(கனகராசா சரவணன்)
திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், கடலுக்கு சென்றவர் இன்று (12) பகல் வரை கரைக்கு திரும்பவில்லை.
அவரின் கையடக்க கைப்பேசிக்கு தொடர்பு ஏற்படுத்தியபோதும் அது இயங்காததையிட்டு அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் லங்காபட்டுண கடற்படை முகாமில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் கடற்படையினரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் தம்மிடம் தேடுதலுக்கான படகுகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த மீனவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM