்­பாடு என்றும் கூறி­யி­ருந்தார்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்றும் கடப்­பாடு தன்­வ­ச­முள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு உள்­ள­தாக கூறு­கின்ற ஜனா­தி­பதி ஏன் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மீண்டும் நாடா­ளு­மன்ற அனு­ம­தியை பெற முனை­கிறார் என்­பது விடை தெரி­யாத கேள்­வி­யாக இருக்­கி­றது.

ஜனா­தி­ப­திக்கோ அர­சாங்­கத்­துக்கோ இப்­போது தேவைப்­ப­டு­வது தமிழ்க்­கட்­சி­களின் ஒற்­று­மையோ ஒப்­பு­தலோ அல்ல.

சிங்­கள மக்­களின், அவர்­களின் பிர­தி­நி­தி­களின் ஒப்­புதல் தான் முக்­கி­ய­மா­னது. சிங்­கள மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான அர­சியல் கட்­சிகள் தங்­க­ளுக்­குள்­ளேயே இந்த விட­யத்தில் முரண்­ப­டு­கின்­றன.

13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தினால், தனது அர­சியல் எதிர்­காலம் பாதிக்­கப்­பட்டு விடக் கூடும் என்ற பயம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இருக்­கலாம்.  அதனால் பாரா­ளு­மன்­றத்­திடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்­தி­ருக்­கிறார்.

இங்கு 13 விட­யத்தில் எது நடந்­தாலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பிரச்­சினை இல்லை. பாரா­ளு­மன்­றத்தின் ஒப்­புதல் கிடைத்தால், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­துவார். அதனால் ஏற்­படக் கூடிய அர­சியல் விளை­வு­க­ளுக்கு அவர் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை.

பாரா­ளு­மன்றம் தான் ஒப்­புதல் கொடுத்­தது, மக்­களின் பிர­தி­நி­திகள் தான் ஒப்­புதல் கொடுத்­தனர் என நழுவிக் கொள்­ளலாம்.

அது­போல பாரா­ளு­மன்றம் நிரா­க­ரித்து விட்­டாலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை.

பாரா­ளு­மன்றம் அங்­கீ­க­ரிக்­க­வில்லை என்னால் ஒன்றும் செய்ய முடி­யா­தென கையை விரித்து விட்டுப் போகலாம்.

அப்­போது இந்­தி­யா­வி­னாலும் ஒன்றும் செய்ய முடி­யாது தமிழ்க் கட்­சி­க­ளாலும் ஒன்றும் செய்ய முடி­யாது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விளை­யாட்டை சாதா­ர­ண­மாகத் தொடங்கி விட­வில்லை.  13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு தெற்கில் இன­வா­திகள் மத்­தியில் காணப்­படும் எதிர்ப்பு எந்­த­ள­வுக்குப் பல­மா­னது என்று அவ­ருக்கு நன்­றா­கவே தெரியும்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் அவ­சி­யத்தை அவர் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தாலும், அதன் அமு­லாக்க விட­யத்தில் அவர் ஆறப் போடும் உத்­தி­யையே கடைப்­பி­டிக்க விரும்­பு­கிறார்.

கட்­டம்­கட்­ட­மாக அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்தே பேசி­யி­ருக்­கிறார்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் எதிர்­காலம் இப்­போது கேள்­விக்­கு­றி­யாக மாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் விட­யத்தில் தமிழ்க்­கட்­சிகள் ஒற்­று­மை­யாக இல்லை என்று கூறிக் கொள்ளும் அர­சாங்கம், தங்­க­ளுக்குள் ஒற்­று­மை­யாக இருக்­கி­றதா என்ற கேள்வி இருக்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க 13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று கூறி­னாலும், அவரை ஆட்­சிக்கு கொண்டு வந்த- இன்­றைக்கும் அவ­ரது அர­சாங்கம் செயற்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக இருக்­கின்ற பொது­ஜன பெர­மு­னவே அதனை ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இல்லை.

பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பலர், மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்­பாடு என்ன என்று கேள்வி எழுப்­பி­னார்கள்.

11 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் 13 பிளஸ் என்று கூறி­யவர் அவர். இப்­போது, 13 குறித்த அவ­ரது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வதை தவிர்க்­கிறார். ஆனால் அமைச்சர் பிர­சன்ன ரண­துங்­கவோ அவர் இன்­னமும் 13 பிளஸ் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருப்­ப­தாக கூறு­கிறார்.

ஆனால் 13 பிளஸில் என்ன இருக்­கி­றது, என்ன இல்லை என்று மஹிந்த ராஜபக்ஷ ஒரு­போதும் கூறி­ய­தில்லை.

சிங்­கள மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சிகள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு நிலைப்­பாட்டில் இருக்­கின்­றன.

இவ்­வாறு முரண்­பட்டு நிற்­கின்ற நிலையில் 13 குறித்து மாத்­தி­ர­மல்ல, தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து ஒரு­மித்த கருத்தை ஒரு­போதும் ஏற்­ப­டுத்த முடி­யாது.

தமி­ழர்­களின் பிரச்­சி­னையை தீர்க்கும் அதி­காரப் பகிர்வு கட்­ட­மைப்பு விட­யத்தில் சிங்­களக் கட்­சிகள் ஒரு­மித்த நிலைப்­பாட்டை எடுக்க முடி­யாத நிலையில், அர­சாங்கம் தமிழ்க் கட்­சிகள் மத்­தியில் ஒற்­று­மை­யில்லை என்று குற்­றம்­சாட்­டு­கி­றது.

13 விட­யத்தில் அர­சாங்கம் எடுக்­கின்ற எந்­த­வொரு நகர்­விலும் தமி­ழர்கள் பங்­கா­ளி­க­ளாக முடி­யாது. ஏனென்றால், தமிழர் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு என்று இது உரு­வாக்­கப்­பட்­டாலும், அது தமி­ழர்­களின் நிலைப்­பாட்டை அறிந்து உரு­வாக்­கப்­பட்­டதும் அல்ல, தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வை வழங்­கு­வ­தா­கவும் அது அமை­ய­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வது அர­சாங்­கத்தின் கட­மையே தவிர தமிழ்க் கட்­சி­களின் கடப்­பாடு அல்ல. இவ்­வா­றி­ருக்க, தமிழ்க் கட்­சிகள் ஒன்­று­ப­ட­வில்லை என்று கூறித் தப்­பிக்க பார்க்­கி­றது அர­சாங்கம்.

இந்தக் கட்­டத்தில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வர வேண்டும்.

13 ஐ மீண்டும் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வந்து பிய்த்து உத­று­கின்ற அர­சாங்­கத்தின் போக்கை அவர்கள் சாத­க­மாக்கிக் கொள்ள வேண்டும்.

தமி­ழ­ருக்கு வழங்­கப்­படும் அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்வு மீளப்­பெற முடி­யா­த­தாக இருக்க வேண்டும் என்­பதை உறு­தி­யாக வலி­யு­றுத்தக் கிடைத்­துள்ள சந்­தர்ப்பம் இது.

36 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி கோரி­யது போன்ற நிலை எதிர்­கா­லத்தில் தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்­வாக முன்­வைக்­கப்­படும் அதி­காரப் பகிர்வு மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் நிலை- அதி­கார மீள்­ப­றிப்பு இடம்­பெறக் கூடாது என்­பதை வலி­யு­றுத்த இந்த விடயம் வாய்ப்­பாக அமையும்.

மீளப்­பெற முடி­யாத சமஷ்டி முறை­யி­லான அதி­காரப் பகிர்வு மீதான கோரிக்­கையை இன்னும் வலு­வாக முன்­வைக்க தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வர வேண்டும்.

13 ஐ மீண்டும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அரசாங்கத்தின் போக்கை அவர்கள் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழருக்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மீளப்பெற முடியாததாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது.

36 ஆண்டுகளுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தின் அனுமதி கோரியது போன்ற நிலை எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்படும் அதிகாரப் பகிர்வு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் நிலை- அதிகார மீள்பறிப்பு இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்த இந்த விடயம் வாய்ப்பாக அமையும்.

மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு மீதான கோரிக்கையை இன்னும் வலுவாக முன்வைக்க வேண்டிய தருணம் இது. தமிழ்க் கட்சிகள் அதற்கு தயாராக உள்ளனவா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 03:57:33
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56