கடலுக்குச் சென்று காணாமல் போனவரை தேடி தருமாறு தாய், மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!

Published By: Digital Desk 3

12 Aug, 2023 | 04:28 PM
image

கடந்த 4 ஆம் திகதி  கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும்  அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின்  தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில்  நடாத்திய  ஊடக சந்திப்பின்போதே  அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 4 ஆம் திகதி கடலுக்கென சென்றவர்  மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும்,  அவரை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கி பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில்  அவரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள தாயார்  மேலும் அவருடன் சென்ற ஒருவர்  கஞ்சா கடத்தல் தொடர்பில் கைதாகி இருப்பதுவும்  தெரிவித்துள்ளார்.

தனது மகன் வீடு திரும்பாத நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்,பொலிஸாரும் அவரை  தேடி வருவதாகவும்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தாயார்,   அவரை மீட்டுத் தருமாறும், கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு காணாமல் போனவர் கஞ்சா கடத்தலிற்காக இந்தியா வந்தவேளை தவறியுள்ளதாக தெரிவித்ததாகவும் அன்றிலிருந்து அவரது தொலைபேசி செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24