நொண்டிக் குதி­ரைக்கு சறுக்­கிய சாட்டு

Published By: Vishnu

13 Aug, 2023 | 04:31 PM
image

சத்­ரியன்

மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கு­வது நாட்டில் அச்­ச­மான சூழலை உரு­வாக்கும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி அண்­மையில் கருத்து ஒன்றை முன்­வைத்­தி­ருக்­கிறார்.

அவ­ரது இந்தக் கருத்து வேறு­பட்ட கண்­ணோட்­டத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது. இலங்­கையில், 13 ஆவது திருத்தச் சட்­டத்தை எதிர்ப்­ப­வர்­களில் பல ரகத்­தினர் உள்­ளனர்.

ஒரு தரப்­பினர் அது இந்­தியா முன்­வைத்­தது என்­பதால் எதிர்க்­கின்­றனர். இன்­னொரு தரப்­பினர், 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் பகி­ரப்­படும் அதி­கா­ரங்­களைக் கொண்டு மாகா­ணங்கள், குறிப்­பாக வடக்கு, கிழக்கு தனி­நா­டாகி விடும் என்ற அச்­சத்­தினால் எதிர்க்­கின்­றனர்.

மற்­றொரு தரப்­பினர், காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வதால் எதிர்க்­கின்­றனர்.

இவர்­களை தவிர இன்­னொரு தரப்­பினர், தமி­ழர்­க­ளுக்கு எந்த வகை­யிலும் அதி­காரம் வழங்­கப்­படக் கூடாது என்­ப­தற்­காக, 13ஐ எதிர்க்­கின்­றனர்.

இப்­படிப் பல வகை­யினர் இருக்­கின்ற நிலையில் இன்­றைக்கு பேசு­பொ­ரு­ளான விட­ய­மாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது பொலிஸ் அதி­காரம் என்ற விடயம்.

மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் இருக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கி­றது தமிழ்த் தரப்பு. அதா­வது 13ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும், அதி­லுள்ள அதி­கா­ரங்­களை மத்­திய அரசு மாகா­ணங்­க­ளுக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தரப்பு கோரு­கி­றது.

ஆனால்,  அர­சாங்­கமோ பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது. அவ்­வாறு வழங்­கு­வ­தானால், எல்லாக் கட்­சி­களும் ஒப்­புதல் அளிக்க வேண்டும் என்­கி­றது.

இங்கு எல்லாக் கட்­சி­களும் என்­பது. பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற கட்­சிகள் மற்றும் அவற்றின் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு தேவை என்­ப­தையே குறிக்­கி­றது. பாரா­ளு­மன்றம் ஏற்றுக் கொண்டால் பொலிஸ் அதி­கா­ரத்தை பகி­ரலாம் என்­பது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நிலைப்­பாடு.

அவர் ஆட்­சிக்கு வந்த பின்னர் எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும், - சிக்­க­லான பிரச்­சி­னை­களை பாரா­ளு­மன்­றத்­திடம் விட்டு - முடி­வெ­டுக்க வைக்­கிறார்.

இது ஜன­நா­ய­கத்தைப் பிர­தி­ப­லிப்­ப­தாக இருந்­தாலும், மற்­றொரு புறத்தில், சிக்­க­லா­னது.

நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்ட அவர், அதனைப் பயன்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தடையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கிறார் என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

தமிழ்ப் பேசும் சமூ­கத்தில் உள்ள ஒரு பகு­தி­யினர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிக்­கப்­ப­டு­வதை ஆத­ரிக்­க­வில்லை.

காரணம்,  பாரா­ளு­மன்­றத்தில் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டாலும், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யினால் அதனை தடுக்க முடியும் என்ற நம்­பிக்கை பல­ருக்கு காணப்­பட்­டது.

பெரும்­பாலும் முஸ்­லிம்கள் நிறை­வேற்று அதி­காரம் ஒழிக்­கப்­ப­டு­வதை ஆத­ரிக்­க­வில்லை.

ஆனால்,  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, தன்­னிடம் உள்ள அதி­கா­ரங்­களைக் கொண்டு 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதை விட்டு விட்டு, அதனை பாரா­ளு­மன்­றத்­துக்குக் கொண்டு செல்லப் போகிறார்.

அங்கு எடுக்­கப்­படும் முடிவு அதி­காரப் பகிர்வுக் கோரிக்­கைக்கு, அதா­வது 13ஐ முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சாத­க­மா­ன­தாக அமை­யுமா என்ற சந்­தே­கங்கள் உள்­ளன.

அதற்கு முக்­கி­ய­மான கார­ணங்­களில் ஒன்று, பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­படக் கூடாது என்ற நிலைப்­பாடு தான்.

பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கினால், தனி­நாட்டை உரு­வாக்கி விடு­வார்கள் என்ற அச்சம் சிங்­கள மக்கள் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பிரித்­தா­னியா, கனடா போன்ற நாடுகள் பொலிஸ் அதி­கா­ரங்­களை மாந­கர சபை­க­ளுக்குக் கூட வழங்­கி­யி­ருக்­கின்­றன. அந்த நாடு­களில் எந்த ஆயுதக் கிளர்ச்­சியும் நடக்­க­வில்லை. இந்­தி­யாவில் மாநி­லங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால், மாநிலப் பொலிஸார் ஒரு­போதும், தனி­நாட்டுப் போராட்­டங்­க­ளுக்கு துணை நிற்­க­வில்லை.

பஞ்­சாபில், காலிஸ்தான் பிரி­வி­னை­வாதப் போராட்டம் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த போது, அதனை நசுக்­கி­யது, மாநில பொலிஸ் தான்.

கே.பி.எஸ்.கில் என்ற சீக்­கிய பொலிஸ் அதி­கா­ரியின் தலை­மையில் தான், அந்த தனி­நாடு கோரிய போராட்டம் நசுக்­கப்­பட்­டது.

எனவே, மாகாண பொலிஸ் அந்­தந்த முத­ல­மைச்­சர்­களின் கீழ் செயற்­படும் என்­பதால், பிரி­வி­னை­வா­தத்­துக்கு துணை­போகும் என்­பது வீண் பிரமை.

வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, முன்­வைத்­தி­ருக்­கின்ற கார­ணமும் அவ்­வா­றான ஒன்று தான்.

அவர் இந்தச் சந்­தர்ப்­பத்தில், பொலிஸார் மீதான குற்­றச்­சாட்­டுகள் குறித்தும் பேசி­யி­ருக்­கிறார்.

தற்­போ­துள்ள பொலிஸ் கட்­ட­மைப்பின் மீது கூறப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டு­களை, அவர் பொலிஸ் அதி­காரப் பகிர்­வுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்த முற்­பட்­டி­ருக்­கிறார்.

இப்­போது பொலிஸ் அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­ப­டு­கின்ற நிலையில், ஒன்­பது மாகா­ணங்­க­ளிடம் வெவ்­வேறு கட்­சி­களைச் சேர்ந்த முத­ல­மைச்­சர்­களின் கீழ் ஒன்­பது பொலிஸ் கட்­ட­மைப்­புகள் இருந்தால், நாட்டின் நிலைமை என்­ன­வாகும் என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

தற்­போ­துள்ள பொலிஸ் கட்­ட­மைப்பு அர­சி­யல்­மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­வதை காரணம் காட்டி, - அவர் மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்த முனை­கிறார்.

பொலிஸ் கட்­ட­மைப்பை அர­சியல் மயப்­ப­டுத்­தி­யது ஆட்­சி­யா­ளர்­களின் தவறு. இதற்கு முன்­பி­ருந்த ஆட்­சி­யா­ளர்கள் அதற்கு நேரடிப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள்.

அவர்கள் ஆட்­சியில் இருந்த போது செய்த தவ­று­க­ளுக்­காக நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட போது, அவர்­களைக் காப்­பா­று­வ­தற்­காக ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக நீதி­மன்றப் படி­யே­றி­யவர் தான் அலி சப்ரி.

அவர் பொலிஸ் கட்­ட­மைப்பு அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­தற்கு அரு­க­தை­யுள்­ள­வரா என்ற கேள்­வியும் இருக்­கி­றது.

முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை விட்டு விடலாம். அலி சப்ரி அங்கம் வகிக்கும் தற்­போ­தைய அர­சாங்கம் எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது?

அதுவும் பொலிஸ் கட்­ட­மைப்பை அர­சியல் மயப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சாங்­கத்தைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக பொலிஸார் முன்­னெ­டுக்­கின்ற பல நட­வ­டிக்­கைகள் கடு­மை­யான விமர்­ச­னங்கள், எதிர்ப்­புகள், கண்­ட­னங்­களை எதிர்­கொள்ளும் நிலைக்கு தள்­ளி­யுள்­ளது.

உள்­நாட்டில் மாத்­தி­ர­மன்றி ,ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்­கை­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­களின் அறிக்­கை­களும் கூட இதனைக் குற்­றச்­சாட்­டு­க­ளாக முன்­வைக்­கின்­றன.

பொலிஸை அர­சியல் மயப்­ப­டுத்தி வைத்துக் கொண்டு அதையே சாட்­டாக வைத்துக் கொண்டு மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்க கூடாது என்று வாதி­டு­வது மோச­மான செயல்.

பொலிஸ் சுயா­தீ­ன­மா­கவும், அர­சி­ய­ல­மைப்பின் படியும் செயற்­ப­டு­வதை உறுதி செய்­வது அர­சாங்­கத்தின் கடப்­பாடு.

அதனை முன்­னைய அர­சாங்­கத்தைப் போலவே தற்­போ­தைய அர­சாங்­கமும் செயற்­ப­டுத்­த­வில்லை.

மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை மறுப்­ப­தற்கு ஒரு காரணம் தேவை என்­ப­தற்­காகத் தான், இந்த அர­சி­யல்­மய நீக்கம் முன்­னெ­டுக்­கப்­ப­டாமல் இருக்­கி­றதோ என்ற சந்­தேகம், அலி சப்­ரியின் கருத்தில் இருந்து எழு­கி­றது.

மாகாண பொலிஸ் ஒவ்­வொரு முத­ல­மைச்­சர்­களின் கீழும் செயற்­படும் போது, அர­சியல் மயப்­ப­டுத்­தப்­படும் என்று முன்­கூட்­டியே கணிப்­பது தவ­றா­னது. ஒவ்­வொரு மாகா­ணமும் அதனை வினைத்­தி­ற­னாக செயற்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது என்ற கோணத்­திலும் சிந்­திக்­கலாம்.

அவ்­வாறு ஆரோக்­கி­ய­மான முறையில் சிந்­திப்­ப­தற்கு அலி சப்­ரியோ அல்­லது மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கு­வதை மறுப்­ப­வர்­களோ தயா­ராக இல்லை. ஏனென்றால் அவர்கள் முன்­கூட்­டிய தீர்­மா­னத்தை எடுத்து விட்­டார்கள். அது தான் சரி­யா­னது என்று தீர்­மா­னித்து விட்­டார்கள்.

அதுவே சரி என்ற நிலைப்­பாட்டை மாற்றிக் கொள்­ள­மாட்­டார்கள். இவ்­வா­றா­ன­வர்கள் மத்­தியில் மா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை மறுப்­ப­தற்கு ஒரு காரணம் தேவை என்­ப­தற்­காகத் தான், இந்த அரசியல்மய நீக்கம் முன்னெடுக்கப்படாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம், அலி சப்ரியின் கருத்தில் இருந்து எழுகிறது.

மாகாண பொலிஸ் ஒவ்வொரு முதலமைச்சர்களின் கீழும் செயற்படும் போது, அரசியல் மயப்படுத்தப்படும் என்று முன்கூட்டியே கணிப்பது தவறானது. ஒவ்வொரு மாகாணமும் அதனை வினைத்திறனாக செயற்படுத்த வாய்ப்புள்ளது என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.

அவ்வாறு ஆரோக்கியமான முறையில் சிந்திப்பதற்கு அலி சப்ரியோ அல்லது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதை மறுப்பவர்களோ தயாராக இல்லை.

ஏனென்றால் அவர்கள் முன்கூட்டிய தீர்மானத்தை எடுத்து விட்டார்கள். அது தான் சரியானது என்று தீர்மானித்து விட்டார்கள். அதுவே சரி என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறானவர்கள் மத்தியில் இருந்து மாகாணங் களுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொள்வது சாத்தியமாகப் போகிறதா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 03:57:33
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56