(கனகராசா சரவணன்)
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று சனிக்கிழமை (12) இரவு குளத்தில் மீன்படிக்க சென்று வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
அப்போது குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், அவர் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சடலத்தின் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM